தொலைக்காட்சித் தொடர் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அ.இ.அ.தி.மு.க., முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை காவல்துறையினர் விசாரிக்கவுள்ளதாக தகவல்.
.சென்னை, திருவான்மியூர் நடிகை சித்ரா,( வயது 29); தனியார் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்தவர், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்., 9 ஆம் தேதி யில் செம்பரம்பாக்கம் நட்சத்திர ஹோட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்குத் துாண்டியதாகவும் , அவரது தந்தை காமராஜ் கொடுத்த புகாரின் படி, நசரத்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஹேம்நாத்தை கைது செய்த நிலையில் அவர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேயில், பிணைமில் வெளி வந்தார்.சித்ரா தற்கொலை தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், தந்தை காமராஜ், தாய் விஜயா, சகோதரி சரஸ்வதி உள்ளிட்ட பல நபர்களிடம் நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரித்தனர். சென்னை, பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சில அரசியல் கட்சி நபர்கள், சித்ராவின் நட்பு வட்டத்திலிருந்தது தெரிய வந்ததனால், சம்பந்தப்பட்டவர்கள் அப்போது ஆட்சியில் இருந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என்பதால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டனர். இச் சூழ்நிலையில் மூன்று நாட்களுக்கு முன், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் புகார் மனு ஒன்றைக் கொடுத்ததில், 'என் மனைவி நடிகை சித்ராவின் தற்கொலைக்குப் பின்னணியில் பணம் மற்றும் அதிகார பலம் படைத்த அரசியல் 'மாபியா' கும்பல் உள்ளது. சென்னையைச் சேர்ந்த சிலர், அரசியல் பலம் படைத்த நபர்களிடம், பெரிய அளவில் பணம் வாங்க முயற்சி செய்கின்றனர்.'அதற்கு, என்னையும் உடந்தையாக்க பார்க்கின்றனர். ஒத்துழைக்கவில்லை என்றால், என்னை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நடிகை சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டறிய, மீண்டும் அந்த வழக்கை விசாரிக்க காவல்துறையில் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். அவர் தற் கொலை செய்து கொள்வதற்கு முன், அவருடன் தொடர்பில் இருந்த அரசியல், மற்றும் திரைப்படங்கள் சார்பில் பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் ?என்பதை பட்டியலிட்டுள்ளனர். நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முன், பெரம்பலுாரில், 'கிப்ட் ஷாப்' திறப்பு விழாவில் பங்கேற்றார். அதன் பின், அப்போதைய அ.இ.அ.தி.மு.க.,வின் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரின், தொடர்ச்சியான தொந்தரவே அவரது தற்கொலைக்குக் காரணமென, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததனால், அவரை காவல் வளையத்துக்குள் கொண்டு வந்து, தீவிரமாக விசாரிக்க உள்ளதாகவும், அரசின், ஒப்புதல் கிடைத்ததும், இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளதனால் அ.இ.அ.தி.மு.க., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்., உட்பட, நடிகை சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் தற்போது கலக்கமடைந்து உள்ளதாகத் தகவல் வருகிறது.
கருத்துகள்