உக்ரேனின் தெற்கு துறைமுக நகரம் மரியபோலை ரஷ்யாவின் படைகள் கைப்பற்றியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்தார்.
உக்ரேனின் தெற்கு துறைமுக நகரம் மரியபோலை ரஷ்யாவின் படைகள் கைப்பற்றியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்தார். மரியபோல் தெற்கு பகுதியிலுள்ள முக்கியமான துறைமுக மையத்தைக் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பது ரஷ்யப் படைகளுக்குக் கிடைத்துள்ள வெற்றி,” என்று ஷோய்குவுடன் சேர்ந்து தொலைக்காட்சி வழி உரையாற்றிய திரு புட்டின் குறிப்பிட்டார்.
இரண்டு மாத காலமாகப் படையெடுப்பில் ரஷ்யா கைப்பற்றியுள்ள பெரிய உக்ரேனிய நகரம் மரியபோல் ஆகும் டோன்பாஸ் வட்டாரத்தில் ரஷ்யா தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த இந்த வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது.
“மரியபோல் விடுவிக்கப்பட்டு விட்டது. எஞ்சிய உக்ரேனியப் படைகள் அஸோவ்ஸ்தால் ஆலைப் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளன,” என்று திரு ஷோய்கு கூறினார்.
முன்னதாக, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரேனியப் படையினர் இருப்பதாகக் கூறப்படும் எஃகு ஆலைப் பகுதிக்குள் ரஷ்யப் படையினர் அதிரடியாகப் புகுவது தேவையற்றது என்று திரு புட்டின் கூறிவிடவே. ஆனாலும், அங்கிருந்து யாரும் தப்பிக்க முடியாதபடி அந்தப் பகுதியை அடைத்து விடுமாறும் உத்தரவிட்டுள்ள நிலையில், மரியபோல் நகரிலிருந்து நான்கு பேருந்துகள் மக்களை ஏற்றிக்கொண்டு வெளியேறியதாக உக்ரேனியத் துணைப் பிரதமர் ஐரினா வெரெஸ்சுக் தெரிவித்தார். அங்கிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்களை வெளியேற்றும் பணி தொடருமென்றும் கூறினார்.
கியவ் வட்டாரத்திலுள்ள பிண அறைகளில் 1,020 அப்பாவிகளின் உடல்கள்லிருப்பதாக உக்ரேனிய அதிகாரி தெரிவித்துள்ளார். கண்டம்விட்டுக் கண்டம் பாய்ந்து, அணு ஆயுதத்தைச் சுமந்து சென்று தாக்கும் ஏவுகணையை ரஷ்யா சோதித்துப் பார்த்துள்ளது.
அதை ‘உலகிலேயே ஆகச் சிறந்தது’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.
“இந்தத் தனிச்சிறப்பு மிக்க ஆயுதம் நமது படைகளின் போர்த்திறத்தை வலுப்படுத்தும்; புற அச்சுறுத்தல்களிலிருந்து ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்; ஆக்ரோஷமாகப் பேசி நம்மை அச்சுறுத்த முயலும் எதிரிகளை இருமுறை யோசிக்க வைக்கும்,” என்று தொலைக்காட்சி வழியாகப் பேசிய அதிபர் புட்டின்,
இந்தப் புதிய ‘சர்மாத்’ ஏவுகணையில் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆயுதங்களை ரஷ்யா பொருத்தக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கருத்துகள்