"காலமுண்டாகவே காதல்செய்துய்ம்மின் கருதாய ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணாய ஆலமுண்டான் எங்கள் பாண்டிப் பிரான் தன் அடியவற்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினேபண்சுமந்த பாடற்பாசு படைத்தருளும் பெண்சுமந்தபாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்." .... என மாணிக்கவாசகப் பெருமான். பாடித்துதித்த மதுரையம்பதி.
பாண்டிய நாட்டில் ஆடி வீதி, சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி மாதம் மட்டுமே நட்சத்திரம் இணைந்து வீதியில் பெயர் பெற்றது ஆவணி மூல வீதி எனப்படும் இந்த ஆவணி மூல நட்சத்திரத்தில் எம்பெருமான் ஈசன் மானுடம் குறைதீர்ப்புத் தொழிலாளியாக வேடம் கொண்டு அருள்பாலிக்கிறார். அது ஆங்கில மாதமாக தற்போது பார்த்தால் செப்டம்பர் மாதம் அந்த நாளின் முக்கியத்துவத்தை உணரலாம். ஆவணி மூலம் என்பது ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்திலே சிவபெருமானைப் போற்றி தற்போதும் மதுரை நகரில் கொண்டாடப் படுகிறது
பிட்டுத் திருவிழா சிறப்பான விழாவாகும். அதற்கும் தற்போது நடக்கும் ஆங்கிலேய மற்றும் கம்யூனிஸ்ட்கள் நடத்தும் உழைப்பாளிகள் உறுவாக்கிய மே தினத்தின்கும் எவ்விதமான தொடர்பில்லை. 1889ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி பாரிசில் சர்வதேசத் தொழிலாளர் நாடாளுமன்றக் கூட்டத்தில், 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதென்றும், 1890 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி உலகளாவிய தொழிலாளர்கள் நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டுமென்றும் அறைகூவல் விடப்பட்டதன் விளைவாக ஆண்டுதோறும் மே மாதம் 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனாலும், உலகின் முதல் தொழிலாளர் குறை தீர்க்கும் இறைவன் போல நல்ல ஆட்சியாளர்கள் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த வரலாற்றைக் காண்க. பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் உழைப்பாளியாக
வறிய முதியோருக்காக இளையவராக வந்து பணி செய்யும் மனிதாபிமானி.
வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, பல தூரம் கரைகளை உடைத்துக் கொண்டு பாய்ந்த வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த பாண்டிய மன்னன் ஊரில் இருக்கும் அனைவருக்கும் ஊழியராக கரையை அடைக்கும் பணியை செய்ய உத்தரவு தந்தான்.
வந்தி எனும் மூதாட்டி பிட்டினை அவித்து விற்று வந்தார். வயது மூப்பின் காரணமாக அவரது கரையை அடைக்கும் பணியை செய்ய முடியவில்லை. அப்போது ஒரு இளைஞன் வந்திப் பாட்டிக்கு பதிலாக கரையை அடைப்பதாக ஒப்புக் கொண்டதற்கு கூலியாக பிட்டினை தருவதாக ஒப்புக் கொண்டு.
அந்த இளைஞன் மூதாட்டியிடம் பிட்டினை வாங்கிச் சாப்பிடுவதும், அது தீரும் வரை ஆடிப் பாடுவதுமாக பொழுதைக் கழிக்க, மூதாட்டிக்குறிய பகுதி மட்டும் கரை அடைக்கப்படாமலிருக்க அதை கண்காணித்து மன்னருக்கு தெரிவிக்க அதை விசாரிக்க அரசன் வந்து வத்திப் பாட்டியிடம் கேட்கவே அவரிடம் கண்காணிப்பாளரான நபர்கள் பாட்டியிடம் கூலியைப் பெற்றுக் கொண்டு இளைஞன் வேலை செய்யவில்லை எனப் புகார் செய்தனர்.
அரசன் அந்த இளைஞன் மீது சாட்டையால் அடித்ததும், அந்த அடி எல்லா உயிர்கள் மீதும் பட்டது. இறைவன் ஒரு கூடையில் மட்டும் மண் சுமந்து கரையை அடைக்க, அனைத்து கரைகளும் அடைக்கப்பட்ட பின்னர் வைகை நதி வெள்ளமும் கட்டுக்குள் வந்தது. இறைவன் காட்சி தந்து மறைந்த. வந்தி மூதாட்டியை சிவகணங்கள் வந்து அழைத்துச் சென்ற நிலையில் . இறைவன் “பாண்டியனே, தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது.
ஆதலால் நாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம்.
வஞ்சியின் கூலியாளாய் வந்து அவளிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக.” என்று திருவாக்கினைக் கூற பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் ஆவுடையார் கோவில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மாணிக்கவாசகப் பெருமான்ச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான்.
மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லை அம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பமெனக் கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் இயற்றிப் பாடி முடிவில் இறைவனாரின் சோதியில் கலந்தார். அரிமர்த்தபாண்டியனுக்கு பின்னர் சகநாதன் என்னும் அவனது மகன் ஆட்சியேற்க இறைவனாரின் திருவடியை அடைந்தான். இது முற்காலத்தில் உள்ள வரலாற்று நிகழ்வுகள் என்றாலும் தற்போது உள்ள அரசியல் களத்தில் தமிழக முன்னேற்றத்துக்கு தொழில் அமைதி மட்டுமே அடித்தளமாக அமையுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மே தின வாழ்த்து செய்தி கூறியுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் "கேடயமாகவும், போர்வாளாகவும்'' திமுக என்றும் திகழுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் "சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி - தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.பிரதமர் நரேந்திர மோடி, தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்‘இந்தத் தொழிலாளர் தினத்தில் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக உறுதியுடன், கடுமையாக உழைக்கும் அத்தனைத் தொழிலாளர்களுக்கும் தலைவணங்குவோம்’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 1837-ம் ஆண்டு அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் எட்டு மணி நேரமாகவே இருக்க வேண்டும் என ஒட்டுமொத்தத் தொழிலாளர்களும் இணைந்து போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்தத் தொழிலாளர் போராட்டங்களை ஒழிக்க ஆளும் முதலாளி வர்க்கம் முயன்றபோதும் அவற்றை தோற்கடித்து தொழிலாலர்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்பட்ட நாளே மே மாதம் 1 ஆம் தேதி. அதனாலேயே மே மாதத்தின் முதல் நாளினை உலகம்முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பைப் போற்றும் ‘உழைப்பாளார் தினமாக’க் கொண்டாடிவருகிறோம்.மே 1-ம் தேதி எவ்வித கலாசார, தேச, சாதிய, மத, இன, வர்க்க, அரசியல் வேறுபாடுகளின்றி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களைக் கவுரவிக்கும் ஓர் பாகுபாடற்ற சர்வதேச நாள். எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்