முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல்லக்கிற்கு சிவிகை என்றொரு பெயருண்டு.

பல்லக்கிற்கு சிவிகை என்றொரு பெயருண்டு.

"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" (திருக்குறள் அதிகாரம் எண்:37).

பல்லக்கு என்பது கோவில்களில் சுவாமிகள் வீதி வலம் வர மற்றும் அரச குலத்தினர்களையும்,  மடாதிபதிகளையும் தூக்கிச் சுமந்து செல்ல பழங்கால முறையில்  பயன்படுத்திய, மூடப்பட்ட ஒரு தூக்கி,


குறைந்த பட்சம் நான்கு பேரால் தூக்கி சுமக்கப்படுவது. நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பல்லக்கு தூக்கும் நபர்கள் பலர் மாறி மாறி தூக்கி வரும் பழக்கம் இருந்தது. கோவில் உற்சவரை வீதி வலம் வரும்போது சுமந்து வருவது மூடப்படாத, திறந்த நிலை பல்லக்கு. இதை   கோவில் உற்சவத்தில் உம்பலங்கள் அல்லது பட்டயதார்கள் தூக்கி வரும் நிகழ்வுகளுக்கு அதற்கு உணவு அல்லது கோவில் அச்சடித்து வழங்கும் பிரசாதம் தான் கூலி ஆகும். இதுவே பழங்காலத்திலிந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   பல்லக்கு என்பது ஆங்கிலத்தில் Palaquin; ஹிந்தியில்: पालकी, डोली) ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து கொள்ள நால்வர் பல்லாக்குக் கோல்களை தங்கள் தோள்களில் சுமந்து செல்லும் ஊர்தி. அதோடு நிறுத்தி வைக்கும் முட்டுக்கட்டை கொண்டு செல்வர் பல்லாக்கைச் சுமப்போர் பல்லக்குத் தூக்குவோர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இரவில் சென்றால் அதற்கு தீவெட்டி தூக்கி வரும் தடியான நபர்கள் முன் செல்வர். இதற்கு சிவிகை, ஆந்தோணி, தண்டிகை, அந்தளம், கச்சு என சில பெயர்களுமுண்டு. முத்துப் பல்லாக்கு, இரத்தினப் பல்லாக்கு, பூ பல்லாக்கு என்று பல வகையிலும் உள்ளன. அப்படி மரபுவழி வந்த தருமபுரம் ஆதீனம் தற்போது பல்லக்கு மூலம் நகர் வலம் வரும் நிகழ்வு 500 ஆண்டு பாரம்பரிய விழாவாக ஆண்டு தோறும் நடத்தப்படும் அதில் தற்போது தடையானதால்                                "உயிரைக் கொடுத்தாவது தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம்" 

 என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதினத்தில் நடக்க உள்ள பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து  உம்பலதார்கள் (மனிதர்கள்) தூக்கிச் செல்வதை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தடை விதித்துள்ள நிலையில் 293 வது மதுரை ஆதினம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, 500 ஆண்டுகளாக நடைபெறும் பழக்கம் இதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும். இதன் உள் நோக்கம் என்ன?                      தருமபுர ஆதினமும், துருவாவடுதுரை ஆதினமும் இது போன்று பட்டினப் பிரவேசம் செய்வது தடுப்பது ஏன் ? ஆன்மீகத்தில் அரசியல் வாதிகள் தலையீடு உள்ளது. தமிழக முதல்வரே முன்னின்று இந்த நிகழ்வை நடத்தி வைக்க வேண்டும். தடை செய்யப்பட்டதை நினைத்து நேற்று இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தேன்.




பட்டினப் பிரவேசம் தடை தொடர்ந்தால், சொக்கநாதரிடம் முறையிடுவேன். நானே சென்று பட்டினப் பிரவேசம் நடத்துவேன். ஏனென்றால் நான் அந்த மடத்தில் வளர்ந்தவன். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிகாலத்திலே, பட்டினப் பிரவேசம் நடந்தது. கலைஞர் காலத்தில் நடந்தது. தடையை நீக்கா விட்டால் நானே தடையை மீறி பட்டினப் பிரவேசம் நடத்துவேன். எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, தருமபுரம் ஆதினம் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம்.தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வில் பல்லக்கு மனிதர்கள் தூக்க அனுமதி மறுத்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டதை ரத்து செய்து, நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். காலங்காலமாக நடைபெறும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி குருவிற்கு நாங்கள் அளிக்கும் மரியாதை அதை மாற்றக்கூடாதென்றும் தெரிவித்துள்ளனர். தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்‍கு, வருவாய் கோட்டாட்சியர் நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு மதுரை ஆதீனம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.


உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப்பிரவேசத்தை நடத்துவேன் என்றும் எனது குருவிற்கு நானே பல்லக்கு சுமப்பேன் என்றும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்க அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டதை ரத்து செய்து, தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்‍கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு மதுரை ஆதீனம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆதீனம் !



முதுகலைப் பட்டம்,. ஆய்வியல் விளைஞர் பட்டம் ,முனைவர் பட்டம்  பெற்றவர்.

ஒருவரின் நிலையை பற்றி ஸ்கேனர் இயந்திரத்தை விடவும் வேகமாகவே கணிக்க கூடிய வல்லமை கொண்ட


ஒருவர் தருமை ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.                         .மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்வில் திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பாஜக ஆதரவு கொண்ட அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்.   தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருக்கிறார். ``ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால், மயிலாடுதுறை காவல்துறை துணை  கண்காணிப்பாளர் வசந்தராஜ் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திடக் கோரி அனுப்பிய அறிக்கையின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படியும் சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதாலும், பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது" எனக் கோட்டாட்சியர் பாலாஜி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.  கர்நாடகா போன்று தமிழக ஆதினங்கள் இணைந்து செயல்பட ஆளுநர் மூலம் முயற்சி தொடர்ந்து வருகிறதா என்று பல்வேறு வகையான கருத்து உலா வரும் நிலையில்.


