முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜமைக்காவின் கவர்னர் ஜெனரல் அளித்த அரசு விருந்து நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத்தலைவர் உரையாற்றினார்

ஜமைக்காவின் கவர்னர் ஜெனரல் அளித்த அரசு விருந்து நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்

ஜமைக்காவிற்கான எனது முதலாவது அரசுமுறை பயணத்தின் போது எனக்கும், எனது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நமது தூதரக உறவுகளின் 60 ஆண்டுகளை குறிக்கும் இத்தருணத்தில் ஜமைக்காவிற்கு இந்திய குடியரசுத்தலைவர் ஒருவர், அரசு முறை பயணம் மேற்கொள்வதும் இதுவே முதன்முறையாகும்.


மாண்புமிகு கவர்னர் ஜெனரல் அவர்களே,

ஜமைக்காவிற்கு இந்தியாவிலும் எங்கள் மக்களிடமும் மிகவும் சிறப்பான இடம் உள்ளது. 1845 மே 10 அன்று 175 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 இந்தியர்களை ஏற்றிய கப்பல் ஜமைக்காவிற்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு வாழ்க்கையின் பலதரப்பினரான இந்தியர்கள் இந்த அழகிய நாட்டிற்கு வருகை தந்து இதனை தங்களின் தாயகமாக கொண்டுள்ளனர்.


மேன்மையானவர்களே !

ஜார்ஜ் ஹெட்லி, மைக்கேல் ஹோல்டிங், கிரிஸ் கெயில் போன்ற கிரிக்கெட் ஆளுமைகளின் பெயர்கள் இந்தியாவில் பல தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களால் வியக்கப்பட்டவை. ஏற்கனவே, நீங்கள் அறிந்திருப்பதுபோல், இந்தியர்கள் கிரிக்கெட் ஆர்வமுள்ளவர்கள். இதனால் புவியியல் ரீதியாக தூரத்தில் இருந்தாலும், நாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். இந்தியாவின் விளையாட்டு பிரியர்களால் மிகவும் அறியப்பட்டவர் மகத்தான உசேன் போல்ட்.

மேன்மையானவர்களே!

பல வகைகளில் இந்தியாவும் ஜமைக்காவும் இயற்கையான கூட்டாளிகள். வலுவான துடிப்புமிக்க ஜனநாயகங்கள் என்ற முறையில் நமது நாடுகள் நெறிமுறைகள் சார்ந்த சந்தை நடைமுறைகளை ஆதரிக்கின்றன. அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, நிலையான, பாதுகாப்பான, சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு ஆகியவற்றுக்கு நமது நாடுகள் மதிப்பளிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் இணைந்து பணியாற்ற நமது இளைஞர்களை நாம் ஒருங்கிணைத்து கொண்டு வரவேண்டும்.

மாண்புமிகு கவர்னர் ஜெனரல் அவர்களையும் அவரது துணைவியாரையும்,  ஜமைக்கா மக்களையும் நான் வாழ்த்துகிறேன். இந்தியா – ஜமைக்கா நட்புறவை நாம் வலுப்படுத்துவோம்.

நன்றி !        மேலும் ,

ஜமைக்கா நாட்டு பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரை 

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்றுவதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அரசியலமைப்புத் தலைவர் என்ற முறையில் ஜமைக்கா நாட்டின் துடிப்பான ஜனநாயக தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜமைக்கா நாட்டிற்கு பயணிப்பது, அதன் வாழும் கலாச்சாரத்தை அனுபவிப்பது, அந்நாட்டு மக்களை சந்திப்பது ஆகியவற்றை மிக ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தேன். 



மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

இந்தியர்களுக்கு ஜமைக்கா ஆதரவு அளித்திருப்பதுடன் அவர்களுக்கு கௌரவத்தையும் மரியாதையையும் வழங்கியுள்ளது. இதன் காரணமாக அரசியலில் மட்டுமல்லாமல் வர்த்தகம், இசை, விளையாட்டு, உடை மற்றும் உணவிலும் வளமான இந்தியத் தன்மையைக் காணமுடிகிறது.

இந்திய சமூகத்தினரும், கலாச்சார உறவுகள் மட்டுமே நமது இரு நாடுகளை இணைப்பதில்லை, ஜனநாயகத்தில் நமது நம்பிக்கை மற்றும் சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கின்றன. அனைத்து குடிமக்களும் சமமாகவே உருவாக்கப்பட்டார்கள் என்பது ஜமைக்கா நாட்டு அரசியலமைப்பின் மைய தூணாகும். எங்கள் முன்னோர்களும் இதே நம்பிக்கையை பகிர்ந்ததுடன், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிமனித சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார்கள். சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட நவீன நாட்டை அவர்கள் உருவாக்கினார்கள். அவ்வாறு உருவாக்கியபோது, 'வேறுபட்ட போதும், ஒரே மக்கள்' என்ற ஜமைக்காவின் கோஷங்களைப் போலவே ‘வேற்றுமையில் ஒற்றுமை' என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

இந்தியாவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக தம்மையே அர்ப்பணித்து, சமூக அவலங்களைக் களைந்தார். அரசியலமைப்பில் சமூக மேம்பாட்டிற்கான வசதிகளை அறிமுகப்படுத்தி, 'இந்திய அரசியலமைப்பின் சிற்பி’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். கிங்ஸ்டனில் நேற்று நான் திறந்துவைத்த சாலைக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் சூட்டிய ஜமைக்கா நாட்டு அரசுக்கு எனது நன்றி.

கொவிட்-19 நெருக்கடியில் இருந்து உலகம் மீண்டு வரும் வேளையில் மாபெரும் பொருளாதாரங்களுள் மிக வேகமாக இந்தியா வளர்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்தது முதல் பல்வேறு முறைகள் வேளாண்மை உற்பத்தியை நாங்கள் பெருக்கியுள்ளதுடன், உணவு தானியங்களின் நிகர ஏற்றுமதியாளராகவும் செயல்படுகிறோம். தரமான மருந்துகளையும், தடுப்பூசிகளையும் மலிவான விலைகளில் தயாரிப்பதால் ‘உலகின் மருந்தகமாக' இந்தியா அழைக்கப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் 150 ஜிகாவாட் அளவை இந்தியா கடந்திருப்பதுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட் திறன் என்ற இலக்கை எட்ட நிர்ணயித்துள்ளது. எங்களது தேசிய கல்வி கொள்கை 2020 இன் கீழ் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களை வெளிநாடுகளில் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.  ஓர் இந்திய தொழில்நுட்ப கழகத்தை நிறுவ ஜமைக்கா விருப்பம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களே,

நமது தூதரக உறவின் 60-வது ஆண்டு நிறைவடைவதை நாம் கொண்டாடும் வேளையில், வளர்ந்து வரும் நமது கூட்டுமுயற்சி, அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பகிர்ந்து கொள்ளும் மாண்புகளிலிருந்து நாம் எழுச்சியும் ஆற்றலும் பெறுவோம். 

நன்றி! எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த