யூனியன் பிரதேசங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள்
யூனியன் பிரதேசங்களில் போக்குவரத்துத் தொடர்பு, தூய்மையான பசுமை எரிசக்தி, கழிவுப் பொருட்கள் நிர்வாகம், மின்சாரம், சுற்றுலா, அடிப்படைக் கட்டமைப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்கு உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக யூனியன் பிரதேசங்களில் சுற்றுலாவும், இதர பொருளாதார செயல்பாடுகளும் ஊக்கம் பெற்றுள்ளன. சிவில் விமானப் போக்குவரத்திலும் இதர அடிப்படை கட்டமைப்பிலும் மேம்பாடு காணப்பட்டுள்ளது.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட யூனியன் பிரதேசங்களில் நுகர்வோருக்கு சிறந்த சேவை வழங்கவும், மின்சார விநியோகத்தில் செயல்திறனை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நல்ல நிர்வாகம் மற்றும், மேம்பாட்டிற்கு முன்மாதிரியாகவும், பொருளாதார வளத்தின் புதிய ஊக்குவிப்பாளர்களாகவும் யூனியன் பிரதேசங்களை மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
தீவுகளாக இருக்கும் யூனியன் பிரதேசங்களை உலகளாவிய சுற்றுலா மையங்களாக முழுமையாக மாற்றுவதற்கான பார்வை உள்ளது. யூனியன் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும். தரமான சுகாதார கவனிப்பை அனைவருக்கும் உறுதி செய்யும் வகையில் சுகாதார அடிப்படை கட்டமைப்பு விரிவாக்கப்படும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பசுமை எரிசக்தி மேம்படுத்தப்படும். இது தொடர்ச்சியான நடைமுறையாகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்தியானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
கருத்துகள்