முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல்லக்கு சுமப்பது மத சடங்கு மத சுதந்திரம் தலைவர்கள் முறையீடு விரைவில் முதல்வர் முடிவு செய்வார் அமைச்சர் பதில்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில்

கும்பாபிஷேகம் மே மாதம்  8 ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் யாகசாலை நேற்றுத் துவங்கி முதல் கால பூஜை நடந்ததில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆலயத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு தருமபுர ஆதீனம் சார்பில் கட்டளைத் தம்பிரான் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு அருகே உள்ள கட்டளை மடத்தில் தங்கியிருந்த தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து இரு சன்னிதானங்களும் யாகசாலை பூர்ணாஹூதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 அப்போது பூர்ணாகுதி நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது. தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் இரண்டு ஆதீன மடாதிபதிகளின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது    .  பல்லாக்கு தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று சட்ட மன்ற பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் நேரமில்லா நேரத்தில் பேசியவர், பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லாக்கு தூக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும்.


ஆதீனத்தில் வசிக்கும் 72 பேரும் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குவதாக கூறுகின்றனர். தோளில் தூக்கி செல்வதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. மத சுதந்திர உரிமை அடிப்படையில் பல்லாக்கில் தருமபுரம் ஆதீனம் பட்டனப்பிரவேசம் செய்ய தடை விதிக்க முடியாது” என்று கூறினார்.


மேலும், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தருமபுரம் ஆதீனத்தை பல்லாக்கு தூக்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிகழ்ச்சிக்கு ஆதீனங்கள் அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தனர். தருமபுரம் ஆதீனம் கடந்த வாரம் முதலமைச்சரைச் சந்தித்துவிட்டு ஆன்மிக அரசு என பேட்டி அளித்தார். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லாக்கு தூக்க தடை விதித்ததை அரசியலாக்க பார்க்கிறார்கள். வரும் 22 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் தருமபுரம் ஆதீனத்துடன் முதலமைச்சர் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்” என்றார். நாம் ஒன்றை இங்கு கவணிக்க வேண்டும் விளையாட்டு மைதானத்தில் வெற்றி பெற்ற 




மனிதனை மனிதன் தூக்கி சுமப்பதற்கு கடும் கண்டனம் மீறி தூக்கி சுமந்தால் கூட அது தடை செய்யலாம். என்ற நிலை வரும் .

 - மனிதனை மனிதன் தூக்கி சுமப்பது மனித உரிமை மீறல் எனவே சபரிமலையில் டோலி தூக்கும் தொழிலாளிகளுக்கு

தடை விதிக்க வேண்டும் என பல்வேறு குரல்கள் வரும்  இல்லை என்றால் கேரளா நீதிமன்றத்தில் முறையிடுவது கூட நடக்கலாம்.

இது மத சுதந்திரம் இதில் மனித உரிமைகள் மீரப்படுவதில்லை அதிக பக்தி மட்டுமே இதில் முதன்மையாக வரும்.





"பல்லாக்கு நகர் நுழைதல் என்பதன் பின்னணி."

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

 நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

 இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

 கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே!                                                      தரும்புரம் ஆதினம் சொல்வதை நன்றாக கவனியுங்கள்.500 ஆண்டு பாரம்பரியம். விஜய நகர பேரரசின் மதுரை நாயக்கர் கால ஆட்சியில் சைவ மடாதிபதிகள் மன்னருக்கு ஈடாக பல்லக்கில் நகர் நுழைதல் என்பது அதிகாலத்திற்கு எதிரான ஒரு சமய பண்பாட்டுப் போர்.

இன்றும் நாயக்கர்கள் ஆட்சியை தெலுங்கு சமகிருத மொழி வைதீக சமயத்தை எதிர்த்து நடக்கின்ற போராகவே பலரும் பார்க்கும் நிலையில்

என்ன அதை விதைத்த ஆரிய இனக் குழுக்கள் இடைசாதிகளைக் கொண்டு இதில் ஆதாயம் தேடப் பார்க்கிறது. என்ற குரல்களும் வருகிறது.




சபரி மலையில் இருக்கும் டோலி பற்றிய கருத்துக்களை பல்லக்கோடு ஏன் பொறுத்தி பார்க்கும் பார்வை கூடாது?தருமபுரம் ஆதினத்தில் பல ஆண்டுகளாக  நடைபெற்றுவரும் பட்டினப்பிரவேசம் என்னும் நிகழ்வை தடைசெய்து மயிலாடுதுறை வருவாய் கோட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.

மனிதர்களை பல்லக்கில் மனிதர்களே சுமப்பது ஏற்புடையதில்லை  தான் ஏதோ இந்த முறைதான் ஆதினத்தை பல்லக்கில் சுமப்பது போல அரசு தடை விதித்திருப்பதில் அரசியல் இருப்பதாகத்தான் பலரால் பார்க்கப்படுகிறது.




