முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிரிப்டோ நாணயங்கள் மோசடி குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் விழிப்புணர்வுக் காணொளி வெளியீடு

 கிரிப்டோ நாணயங்கள் மோசடி குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் விழிப்புணர்வுக் காணொளி வெளியீடு   


         சென்னை பெருநகர் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சில நாட்களுக்கு முன் சுற்றறிக்கை வெளியிட்டிருந்ததில், “பிட் ஃபண்ட் மைன் இன்வெஸ்ட்மெண்ட் கம்பனி, ஆன்லைன் பிட்காயின் டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் பெயரில் பல தவணைகளாக பணத்தைக் கட்டி இரண்டு காவலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இதுபோன்ற ஆசை அறிவிப்புகளை நம்பி பணத்தை இழந்துள்ளனர்.

காவலர்கள் தங்களது சேமிப்புகளைத் தரமான வங்கி மற்றும் முதலீடுகளில் செலுத்தி ஆதாயங்களைப் பெற வேண்டுமே தவிர இதுபோன்ற தீய பழக்கவழக்கங்களில் ஈடுபட்டு ஏமாறக்கூடாது” எனத் கதெரிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்  சைலேந்திர பாபு தற்போது வீடியோ மூலம் பரப்புரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிரிப்டோ நாணயங்கள் (பிட்காயின்) மோசடி குறித்து பேசியுள்ளதில்.  "வணக்கம் பொதுமக்களுக்கான பதிவிது.

இப்பொழுது இணையதளத்தில் பிட்காயினில் இன்வெஸ்ட் பண்ணவைத்து மோசடி செய்வது நடந்து கொண்டிருக்கிறது. அதனை நம்பி மக்கள் முதலில் சின்ன அமௌண்ட்டை போடுகிறார்கள். அந்த அமௌண்ட்டுக்கு டபுள் அமௌண்ட்டை அவர்கள் கொடுத்துவிடுகிறார்கள். அதன்பிறகு இன்னொருமுறை இன்வெஸ்ட் பண்ணுறாங்க. அதற்கும் அமௌண்ட்டை டபுள் செய்து தருகிறார்கள். ஆனால் அடுத்தமுறை இன்வெஸ்ட் பண்ணும்பொழுது இன்னும் அதிகமாக இன்வெஸ்ட் பண்ணுங்க அப்போதான் மெம்பர்ஷிப் கிடைக்கும், அக்கவுண்டில் கொண்டு சேர்க்க முடியும் என்று பல்வேறு காரணங்களைக் காட்டி பெரிய தொகையை இன்வெஸ்ட் பண்ண வைத்து, பின்னர் ஒண்ணுமில்லாமல் பண்ணிவிட்டுறாங்க.சென்னை கமிஷனர் சொல்லியிருக்கிறார், இந்த குற்றங்களைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய காவலர்களே பணத்தை விட்டு ஏமாந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனவே இந்தப் பணம் போச்சுனா கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். பணம் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போயிருச்சுனா சர்வதேச போலீசாரை நாடவேண்டியிருக்கும். சர்வதேச போலீசாராலேயே ஒன்னும் பண்ண முடியல.

சென்னையில் ஒரு காவலர் 20 லட்சம், இன்னொரு காவலர் 30 லட்சத்தை இழந்திருக்கிறார்கள். பேராசையைத் தூண்டி உங்களை ஏமாத்திருவாங்க. பேராசை பெருநஷ்டம்'' என தெரிவித்துள்ளார்.       


  இது குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு மற்றும் மத்திய நிதியமைசகம் வரைவு மசோதா குறித்து ஒரு பார்வை :-. பலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், “கிரிப்டோகரன்சி என்பது பணமல்ல. அது ஒரு பண்டம். ரிசர்வ் வங்கியால் பணம் தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதற்கு  மட்டுமே உரிமையுள்ளது. தற்போது கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் எந்தவித முறையான சட்டங்களும் இல்லாத நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, தன்னிச்சையாக அதற்குத் தடை விதிக்க முடியாது,“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி தரப்பில், ‘2013 ஆம் ஆண்டு முதலே கிரிப்டோகரன்சி குறித்து நாங்கள் கவனமாக இருந்து வருகிறோம். அது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் ஒரு பிரிவுதான். அதை துவக்கத்திலேயே சரி செய்யாவிட்டால், நாட்டிலுள்ள பணப் பரிமாற்ற முறையில் தாக்கம் ஏற்படுத்தி விடும். ஆகவே கிரிப்டோகரன்சி குறித்து எங்களால் முடிவெடுக்க முடியும்' என வாதிட்ட நிலையில்



 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சி குறித்து கெடுபிடியான சட்டத் திட்டங்களைக் கொண்டு வந்தது. அதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த துறைகள் கிரிப்டோகரன்சி தொடர்பாக எந்த வித சேவையிலும் ஈடுபட முடியாதபடி செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி, 3 மாதத்திற்குள் கிரிப்டோகரன்சி தொடர்பாக தனி நபரிடமோ, தனிப்பட்ட நிறுவனத்திடமோ மேற்கொண்டு வரும் அனைத்து வித வர்த்தகங்களையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டது. குறித்தான வழங்காததால் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோகிங்டன் நாரிமன், அனிருத்தா போஸ் மற்றும் வி ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 180 பக்கங்களுக்கு  விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. பிட்காயின், எத்திரியம் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகள் பல உலக நடைமுறைக்கு வந்து 11 ஆண்டுகள் தான் ஆகின்றன. குறைந்த காலக்கட்டத்தில் இந்த கிரிப்டோகரன்சி துறை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், பெரும் சறுக்கல்களையும் சந்தித்துள்ளது. 




இந்த நிலையற்ற தன்மையால் தான் கிரிப்டோகரன்சிகளை பலரும் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதில்லை. ஆனால், சிலர் கிரிப்டோகரன்சி மூலம் பரிமாற்றம் செய்வதை சட்டபூர்வமாகவும் மாற்றியுள்ளனர்.  2017 ஆம் ஆண்டு, ஜப்பான் பிட்காயினை சட்டப்பூர்வ பணமாக அங்கீகரித்தது. பிட்காயின் எக்ஸ்சேஞ்சுகளையும் அங்கீகரித்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பின்னர் அரசு சார்பில் ஒரு வரைவு மசோதா வெளிவந்த நிலையில் விரைவில் வரிவிதிப்பு குறித்து தக்க முடிவு வருமென எதிர்பார்ப்பு நிலவுகிறது..



. ஆனால் இதை தவறான வழியில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையிலும் மற்றும் இது குறித்து முழுமையான விபரங்கள் அறியாத பலர் யாரோ ஒரு புரோக்கர்  ஏமாற்றி அவர்களது பணம் மோசடி நடந்த நிலையில் தான் இதில் குற்றம் நடக்கிறது இதுவே தமிழகத்தில் காவல்துறை இயக்குனர் வெளியிட்ட பதிவு காணொளி ஆகும்.     இது குறித்து நாம் ஏற்கனவே பல ஆதங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம் அதன் தொடர் நடவடிக்கை பொருளாதார குற்றப்பிரிவு சைபர் குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவு இணைந்து சென்னை மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பெற்ற புகார்கள் மீது நடவடிக்கை உடனடியாக எடுத்தால் மோசடி நபர்கள் சிக்குவது உறுதி இது காலதாமதம் காரணமாக பல ஊழல் மோசடி நபர்கள் இதுவரை சிக்கவில்லை , ஆனால் பாதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அதிக அளவில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த