கியானி ஜெயில் சிங்கின் பிறந்தநாளில்
குடியரசுத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
முன்னாள் குடியரசுத்தலைவர் கியானி ஜெயில் சிங்கின் பிறந்தநாளையொட்டி குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கௌஹாத்தியில் இன்று (மே 05,2022) அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் 7-வது குடியரசுத் தலைவரும் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் கியானி ஜெயில் சிங். இவரது பேரன் இந்திரஜித் சிங், டெல்லியிலுள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முன்னிலையில் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தனது தாத்தாவை எப்படி நடத்தியது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் விபத்தில் தான் இறந்தாரா என்பதும் தெரியவில்லை எனவும் கூறினார். 1994 ஆம் ஆண்டு தனது 78 வது வயதில் ஜெயில்சிங் சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்