முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாமானிய மக்களிடம் காவல்துறையினர் கண்ணியமாகவும் நட்புடனும் இருக்க குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமாக காவல் படை இருக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

முற்போக்கான, நவீன இந்தியாவில் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் ஒரு போலீஸ் படை இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். 



முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு. பிரகாஷ் சிங் எழுதிய “இந்தியாவில் காவல்துறை சீர்திருத்தங்களுக்கான போராட்டம்” என்ற புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் திரு.நாயுடு, சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் குற்றங்களைத் திறம்படச் சமாளிக்க நமது காவல்துறையினரின் திறமையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 


காவல் துறையில் அதிக அளவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் நவீன கால காவல் துறைத் தேவைகளுக்கு ஏற்ப காவல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல் உட்பட போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்களை அவர் எடுத்துரைத்தார்.

சாமானிய மக்களிடம் காவல்துறையினர் கண்ணியமாகவும் நட்புடனும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், இந்த விஷயத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகளை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

காவல் துறை சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானது எனவும், பல ஆண்டுகளாக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தேவையான அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறினார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, மாநிலங்களில் சீர்திருத்தங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற  விருப்பத்தை அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும் காவல்துறை சீர்திருத்தங்களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். "அமைதியே முன்னேற்றத்திற்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

இந்திய காவல்துறையின் வரலாற்றை நினைவு கூர்ந்த குடியரசு துணைத் தலைவர் 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் தங்கள் ஏகாதிபத்திய நலன்களை நிலைநிறுத்தும் முக்கிய நோக்கத்துடன் காவல்துறையை உருவாக்கினர் என்றும், சுதந்திரப் போராட்டத்தின் போது, காவல்துறையை மக்களை ஒடுக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தினார்கள்.சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு, காவல்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன. துரதிருஷ்டவசமாக, இந்த முக்கியமான பகுதியில் நாம் பின்தங்கிவிட்டோம், என்றும் அவர் கூறினார்.

எமர்ஜென்சியின் போது காவல் துறையை தவறாகப் பயன்படுத்திய நிகழ்வுகளைக் குறிப்பிட்ட திரு. நாயுடு, மனித உரிமைகளை நசுக்குவதற்கும், ஆளும் கட்சியின் அனைத்து அரசியல் எதிரிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை சிறையில் அடைப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது என்றார்.

அதைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டில் ஒரு தேசிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டது. அது காவல்துறை சீர்திருத்தங்களுக்கான விரிவான பல  முன்மொழிவுகளுடன் அறிக்கைகளை சமர்ப்பித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சக்திகளின் அனைத்து சாயல்களையும் எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிரை நீத்த காவலர்களை நினைவு கூர்ந்து திரு. நாயுடு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் எல்லை பாதுகாப்புபடை முன்னாள் இயக்குனர் திரு. பிரகாஷ் சிங், முன்னாள் தலைமை இயக்குநர் , இந்தியா டுடே நிர்வாக ஆசிரியர் திரு. கௌசிக் டேகா, இந்திய போலீஸ் அறக்கட்டளை தலைவர் திரு. என். ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த