முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய வணிகவியல் பள்ளியில் 2022-க்கான வணிகவியல் முதுநிலைக் கல்வி பயின்றோருக்கு பட்டமளிக்கும் விழாவில் பிரதமர் உரை

ஹைதராபாத்தில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளியில் 2022-க்கான வணிகவியல் முதுநிலைக் கல்வி பயின்றோருக்கு பட்டமளிக்கும் விழாவில் பிரதமர் உரையாற்றினார்






ஐதராபாதில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளியின் 20 ஆண்டுகள் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, 2022-க்கான வணிகவியல் முதுநிலைக் கல்வி பயின்றோருக்கு பட்டமளிக்கும் விழாவில் உரையாற்றினார்.

இந்தக் கல்வி நிறுவனம் தற்போதைய புகழை அடைவதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் புகழாரம் சூட்டினார். 2021-ல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தக் கல்வி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததை அவர் நினைவுகூர்ந்தார். அதன் பிறகு 50,000-க்கும் அதிகமான அதிகாரிகள் இந்திய வணிகவியல் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளனர். இன்று இந்த நிறுவனம் ஆசியாவிலேயே முதன்மையான வணிகவியல் பள்ளியாக விளங்குகிறது. இங்கிருந்து பட்டம் பெற்றவர்கள் முதன்மையான நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள் என்றும்  நாட்டின் வணிகத்திற்கு ஊக்கமளித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். இங்கு பயின்ற மாணவர்கள் நூற்றுக்கணக்கான புதிய தொழில்களை தொடங்கி யுனிகார்ன்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். “இது ஐஎஸ்பி-ன் சாதனை என்றும், இது ஒட்டு மொத்த தேசத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்” என்றும் அவர் கூறினார்.

ஜி-20 நாடுகளின் குழுவில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா இன்று விளங்குவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். திறனறி செல்பேசி தரவுகள்படி இவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இணையதள பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையை நாம் பார்த்தால் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று அவர் கூறினார். மேலும் உலகளாவிய சில்லரை வணிக குறியீட்டிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய புதிய தொழில் தொடங்கும் நிலை இந்தியாவில் உள்ளது. உலகில் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது. இந்தியா தற்போது வளர்ச்சியின் மிகப் பெரிய மையமாக உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு மிக உயர்ந்த அளவாக இந்தியாவிற்குள் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவு பதிவாகியுள்ளது. உலகம் தற்போது இந்தியா என்பதன் பொருள் வணிகம் என்பதை உணர்ந்து வருகிறது.

இந்தியத் தீர்வுகளை அவ்வப்போது உலகம் அமலாக்கி வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். எனவே “முக்கியமான நாளில் இந்தியா இன்று உள்ளபோது, உங்களின் தனிப்பட்ட இலக்குகளை நாட்டின் இலக்குகளோடு இணைப்பதற்கு உங்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

நாட்டில் எப்போதும் சீர்திருத்தத்தின் தேவை இருந்துள்ளது. ஆனால் அரசியல் மனஉறுதியில் குறைபாடும் எப்போதும் இருந்துள்ளது என்று பிரதமர் கூறினார். கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்ச்சியாக இருந்ததன் காரணமாக சீர்திருத்தங்களிலிருந்தும் பெரிய முடிவுகளை எடுப்பதிலிருந்தும் நாடு விலகி இருந்தது. 2014 முதல் நமது நாடு அரசியல் உறுதியை காண்கிறது. சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. தீர்மானத்துடனும், அரசியல் உறுதியுடனும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது பொதுமக்கள் ஆதரவு உறுதி செய்யப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மக்களிடையே வரவேற்பு பெற்றதை அவர் உதாரணமாக எடுத்துக் காட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த