தருமை ஆதினம் என்று அழைக்கப்படும் தருமபுரம் ஆதினத்தை பல்லாக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சியை தடை செய்து கோட்டச்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஆளுநர் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக ஆதினம் செயல்பட்ட காரணத்தால் தமிழக அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாதாகப் பேசப்படுகிறது, அதே நேரத்தில் தமிழக அரசின் இந்த செயலுக்கு மிக பெரிய பின்விளைவுகள் இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஆதீனங்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்டு வரும் நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 மயிலாடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லும் வழக்கிற்கு தடை விதிப்பதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜியின் உத்தரவு காரணமாக ஆன்மீகவாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த ஆதினத்திற்கு கடந்த மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்து ஆதினத்தின் முக்கிய நிகழ்வை தொடங்கி வைத்தார், அப்போது பேசிய தருமை ஆதினம் தமிழக ஆளுநர் ரவியின் பெயருக்கு சூரியன் என்று பெயர், தமிழகத்தில் இரண்டு சூரியன்கள் ஆட்சியில் இருப்பதாக பொருள்படும் படி தெரிவித்ததாகவும், அத்துடன் அவரது முகநூல் பக்கத்திலும் ஆளுநருக்கு ஆதரவாக புகைப்படங்களைப் பகிர்ந்ததாகவும். இந்த நிலையில்

பல்வேறு மாடாதிபதிகளைச் சந்திக்க முதல்வர் விரும்புவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடம் இருந்து சமீபத்தில் ஆதினங்களுக்கு அழைப்பு சென்றது.

அப்போது முதல்வரைச் சந்தித்த              தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனம் ஆகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி 28ஆவது குருமகா சன்னிதானம், அழகிய மணவாள சம்பத்குமார் ராமானுஜஜீயர், திரு கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர் ஆகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள் 29ஆவது குருமகா சன்னிதானம், ஸ்ரீ காமாட்சிதாஸ் சுவாமிகள் ஆகியோர்  முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார்கள்     தருமை ஆதினம் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது அரசு அவர்கள் கொள்கையை பார்க்கிறது, நாங்கள் எங்கள் கொள்கையைப் பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்


மேலும் தமிழகத்தில் நடப்பது ஆன்மீக ஆட்சிதான் என குறிப்பிட்டார்,இந்த சந்திப்பு நடந்த சில நாட்களில் இப்போது தருமை ஆதினம் பல்லாக்கு நிகழ்ச்சியை தடை செய்து வருவாய்  கோட்டச்சியர் உத்தரவு பிறப்பித்திருப்பது கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.  குறித்து நமது  நட்பில் சார்ந்த ஆதினத்தைச் சேர்ந்த சில முக்கிய சைவ சித்தாந்த பிரமுகர் மூலம்  கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் சற்று ஆச்சர்யத்தை கொடுத்தது, முதல்வர் சந்திப்பின் போது பல ஆதினங்கள் அரசு சார்பில் தங்களுக்கு கொடுக்கப்படும் அழுந்தங்களை பட்டியல் போட்டனர், மேலும் தமிழகம் ஆன்மீக பூமி எனவும் இங்கு சைவ சமயத்திற்கு பல்வேறு அடக்குமுறைகள் உண்டாவதாகவும் குறிப்பிட்டு பேசியதாக தெரிகிறது,

மேலும் தமிழகத்தில் உள்ள ஆதினங்கள் எல்லாம் ஆளும் அரசிற்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என பேசப்படுகிறது குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்து மடாதிபதிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அங்கு அவர்கள் தீவிர பாஜக நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர், கர்நாடகவை காட்டிலும் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆதினங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதே நிலை நீடித்தால் கிறிஸ்தவ பாதிரியர்கள் போன்று சைவ ஆதினங்களும் களத்திலிறங்கும் என்பதால் ஆதினங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர  இது போன்ற முயற்சிகள்  அவர்கள் தொடங்கி நடத்தி வருவது பற்றி குறிப்பிட்டனர். 

பல்லாக்கு தூக்குவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் இல்லை அப்படி இருக்கையில் தடை செய்த சம்பவம் நிச்சயம் ஆளும் கட்சிக்கு எதிராகவே முடியும் பொறுத்து இருந்து பாருங்கள் இதற்கு பதிலடியாக ஆதினங்கள் அனைத்தும் கர்நாடக போன்று ஒன்று சேர்ந்து தீவிர அரசியலில் இறங்க போகின்றன, மாவட்ட நிர்வாகம் மூலம் ஆதினங்களுக்கு ஆளும் அரசு அழுத்தம் கொடுத்தால் ஆளுநர் மூலம் ஆளும் அரசிற்கு அழுத்தம் கொடுக்க சிவன் துணை இருப்பதாக சற்று மனம் தளராமல் தெரிவிக்கின்றனர் ஆதினம் தரப்பினர்.

எது எப்படியோ ஆதினங்கள் ஏற்கனவே மதுரை ஆதினம் தீவிரமாக தனது கருத்தை தெரிவிக்க தற்போது தருமை ஆதினமும் விரைவில் தீவிர தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க இந்த பல்லக்கு தடை சம்பவமும் ஒரு காரணமாக அமைந்துவிட போகிறது. மேலும் இந்த உத்தரவு நீதிமன்றத்தில் தீர்வு பெறவேண்டிய நிலையில் தான் தற்போது உள்ளது. அதுவே இறுதியாக நிலையான உத்தரவாக அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...