முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ 8 ம் டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ 6 ம் குறைக்கப்படுகிறது

 பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ 8ம் டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ 6ம் குறைக்கப்படுகிறது - மத்திய அரசு அறிவிப்பு

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம்:

திரு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து ஏழைகளின் நலனுக்குத் தம்மை  அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். ஏழைகள் மாற்றும் நடுத்தர வகுப்பினருக்கு உதவி செய்ய பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். இதன் பயனாக எங்களின் பதவிக்  காலத்தில் சராசரி பணவீக்கம் முந்தைய அரசுகளின் காலத்தை விட குறைவாக இருக்கிறது.

இன்று உலகம் சிரமமான நேரங்களை கடந்து கொண்டிருக்கிறது. கொவிட் -19 பெருந்தொற்றிலிருந்து உலகம் மீட்சி அடைந்து வந்தாலும் கூட, உக்ரைன் மோதல் வழங்கல் தொடர் பிரச்சனைகளையும் பல்வேறு பொருட்களின் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாகப்  பல நாடுகளில் பணவீக்கம் மற்றும் பொருளாதார அழுத்தம் உருவாகி உள்ளது.

பெருந்தொற்று காலத்திலும் கூட எங்கள் அரசு நலத்திட்டங்களை வெளியிட்டது. குறிப்பாகப்  பிரதமரின் வறியோர் நல உணவுத்  திட்டம். இது இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்படுகிறது.

சர்வதேச நிலை சவால் மிக்கதாக இருந்த போதும் அத்யாவைசிய பொருட்களின் பற்றாக்குறையோ தட்டுப்பாடோ  இல்லாததை நாங்கள் உறுதி செய்தோம். வளர்ச்சி அடைந்த நாடுகள் சிலவற்றில் கூட சில பற்றாக்குறைகளிலிருந்தும்  /இடையூறுகளிலிருந்தும்  தப்ப முடியவில்லை. அத்யாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். 

உலக அளவில் உர விலைகள் அதிகரித்த போதும் இத்தகைய விலை உயர்விலிருந்து நமது விவசாயிகளை நாங்கள்  பாதுகாத்திருக்கிறோம். பட்ஜெடில் ரூ.1.05 லட்சம் கோடி உர மானியம் என்பதோடு கூட நமது விவசாயிகளுக்கு மேலும் உதவிட கூடுதலாக ரூ 1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டது. 

சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசின் அணைத்து துறைகளும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.  இதனை மனதில் கொண்டு நமது மக்களுக்கு உதவ இன்று மேலும் சில அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ 8 ம் டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ 6 ம் குறைக்கப்படுகிறது  இதனால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ 9.5 அளவுக்கும் டீசல் விலையில் ரூ 7 அளவுக்கும் குறையும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

அனைத்து மாநில அரசுகளும், குறிப்பாக 2021 நவம்பரில் இத்தகைய வரிக்குறைப்பு அறிவிக்கப்பட்டபோது தங்களின் பங்காக வரிக்குறைப்பு செய்யாத மாநிலங்கள், இதே போன்று வரிக்குறைப்பை அமலாக்கி சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க நான் வலியுறுத்துகிறேன்.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் 9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு (12 சிலிண்டர்கள் வரை ) சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 200 மானியமாக இந்த ஆண்டும் நாங்கள் வழங்குவோம். இது நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் உதவி செய்யும். இதனால் ரூ. 6100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்

நமது இறக்குமதியில் அதிக பட்சத்தை சார்ந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான கச்சா பொருட்கள் மற்றும் உப பொருட்கள் மீதான சுங்க வரியையும் நாங்கள் குறைத்துள்ளோம் இதன் விளைவாக இறுதிவடிவ   பொருட்களின் செலவு குறையும் .

இதே போல் இரும்பு மற்றும் எஃகு பொருட்களின் விலையை குறைக்க கச்சா பொருட்கள் மாற்றும் உப பொருட்கள் மீதான சுங்க வரியையும் நாங்கள் குறைத்துள்ளோம் . எகின் சில கட்ச பொருட்களின் இறக்குமதி தீர்வை குறைக்கப்படுகிறது சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.

சிமெண்ட் கிடைப்பதை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சிறப்பான போக்குவரத்து மூலம் சிமெண்ட் விலையும் குறையும். மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்கள்  குறித்தும் மத்திய அரசு அடுத்த சில மணி நேரங்களில் விரிவான அறிவிக்கையை வெளியிடும் என குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த