தமிழகத்தின் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என திமுக மற்றும் தோழமைக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் அறிவிப்பு.
தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் புதுவருட தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை
என திமுக மற்றும் தோழமைக் கட்சிகளைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் அறிவிப்பு. தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த மசோதாக்களுக்கும் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிப்பதில்லையெனக் கூறப்படும் நிலையில்.
நீட் தேர்வு விலக்கு உட்பட பத்துக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று கூறப்படும் நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் திமுக உறுப்பினர்கள், தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்திய நிலையில் தற்போது ஆளுநர் மாளிகை இராஜ் பவனில் இன்று மாலை ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்படவிருந்தது. ஆளுநர் அளிக்கும் இந்த விருந்தில் பங்கேற்கப் போவது இல்லை என முன்னரே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக ஆகிய கட்சிகள் சார்பில் அறிவித்ததற்கிடையே சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம் ஆகியோர் சந்தித்தனர்.
தற்போது ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ராஜ்பவனில் ஆளுநரைச் சந்தித்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு இத்தகவலைத் தெரிவித்தார். தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் நேரில் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு சட்டசபையின் மாண்பை சீர்குளைக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவதாகவும். மக்கள் உணர்வுகளை மதிக்காத வகையில் செயல்பட்டு வருவதாலேயே தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அமைச்சர் மேலும் கூறினார். ஆளுநரின் தேநீர் விருந்து மற்றும் மஹாகவி பாரதியார் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் உள்ளிட்ட யாரும் பங்கேற்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்., திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை என முன்னர் அறிவித் நிலையில், தற்போது திமுகவும் தன் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. ஆளுநரைச் சந்தித்த போது நிலுவையிலுள்ள நீட் விலக்கு தீர்மானத்திற்கு உடனே ஒப்புதல் தரவும் நேரில் வலியுறுத்தியதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இருப்பினும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக ஆளுநர் எந்த உறுதியையும் தரவில்லையென்றும் கூறினார். 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி. மாதம் திமுக அரசு இரண்டாவது முறையாக நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்தது
கருத்துகள்