திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பிரார்த்தனை
திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
நேற்று காலை திருமதி துர்கா ஸ்டாலின் தனது நேர்த்திக்கடனை ஸ்ரீ சௌமிய நாராயண மூர்த்தி பெருமாளிடம் செலுத்துவதற்கு வருகை புரிந்த போது சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் வரவேற்று சிறப்பு தரிசனம் செய்து வைத்தார்கள்.
திருக்கோஷ்டியூர் 108 வைணவ ஸ்தங்களில் ஒன்று இது சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகம் கொண்ட தேவஸ்தானம் இங்கு ஒரு வைணவ அந்தணர் முயற்சி செய்து துவங்கிய விமானத்திற்கு தங்கத்தகடு பொருத்தும் பணி நடந்து வந்த நிலையில் தனது வேண்டுதலை நிறைவேற்ற தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமியநாராயணப்பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை துவக்கி வைத்தார்.
இக்கோவில் அஷ்டாங்க விமானம் மிகவும் பிரசித்தி பெற்றது. 18 முறை வந்த ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றதை இந்த கோபுரத்தில் அமைந்துள்ள கருவரை விமானத்தில் நின்று தான் ராமானுஜர் மந்திர உபதேசத்தை பொது மக்கள் வெளியில் வெளியிட்டார்.
இக்கோவிலில் அமைந்துள்ள அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு வேய கடந்த ஆண்டுகளில் திட்டமிடப்பட்டு முன் பணி நடந்து வருகிறது மதுரை ஆண்டாள் பேரவையினர் 36 கிலோ தங்கம் வழங்க உள்ளனர். முதற்கட்டமாக 4 கிலோ வழங்கியுள்ளனர். கோவிலில் 20 கிலோ தங்கம் இருப்பில் உள்ளது. தங்கத்தகடு வேயும் பணியை துர்கா ஸ்டாலின் நேற்று காலை துவக்கி வைத்தார். ஸ்டாலின் முதல்வராக இக்கோயிலில் துர்கா ஸ்டாலின் நேர்த்தி கடன் செய்ய சங்கல்ப செய்து கொண்டதாகவும், அதை நிறைவேற்ற நேற்று வருகை தந்த நிலையில். மாலை சித்திரை தேரோட்டம் நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்தின் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மேதகு மதுராந்தகி நாச்சியார் தலைமையில் வரவேற்பளித்தனர்.
கருத்துகள்