முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேவைக்குறைபாடு வீடியோகான் நிறுவனத்துக்கு ரூபாய் .50 ஆயிரம் அபராதம் விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு.

தொலைக்காட்சி பெட்டி பழுதுபார்த்தல் சேவைக் கட்டணம். தொடர்பாக வீடியோகான் நிறுவனத்துக்கு ரூபாய் .50 ஆயிரம் அபராதம் விதித்து  திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு.

புதிதாக வாங்கிய தொலைக்காட்சி ப் பெட்டி பழுதான நிலையில், உத்தரவாதக் கால அவகாசம் இருந்தும், வாடிக்கையாளரை ஏமாற்றி அலைக்கழித்த வழக்கில் வீடியோகான் நிறுவனமும், தொலைக்காட்சி பெட்டியை விற்பனை செய்த கடை உரிமையாளரும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க திருவண்ணாமலை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் ரெண்டேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் நாகராஜன். 2016 ஆம் ஆண்டு டிசம்மர் 31 ஆம்  தேதி இவரது சகோதரி , செங்கத்தில் சக்திமுருகன் ஏஜென்ஸி எனும் கடையில் வீடியோகான் 50 இன்ச் எல்.இ.டி தொலைக்காட்சி பெட்டி  ஒன்றை 49,500 ரூபாய் விலை கொடுத்து வாங்கி நாகராஜனுக்குக் கொடுத்துள்ளார்.  அந்த தொலைக்காட்சி பெட்டி 3 வருடம் வாரண்டி அதாவது உத்தரவாதக் காலம் என தொலைக்காட்சி பெட்டியில்  ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த நிலையில்  வாரண்டி காலத்திற்கு முன்னதாகவே அந்த தொலைக்காட்சி பெட்டி பழுதானதான நிலையில்




 வாரண்டிக்கான உத்தரவாதக் கால அவகாசமிருப்பதை சுட்டிக்காட்டி தொலைக்காட்சி பெட்டியை சர்வீஸ் அல்லது பழுது நீக்கம் செய்து தருமாறு நகராஜன் , விற்பனை செய்த சக்திமுருகன் ஏஜென்ஸி கடையில் முறையிட்டுள்ளார். அதற்கு வீடியோகான் நிறுவனம் தனது தயாரிப்பை நிறுத்திக் கொண்டதாகக் கூறி காலதாமதம் செய்து இழுத்தடித்துள்ளனர்.

மேலும் இலவசமாக சர்வீஸ் செய்வதற்கு பதிலாக பணம் வாங்கிக் கொண்டு சர்வீஸ் செய்த சம்பந்தப்பட்ட சர்வீஸ் நிறுவனத்தினர், அதனையும் முழுமையாக செய்யாமல் தொலைக்காட்சி பேனல் பழுதாகி விட்டதால் ஆர்டர் செய்து வாங்கி வருவதாகக் கூறிவிட்டு நழுவிச்சென்றதாக கூறப்படுகின்றது. வாரண்டிக்கான கால அவகாசம் இருந்தும் அந்த தொலைக்காட்சி பெட்டியை சரிசெய்து கொடுக்காமல் வாரக்கணக்கில் நாகராஜனை ஏமாற்றி அலைக்கழித்துள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டில் வீடியோ கான் நிறுவனம் , மற்றும்  சக்திமுருகன் ஏஜெண்ஸி என்ற கடை ஆகிய இரண்டு தரப்பினரின் மீது நாகராஜன் திருவண்ணாமலை நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். பணம் கொடுத்து தொலைக்காட்சி பெட்டி வங்கிய வாடிக்கையாளருக்கு , வாரண்டி எனும் உத்தரவாதக் காலம் இருந்தும் தொலைக்காட்சி பெட்டியை முறையாக இலவசமாக பழுது நீக்கிக் கொடுக்காமல் அலைக்கழித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதால் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் மற்றும் வழக்கு செலவிற்கு 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு கோரி தாக்கல் செய்து நடத்திய வழக்கில் மஹாராஷ்டிராவில் உள்ள வீடியோகான் நிறுவனம், மற்றும் செங்கம் சக்தி முருகன் ஏஜென்ஸிக்கு சம்மன் மற்றும் நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் மெத்தனம் காட்டியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் வழக்குறைஞர் நாகராஜனுக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவிற்காக கூடுதலாக 5 ஆயிரம் ரூபாயும் வீடியோகான் நிறுவனமும், சக்தி முருகன் ஏஜெண்ஸியும் வழங்க வேண்டும் என்று நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார். ஒரு மாதத்திற்குள் இந்த இழப்பீட்டை வழங்கத் தவறினால் 7 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன்னில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களின் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் கூட இதுபோன்று நீதிமன்றத்தை நாடி வாடிக்கையாளர்கள் தங்களுக்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்று சட்ட வழிமுறைகள் இருக்கின்றன, பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், நம்பிக்கையுடனும் சட்டத்தை அணுகினால் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன்  விபரம் தெரிவிக்கின்றனர். பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே இங்கு பொது நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...