உடனடியாக இந்துத்துவவாதிகள் இதை கண்டிப்பதும் திராவிட கட்சிகள் இதை ஆதரிப்பதும் ஊடகங்களில் பேசுபொருளாக்குவதும் இதில் உள்மறை அரசியல் தான் சந்தேகம் வலுப்படுத்துகிறது.

 போதாக்குறைக்கு தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களும் இதில் தலையிடுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு வலுசேர்க்கும் விதமாகதான் அமையும்.

மனிதர்களை மனிதர்களே சுமப்பது அநாகரிகமானது  தான் ஆனால் அது ஆதினங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஊரிலும் சுவாமி ஊர்வலங்களின் போது அதை மனிதர்கள் சுமந்து வருவதும் அதில் சுவாமி சிலைகளுக்கருகில் இருக்கும் அந்தணர்களையும் சேர்த்துதான் சுமந்து வருகிறார்கள். அழகர் வைபவம் உட்பட பல பல





தடை செய்தால் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் இல்லையேல் அமைதியாகக் கடக்க வேண்டும் அவ்வளவுதான். 

மனிதர்களை பல்லக்கில் மனிதர்களே சுமப்பது ஏற்புடையதில்லை  தான் ஏதோ இந்த முறைதான் ஆதினத்தை பல்லக்கில் சுமப்பது போல அரசு தடை விதித்திருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகதான் பார்க்க முடிகிறது.

உடனடியாக இந்துத்துவவாதிகள் இதை கண்டிப்பதும் திராவிடியன்ஸ் இதை ஆதரிப்பதும் ஊடகங்களில் பேசுபொருளாக்குவதும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

 போதாக்குறைக்கு தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களும் இதில் தலையிடுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு வலுசேர்க்கும் விதமாகத்தான் அமையும்  மனம் வருந்தி இதைப் பதிவிடுகிறேன்.‌ 

நாட்டில் எதைப் பற்றி விவாதிப்பது எதை விவாதிக்கக் கூடாது என்ற விவஸ்தையே கொஞ்சம் கூட இல்லாமல் போய் விட்டது நமது நாட்டின் சாபக்கேடு. மக்களின் துரதிருஷ்டம். 

நம் நாடு இதுவரை  காணாத அளவுக்கு  பொருளாதாரச் சரிவில் சிக்கித் தத்தளிக்கிறது.

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது.‌ 

சராசரி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டுது‌.  மக்களின் வாழ்வாதாரம் குறுகி வாழ்க்கையே கண்ணைக் கட்டுது.‌ இந்த நிலையில் இந்த பல்லக்கு அரசியல் ஆன்மீகம் கலந்த விவாதம் இங்கு நடக்கிறது.

கடவுளே! இந்தக் கல்நெஞ்சக் காரர்கள் பிடியில் இருந்து சாதாரண மக்களைக் காப்பாற்று! உனக்கு எனது வாழ்நாள் முழுவதும் பல்லக்கு தூக்குகிறேன்.

வாழ்க்கையில் தன் சுயலாபத்திற்காக அடுத்தவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப் பட்டவங்களுக்கு... பல்லக்கு தூக்குவது மிக மிக முக்கியம் தான்.‌ அதைத் தவறு என்று தடுக்க நினைப்போருக்கு அதைத் தடுப்பது தான் முக்கியம்.‌

அப்பாவி மக்களை வஞ்சித்து விட்டு பல்லக்கு தூக்கினால் என்ன? தூக்காவிடில் என்ன? 

ஆண்டவனுக்கே பல்லக்கு தூக்குவது அறவே பிடிக்காத போது... ஆதினத்துக்கு மட்டும் அதன் மேல் எதற்கு இந்த அவா.  

பல்லக்கு தூக்குவதால்...

பஞ்சத்தில் பரிதவிக்கும் பாமரனுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் பயன் கிட்டும் என்றால் அதைச் செய்வதில் தவறேதும் இல்லையே!

பல்லக்கு தூக்குவதால் நம் பாரத நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருந்து மீட்கப்படும் என்றால் அதை செய்வதில் தவறேதும் இல்லையே!

பல்லக்கு தூக்கினால் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்றால்... அதை செய்வதில் தவறேதும் இல்லையே!

இதை மறுக்கும் பலர் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களில் 

யாருக்காவது


பல்லக்கு தூக்கியே ஆகனும் என்று முடிவெடுத்து விட்டால்...‌ 

கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு பாடுபட்டு  உங்களை வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தைக்கு  ஆசான் தெய்வம் என பல்லக்கு தூக்கு! பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீமநாராயணனும் கயிலையில் வாசம் செய்யும் பரமநாதனும் பரவசமடைவர். கிருஸ்தவ மக்கள் குருவாக மதிக்கும் போப்பாண்டவர் கூட சமயத்தில் பல்லக்குத் தூக்கி அழைத்து வருகின்றனர் அதுவே மத சுதந்திரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...