முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசவ ஜெயந்தியை முன்னிட்டு ஜெகத்குரு பசவேஸ்வராவிற்கு அஞ்சலி

பசவ ஜெயந்தியை முன்னிட்டு ஜெகத்குரு பசவேஸ்வராவிற்கு பிரதமர் மரியாதை

பசவ ஜெயந்தி என்னும் புனித நன்னாளான இன்று, ஜகத்குரு பசவேஸ்வராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெகத்குரு பசவேஸ்வரா பற்றி அவர் பேசி இருந்த உரையையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

“பசவ ஜெயந்தி என்னும் புனித நன்னாளில் ஜகத்குரு பசவேஸ்வராவிற்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது சிந்தனைகளும், லட்சியங்களும் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஆற்றல் அளிக்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜகத்குரு பசவேஸ்வரா பற்றி நான் பேசிய உரையை பகிர்கிறேன்”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.பசவ ஜெயந்தி விழாவையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா பெங்களூருவில் இன்று ஸ்ரீ பசவண்ணாவுக்குப் புகழஞ்சலி செலுத்தினார்

பசவ ஜெயந்தி விழாவையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா  பெங்களூருவில் இன்று ஸ்ரீ பசவண்ணாவுக்குப்

புகழஞ்சலி செலுத்தினார். கர்நாடகா மட்டுமின்றி இந்த நாடும் உலகமும் அமைதி, நல்லிணக்கம், அனைவரையும் உட்படுத்திய ஜனநாயகம் என்ற பாதையில் முன்னேறவேண்டும் என்பதைத் தாம் கூற விரும்புவதாக பசவண்ணாவின் பிறந்த ஆண்டு விழாவில் திரு ஷா கூறினார்.

மற்றொரு நிகழ்ச்சியில் நிருபதுங்கா பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்ததுடன்  பல்வேறு திட்டங்களைத் திரு அமித் ஷா  தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் செய்தார். கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை உட்பட பல பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் மற்றும் அவர்களின் குணாம்சத்தால்  கட்டமைக்கப்படுகிறது என்று திரு அமித் ஷா கூறினார். இந்தக்  கல்லூரியில் நூறு ஆண்டுகளாக அறிவு என்பது வழிபடப்பட்டுள்ளது.  பல மாணவர்கள் கர்நாடகாவிற்கும் நாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.  இந்தக் கல்லூரி பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.  2020லிருந்து இந்தக் கல்லூரி நிருபதுங்கா பல்கலைக்கழகம் என அறியப்படுகிறது. இன்று இது முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி புதிய கல்விக் கொள்கையை 2020ல்  கொண்டு வந்ததாக அமித்ஷா கூறினார். புதிய கல்விக் கொள்கையை முதலில் ஏற்றுக் கொண்ட மாநிலமாக கர்நாடகா உள்ளது என்றும் இதற்காக அதனைத் தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்தியக்  கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்துவதற்குப்  புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.  இத்துடன் இந்தியாவை ஞானத்தின் வல்லரசாக மாற்றுவதற்கும் உலகத்திற்கு வழிகாட்ட இந்தியாவின் பொறுப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பணிக்குழு அமைத்து கர்நாடகா உதாரணமாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.

 பெல்லாரியில் இன்று தடய அறிவியல் பரிசோதனைக் கூடமும் தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். பிராந்திய தடய அறிவியல் பரிசோதனைக்  கூடங்களை மிக நல்ல முறையில் பராமரிக்கும் கொள்கையைக் கர்நாடகா அமல்படுத்துவதற்காக கர்நாடக முதலமைச்சரையும்  உள்துறை அமைச்சரையும் பாராட்டுவதாக அவர் கூறினார்.  அறிவியல்பூர்வமான புலனாய்வு இல்லாமல் தண்டனை கிடைக்கும் விகிதத்தை அதிகரிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது  காவல் துறையில் இ-பீட் என்ற புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகா முழுவதும் இ-பீட் முறை தொடங்கப்பட்டு இருப்பதால்  குறிப்பிட்ட கால வரம்புக்குள் மிகவும் ஏழ்மையான மக்களுக்கும் காவல் துறை சேவை செய்ய இது உதவும் என்று அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த