முதியோரின் மனுக்கள் மீது 90 நாட்களுக்குள் பைசல் செய்ய வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவு
பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் 60 வயது கடந்த நபர்கள் அளிக்கும் விண்ணப்பங்களை 90 நாட்களுக்குள் பைசல் செய்து முடிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் முதியவர் சதாசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 'சொத்துக்களை பறித்து கொள்வதாக என் மகன் மிரட்டுகிறார். சொத்தை அபகரிக்க அவர்கள் எதுவும் செய்வார்கள். அதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகாரளித்தேன். ஆனால் காலம் கடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை அதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.
மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. தமிழகம் முழுதும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உதவி ஆட்சியர்களிடம் நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டதன்படி அரசு தாக்கல் செய்த அறிக்கையில் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை 90 நாட்களுக்குள் பைசல் செய்யும்படி வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவும் விண்ணப்பங்களை பைசல் செய்யத் தவறினால் ஆர்.டி.ஓ.க்களான வருவாய் கோட்டாட்சியர் தான் பொறுப்பாவர் என எச்சரிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,
என கூறப்பட்டுள்ளது. தற்போது பல அலுவலகங்களில் கையூட்டு காரணமாக சீராய்வு மற்றும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து ஒராண்டு கடந்த நிலையில் பல தவறான தகவல் கூறி வயதான நபர்களின் மனுக்கள் விசாரணை நடத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆனால் சில அலுவலகங்களில் பணம் வாங்காமல் பொதுமக்கள் சேவை எதுவும் நடப்பதில்லை என்று இருக்கும் நிலையில் கையூட்டு வாங்கி பணி செய்யும் பொதுமக்களின் ஊழியர்கள் சிலர் குறிப்பாக இரண்டு சதவீதம் மட்டுமே லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மூலம் பிடி படுகின்றனர் மீதம் 98 சதவீதம் மக்கள் இயலாமை காரணமாக தப்பி விடும் நிலை தான் உள்ளது. பல அலுவலகங்களில் ஊழல் மலிந்து அரசு ஊழியர்கள் தங்களை மக்கள் சேவை பணியாளர்கள் என்ற எண்ணம் இல்லாமல் மஹாராஜா தாங்கள் என்ற நிலை உள்ளது மாற வேண்டும் இல்லை. மக்களில் சிலர் விழிப்புணர்வு கொண்டு மாற்ற வேண்டும் அரசு இல் விவகாரத்தில் கண்டு கொள்ளாத நிலையில் தான் உள்ளது.
கருத்துகள்