முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசவ ஜெயந்தியை முன்னிட்டு ஜெகத்குரு பசவேஸ்வராவிற்கு அஞ்சலி

பசவ ஜெயந்தியை முன்னிட்டு ஜெகத்குரு பசவேஸ்வராவிற்கு பிரதமர் மரியாதை

பசவ ஜெயந்தி என்னும் புனித நன்னாளான இன்று, ஜகத்குரு பசவேஸ்வராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெகத்குரு பசவேஸ்வரா பற்றி அவர் பேசி இருந்த உரையையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

“பசவ ஜெயந்தி என்னும் புனித நன்னாளில் ஜகத்குரு பசவேஸ்வராவிற்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது சிந்தனைகளும், லட்சியங்களும் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஆற்றல் அளிக்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜகத்குரு பசவேஸ்வரா பற்றி நான் பேசிய உரையை பகிர்கிறேன்”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.பசவ ஜெயந்தி விழாவையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா பெங்களூருவில் இன்று ஸ்ரீ பசவண்ணாவுக்குப் புகழஞ்சலி செலுத்தினார்

பசவ ஜெயந்தி விழாவையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா  பெங்களூருவில் இன்று ஸ்ரீ பசவண்ணாவுக்குப்

புகழஞ்சலி செலுத்தினார். கர்நாடகா மட்டுமின்றி இந்த நாடும் உலகமும் அமைதி, நல்லிணக்கம், அனைவரையும் உட்படுத்திய ஜனநாயகம் என்ற பாதையில் முன்னேறவேண்டும் என்பதைத் தாம் கூற விரும்புவதாக பசவண்ணாவின் பிறந்த ஆண்டு விழாவில் திரு ஷா கூறினார்.

மற்றொரு நிகழ்ச்சியில் நிருபதுங்கா பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்ததுடன்  பல்வேறு திட்டங்களைத் திரு அமித் ஷா  தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் செய்தார். கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை உட்பட பல பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் மற்றும் அவர்களின் குணாம்சத்தால்  கட்டமைக்கப்படுகிறது என்று திரு அமித் ஷா கூறினார். இந்தக்  கல்லூரியில் நூறு ஆண்டுகளாக அறிவு என்பது வழிபடப்பட்டுள்ளது.  பல மாணவர்கள் கர்நாடகாவிற்கும் நாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.  இந்தக் கல்லூரி பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.  2020லிருந்து இந்தக் கல்லூரி நிருபதுங்கா பல்கலைக்கழகம் என அறியப்படுகிறது. இன்று இது முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி புதிய கல்விக் கொள்கையை 2020ல்  கொண்டு வந்ததாக அமித்ஷா கூறினார். புதிய கல்விக் கொள்கையை முதலில் ஏற்றுக் கொண்ட மாநிலமாக கர்நாடகா உள்ளது என்றும் இதற்காக அதனைத் தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்தியக்  கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்துவதற்குப்  புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.  இத்துடன் இந்தியாவை ஞானத்தின் வல்லரசாக மாற்றுவதற்கும் உலகத்திற்கு வழிகாட்ட இந்தியாவின் பொறுப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பணிக்குழு அமைத்து கர்நாடகா உதாரணமாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.

 பெல்லாரியில் இன்று தடய அறிவியல் பரிசோதனைக் கூடமும் தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். பிராந்திய தடய அறிவியல் பரிசோதனைக்  கூடங்களை மிக நல்ல முறையில் பராமரிக்கும் கொள்கையைக் கர்நாடகா அமல்படுத்துவதற்காக கர்நாடக முதலமைச்சரையும்  உள்துறை அமைச்சரையும் பாராட்டுவதாக அவர் கூறினார்.  அறிவியல்பூர்வமான புலனாய்வு இல்லாமல் தண்டனை கிடைக்கும் விகிதத்தை அதிகரிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது  காவல் துறையில் இ-பீட் என்ற புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகா முழுவதும் இ-பீட் முறை தொடங்கப்பட்டு இருப்பதால்  குறிப்பிட்ட கால வரம்புக்குள் மிகவும் ஏழ்மையான மக்களுக்கும் காவல் துறை சேவை செய்ய இது உதவும் என்று அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...