முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'மே தினம்' வரலாற்று பார்வையுடன் தலைவர்கள் வாழ்த்துச் செய்தி

 "காலமுண்டாகவே காதல்செய்துய்ம்மின் கருதாய  ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணாய ஆலமுண்டான் எங்கள் பாண்டிப் பிரான் தன் அடியவற்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினேபண்சுமந்த பாடற்பாசு படைத்தருளும் பெண்சுமந்தபாகத்தன் பெம்மான் பெருந்துறையான்

விண்சுமந்த கீர்த்தி வியன்மண்டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்." .... என மாணிக்கவாசகப் பெருமான்.  பாடித்துதித்த  மதுரையம்பதி. 


பாண்டிய நாட்டில் ஆடி வீதி, சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி மாதம் மட்டுமே நட்சத்திரம் இணைந்து வீதியில் பெயர் பெற்றது ஆவணி மூல வீதி எனப்படும் இந்த ஆவணி மூல நட்சத்திரத்தில் எம்பெருமான்  ஈசன் மானுடம் குறைதீர்ப்புத் தொழிலாளியாக வேடம் கொண்டு அருள்பாலிக்கிறார். அது ஆங்கில மாதமாக தற்போது பார்த்தால் செப்டம்பர் மாதம் அந்த   நாளின் முக்கியத்துவத்தை உணரலாம்.  ஆவணி மூலம் என்பது ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்திலே சிவபெருமானைப் போற்றி தற்போதும் மதுரை நகரில் கொண்டாடப் படுகிறது

பிட்டுத் திருவிழா சிறப்பான விழாவாகும். அதற்கும் தற்போது நடக்கும் ஆங்கிலேய மற்றும் கம்யூனிஸ்ட்கள் நடத்தும் உழைப்பாளிகள் உறுவாக்கிய மே தினத்தின்கும் எவ்விதமான தொடர்பில்லை. 1889ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி பாரிசில்  சர்வதேசத் தொழிலாளர் நாடாளுமன்றக் கூட்டத்தில், 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதென்றும், 1890 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி  உலகளாவிய தொழிலாளர்கள் நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டுமென்றும் அறைகூவல் விடப்பட்டதன் விளைவாக ஆண்டுதோறும் மே மாதம் 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.   ஆனாலும், உலகின் முதல் தொழிலாளர் குறை தீர்க்கும் இறைவன் போல நல்ல ஆட்சியாளர்கள் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த வரலாற்றைக் காண்க.                 பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் உழைப்பாளியாக

வறிய முதியோருக்காக இளையவராக வந்து பணி செய்யும் மனிதாபிமானி.

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, பல தூரம் கரைகளை உடைத்துக் கொண்டு பாய்ந்த வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த பாண்டிய மன்னன் ஊரில் இருக்கும் அனைவருக்கும் ஊழியராக கரையை அடைக்கும் பணியை செய்ய உத்தரவு தந்தான்.

 வந்தி எனும் மூதாட்டி  பிட்டினை அவித்து விற்று வந்தார். வயது மூப்பின் காரணமாக அவரது கரையை அடைக்கும் பணியை செய்ய முடியவில்லை. அப்போது ஒரு இளைஞன் வந்திப் பாட்டிக்கு பதிலாக கரையை அடைப்பதாக ஒப்புக் கொண்டதற்கு கூலியாக பிட்டினை தருவதாக  ஒப்புக் கொண்டு.

அந்த இளைஞன் மூதாட்டியிடம் பிட்டினை வாங்கிச் சாப்பிடுவதும், அது தீரும் வரை ஆடிப் பாடுவதுமாக பொழுதைக் கழிக்க, மூதாட்டிக்குறிய பகுதி மட்டும் கரை அடைக்கப்படாமலிருக்க அதை கண்காணித்து மன்னருக்கு தெரிவிக்க அதை  விசாரிக்க அரசன் வந்து வத்திப் பாட்டியிடம் கேட்கவே அவரிடம் கண்காணிப்பாளரான நபர்கள் பாட்டியிடம் கூலியைப் பெற்றுக் கொண்டு இளைஞன் வேலை செய்யவில்லை எனப் புகார் செய்தனர்.

அரசன் அந்த இளைஞன் மீது சாட்டையால் அடித்ததும், அந்த அடி எல்லா உயிர்கள் மீதும் பட்டது. இறைவன் ஒரு கூடையில் மட்டும் மண் சுமந்து கரையை அடைக்க, அனைத்து கரைகளும் அடைக்கப்பட்ட பின்னர் வைகை நதி வெள்ளமும் கட்டுக்குள் வந்தது. இறைவன் காட்சி தந்து மறைந்த. வந்தி மூதாட்டியை சிவகணங்கள் வந்து அழைத்துச் சென்ற நிலையில் . இறைவன்  “பாண்டியனே, தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது.

ஆதலால் நாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம்.

வஞ்சியின் கூலியாளாய் வந்து அவளிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக.” என்று திருவாக்கினைக் கூற பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் ஆவுடையார் கோவில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில்  மாணிக்கவாசகப் பெருமான்ச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான்.

மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லை அம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பமெனக் கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் இயற்றிப் பாடி  முடிவில் இறைவனாரின் சோதியில் கலந்தார். அரிமர்த்தபாண்டியனுக்கு பின்னர்  சகநாதன் என்னும் அவனது மகன் ஆட்சியேற்க  இறைவனாரின் திருவடியை அடைந்தான். இது முற்காலத்தில் உள்ள வரலாற்று நிகழ்வுகள் என்றாலும் தற்போது உள்ள அரசியல் களத்தில் தமிழக முன்னேற்றத்துக்கு தொழில் அமைதி மட்டுமே அடித்தளமாக அமையுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மே தின வாழ்த்து செய்தி  கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் "கேடயமாகவும், போர்வாளாகவும்'' திமுக என்றும் திகழுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் "சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி - தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.பிரதமர் நரேந்திர மோடி, தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்‘இந்தத் தொழிலாளர் தினத்தில் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக உறுதியுடன், கடுமையாக உழைக்கும் அத்தனைத் தொழிலாளர்களுக்கும் தலைவணங்குவோம்’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்  1837-ம் ஆண்டு அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் எட்டு மணி நேரமாகவே இருக்க வேண்டும் என ஒட்டுமொத்தத் தொழிலாளர்களும் இணைந்து போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்தத் தொழிலாளர் போராட்டங்களை ஒழிக்க ஆளும் முதலாளி வர்க்கம் முயன்றபோதும் அவற்றை தோற்கடித்து தொழிலாலர்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்பட்ட நாளே மே மாதம் 1 ஆம் தேதி. அதனாலேயே மே மாதத்தின் முதல் நாளினை உலகம்முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பைப் போற்றும் ‘உழைப்பாளார் தினமாக’க் கொண்டாடிவருகிறோம்.மே 1-ம் தேதி எவ்வித கலாசார, தேச, சாதிய, மத, இன, வர்க்க, அரசியல் வேறுபாடுகளின்றி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களைக் கவுரவிக்கும் ஓர் பாகுபாடற்ற சர்வதேச நாள். எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...