கடற்படை விருதுகள் வழங்கும் விழா கேரளா மாநிலத்தில் கொச்சியில் நடந்தது
கடற்படையில் வீர தீர செயல் புரிந்தவர்கள், தலைமை பண்புகள், சாதனை படைத்தவர்கள் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் கடற்படை விருதுகள் வழங்கும் விழா கொச்சியில் மே 4 ஆம் தேத நடந்தது. குடியரசு தலைவர் சார்பாக கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
வீரதீர செயல்கள் பிரிவில் 06 பதக்கங்களும், சிறப்பாக கடமையாற்றுதல் பிரிவில் 08 பதக்கங்களும், 17 விசிஷ்ட் சேவா பதக்கம் என மொத்தம் 31 பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், உயிர் காப்பாளன் விருது, லெப்டினன்ட் வி.கே. ஜெயின் நினைவு தங்க பதக்கம், கேப்டன் ரவி தீர் நினைவு தங்க பதக்கம், கடற்படை தளபதி கேடயம் ஆகியவையும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் கடற்படை மூத்த அதிகாரிகள், விருது பெறுபவர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டார்கள்.கடற்படையில் வீரதீர செயல்புரிந்த சாதனை படைத்த மற்றும் சிறந்த சேவை புரிந்த கடற்படை வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கொச்சி கடற்படை தளத்தில் 04 மே 2022 அன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவரின் சார்பில் கடற்படைத்தளபதி அட்மிரல் ஹரிக்குமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 8 பேருக்கு வீரதீரத்திற்கான பதக்கங்கள் உள்பட மொத்தம் 31 பதக்கங்கள் அளிக்கப்பட்டது. அத்துடன் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதி அன்று ராஜஸ்தானில் நாகர் மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் மூழ்கிய ஒருவரை மீட்கும் பணியின் போது உயிர் தியாகம் செய்த ராமாவதார் கோதாராவின் தந்தைக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதான சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் வழங்கப்பட்டது.
கருத்துகள்