முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாமானிய மக்களிடம் காவல்துறையினர் கண்ணியமாகவும் நட்புடனும் இருக்க குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமாக காவல் படை இருக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

முற்போக்கான, நவீன இந்தியாவில் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் ஒரு போலீஸ் படை இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். 



முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு. பிரகாஷ் சிங் எழுதிய “இந்தியாவில் காவல்துறை சீர்திருத்தங்களுக்கான போராட்டம்” என்ற புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் திரு.நாயுடு, சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் குற்றங்களைத் திறம்படச் சமாளிக்க நமது காவல்துறையினரின் திறமையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 


காவல் துறையில் அதிக அளவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் நவீன கால காவல் துறைத் தேவைகளுக்கு ஏற்ப காவல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல் உட்பட போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்களை அவர் எடுத்துரைத்தார்.

சாமானிய மக்களிடம் காவல்துறையினர் கண்ணியமாகவும் நட்புடனும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், இந்த விஷயத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகளை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

காவல் துறை சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானது எனவும், பல ஆண்டுகளாக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தேவையான அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறினார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, மாநிலங்களில் சீர்திருத்தங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற  விருப்பத்தை அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும் காவல்துறை சீர்திருத்தங்களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். "அமைதியே முன்னேற்றத்திற்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

இந்திய காவல்துறையின் வரலாற்றை நினைவு கூர்ந்த குடியரசு துணைத் தலைவர் 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் தங்கள் ஏகாதிபத்திய நலன்களை நிலைநிறுத்தும் முக்கிய நோக்கத்துடன் காவல்துறையை உருவாக்கினர் என்றும், சுதந்திரப் போராட்டத்தின் போது, காவல்துறையை மக்களை ஒடுக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தினார்கள்.சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு, காவல்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன. துரதிருஷ்டவசமாக, இந்த முக்கியமான பகுதியில் நாம் பின்தங்கிவிட்டோம், என்றும் அவர் கூறினார்.

எமர்ஜென்சியின் போது காவல் துறையை தவறாகப் பயன்படுத்திய நிகழ்வுகளைக் குறிப்பிட்ட திரு. நாயுடு, மனித உரிமைகளை நசுக்குவதற்கும், ஆளும் கட்சியின் அனைத்து அரசியல் எதிரிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை சிறையில் அடைப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது என்றார்.

அதைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டில் ஒரு தேசிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டது. அது காவல்துறை சீர்திருத்தங்களுக்கான விரிவான பல  முன்மொழிவுகளுடன் அறிக்கைகளை சமர்ப்பித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சக்திகளின் அனைத்து சாயல்களையும் எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிரை நீத்த காவலர்களை நினைவு கூர்ந்து திரு. நாயுடு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் எல்லை பாதுகாப்புபடை முன்னாள் இயக்குனர் திரு. பிரகாஷ் சிங், முன்னாள் தலைமை இயக்குநர் , இந்தியா டுடே நிர்வாக ஆசிரியர் திரு. கௌசிக் டேகா, இந்திய போலீஸ் அறக்கட்டளை தலைவர் திரு. என். ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...