கர்நாடகா மாநிலத்தில் அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக புகார் கூறிய ஒப்பந்ததாரரின் தற்கொலை வழக்கில் அமைச்சர் ஈஸ்வரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
பெலகாவி ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் (வயது 40) ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தன்னிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதால் ஈஸ்வரப்பா அவர் மீது வழக்குத் தொடுத்த நிலையில், ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்ட நிலையில்
இவ் விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ஈஸ்வரப்பாவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி, மஜத, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு போராட்டம் நடத்தி ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனுவை அளித்ததையடுத்து உடுப்பி காவல்துறையினர் தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோர் மீது இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்துக்குச் சென்று வழிபாடு நடத்திய பின்னர் இரவு 8.30 மணியளவில் பெங்களூருவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் வீட்டுக்குச் சென்ற ஈஸ்வரப்பா தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அப்போது பேசிய ஈஸ்வரப்பா, ''எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்புமில்லை. நான் நிரபராதி என நிரூபித்த பிறகு மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்பேன். இந்த வேளையில் எனக்கு ஆதரவாக இருந்த முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்''எனத் தெரிவித்தார்..
இதனிடையே ஈஸ்வரப்பாவைக் கைது செய்யக்கோரி முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சித்தராமையா,‘சந்தோஷ் பாட்டீல் அனுப்பிய குறுஞ்செய்தி மூலம் அவரது மரணத்துக்கு ஈஸ்வரப்பாவே காரணம் என்பது உறுதியாகியுள்ளது. அதன் காரணமாகவே அவர் மீது வழக்கு போடப்பட்டு, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் உடனடியாக ஈஸ்வரப்பாவைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். அவரை கைது செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்'' என்றார்.
இதில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் வரை பல தகவல்கள் உலாவி வருகிறது அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் ஒப்பந்ததாரர் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட கர்நாடகா மாநில பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த கே.எஸ். ஈஸ்வரப்பா தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் சமர்ப்பித்தார்.
அப்போது அவரோடு உடன் இருந்தவர்களில் ஒருவர் சட்ட மன்ற உறுப்பினர் ரமேஷ் ஜார்கிஹோலி. இவர் சில மாதங்களுக்கு முன்பு சிடி பிரச்சினையில் சிக்கி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இவர் என்ன சொல்கிறார்னா "ஜார்கிஹோலியையும், ஈஸ்வரப்பாவையும் சிக்கலில் மாட்டிவிட்ட சதிகார டீம் ஒன்றே என்கிறார்"..
இது கர்நாடகா பாஜக வில் அரசியல் விளையாட்டு இந்த நிலையில் உள்ளது
கருத்துகள்