நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திலுள்ள ராஜ்பவனில் தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாடு துவங்கியது.
வளர்ந்து வரும் புதிய உலக அரங்கில் இந்தியாவின் பங்கு , மற்றும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும் என்பது உள்ளிட்ட தலைப்புகளின் படி கருத்தரங்கம் நடந்தது. மாநாட்டைத் துவங்கி வைத்து தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும் போது இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்சினைகளிருந்து வந்தன, தற்போது அங்கு அமைதி நிலை திரும்பியுள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு சுதந்திரமாக வந்து செல்லத் தொடங்கியுள்ளார்கள். அதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகளிருந்தன.மாவோயிஸ்டுகளின் பிரச்சினை அதிகமாக இருந்தது. ஆனால் அரசின் துரித நடவடிக்கையால் தற்போது மாவோயிஸ்ட்கள் பிரச்சினை வெகுவாகக் குறைந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டைத் துண்டாடும் சக்திகளுக்கு அரசிடம் கருணை கிடையாது. இது துல்லிய தாக்குதலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே குடும்பம் இங்கு எந்தவித சமூக ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது. இந்தியாவில் 2047 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஈடுபட வேண்டும். இந்திய அளவில் 70 சதவீத மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களையே படித்து வருகிறார்கள். மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் போது திறமையானவர்களாக இருக்க வேண்டும். இந்தியாவை முதன்மை நாடாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி.
கருத்துகள்