முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலம் கடந்த நிலையில் சசிகலா நடராஜன் வருகை அரசியலில் பலன் தருமா

 காலம் கடந்த நிலையில் சசிகலா நடராஜன் வருகை அரசியலில் பலன் தருமா ?       


                  சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த தனது ஆதரவாளர் வீட்டுத் திருமண நிகழ்வில் சசிகலா நடராஜன் பங்கேற்றார் திருமண நிகழ்ச்சியில் பேசியவர் குரங்கு கதை சொன்ன நிலையில் அது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில்.

. அவர் பேசிய விபரம்: அ.தி.மு.க. உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும் நானிருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாதென்றார் கட்சியைக் காப்பாற்றி மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்க தகுந்த நேரம் வந்து விட்டதென்றார்






மாங்கொட்டையை ஊன்றி மரமாக வளரச் செய்தால் இஷ்டத்திற்கு மாம்பழங்களை பறித்துச் சாப்பிடலாம் என ஒரு குரங்கு மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீரூற்றியது.சிறிது காலமாகியும் செடி வளரவில்லை. குரங்கிற்கோ அவசரம். அந்த அவசர புத்தி குரங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கொட்டையை எடுத்து பார்ப்பதும் மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது. இதனால் செடி முளைக்கவில்லை.








ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையைத் துார எறிந்து விட்டு வருத்தப்பட்டது. குரங்கின் அவசரப் புத்திதான் அதற்குக் காரணம்.விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால் சில காலம் பொறுமை காக்க வேண்டும்.அதுபோல கட்சியினர் செயல்கள் இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் தான் அதிமுக வலிமை  பெறும். எனப் பேசினார். .தோல்விக்கான மனம் திறந்த சுய பரிசீலனைக்கு அதிமுகவில் யாரும் தயாரில்லை! என்ற நிலையில் அதிகார அரசியலில் முந்துகிற ஒருவர் தற்காப்பு அரசியலுக்கான சண்டையில், சசிகலா நடராஜனைக் கேடயமாக்குகிறார்கள் என்ற விவாதத்தில் முன்னால் முதல்வர் ஒருவர் உள்ளது தான். அந்தக் கேடயம் அவரை காப்பாற்றுமா இல்லை, கதறடிக்குமா என்பதே வினா ?

ஒட்டுமொத்தக் கட்சியும் பொதுக் குழுவைகா கூட்டி சசிகலா நடராஜனைக் கட்சியை விட்டு விலக்கியது! சசிகலாவை எதிர்த்து 90 சதவிகித மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சசிகலா சேர்க்கை என பேச்செடுத்தாலே கட்சிக்குள் எத்தகையை கொந்தளிப்பையும், கோபத்தையும் சந்திக்க நேரும் என்று கூட அவர் மற்றும் அவரை இயக்கும் நபர்களுக்கு நன்றாகத் தெரியும். 

ஆனபோதிலும், தேனி மாவட்ட நிர்வாகிகளை சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் போட வைத்து…, பிள்ளையைக் கிள்ளி  தொட்டிலை ஆட்டிய கதையாக களமாடுவதும் இதில் ஏதோ ஒரு சூட்சும அரசியலை எடப்பாடி  பழனிச்சாமி தரப்பில்  சொல்ல வருகிறார் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில். என அரசியல் அறிந்த பலர் பேசும் நிலையில்

சசிகலா நடராஜன் வருவது அதிமுகவிற்கு சக்தியா? சரிவா? என்பது மற்றொரு வினாவாகும்.  முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயம்  சார்ந்த ஒரு பிரிவு சார்ந்த கட்சி நபர்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அதற்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு பிரிவு  சசிகலா நடராஜன்  வகையறாக்கள்  முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததே.  அதை மறைமுகமாக வழிநடத்திய காலஞ்சென்ற முனைவர் ம.நடராஜன்  மற்றும் ஜெயலலிதாவின்  மறைவிற்குப் பிறகு அதிமுகவிலிருந்து சசிகலா நடராஜன் ஓரங்கட்டப்பட்டதும் முக்குலத்தோரில்  ஒரு பிரிவு கட்சியின் நபர்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த  சட்டமன்றத் தேர்தலின் போது வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் குறித்து அதிமுக அரசு வெளியிட்ட அரசாணையால் தென்மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர் சார்ந்த இரு பிரிவுகளாக உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் அதிருப்தியாலும் மற்றும் கூட்டணிக் கட்சிகள்  தக்க பலன் தராமல் போனதால் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தோல்வியைத் தழுவியது. மேலும், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுகவிலிருந்த முக்குலத்தோரில் இரு பிரிவுகளாக இருந்த.    எம் பி சி  சமுகம் சார்ந்த கட்சியினர் திமுக மற்றும் பாஜக பக்கம் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர்  நகரத் தொடங்கினர்.

கோயமுத்தூர் சார்ந்த

கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்தாலும்  அது அப் பகுதியில் பாஜகவின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும் நிலையில் தென் மாவட்டங்களில் வாக்கு வங்கி குறையத் தொடங்கியது. முக்குலத்தோரில்  இரு பிரிவுகளைச் சேர்ந்த பலர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த போதிலும் இன்னும் அதிக முக்கியத்துவம் வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே முக்குலத்தோர் சார்ந்த அ திமுகவினைச் சேர்ந்த கட்சியினர் சசிகலா நடராஜன் மற்றும் , டி.டி.வி. தினகரன் பக்கம் போகாமல் தடுத்து வைத்திருந்த நிலையில் இந்த மாநிலங்களவைத் தேர்தலில் முக்குலத்தோருக்கான முக்கியத்துவம் இல்லையெனில் திமுக, பாஜக பக்கம் சிறகடித்து ப்பறக்கத் தயாராகி விட்டதாகவும் ஒரு தகவல் தெரிய வருகிறது.

கோயமுத்தூர் சார்ந்த கொங்கு மண்டலத்தை மட்டுமே கைக்குள் வைத்திருக்கும் அதிமுக தலைமை , முக்குலத்தோரில் இரு சமூகத்தில்   முக்கியத்துவம் கொடுத்து தென் மண்டலத்தையும் தன்வசம் வைத்திருக்குமா என்பது ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பைப் பொறுத்திருக்கும் என்கின்றனர் அதிமுகவின் விபரம் அறிந்த பலர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் முக்குலத்தோரின் இரு பிரிவு கோரிக்கையை அதிமுக தலைமை ஏற்றுக்கொள்ள கூடிய கட்டாயமும் இருந்து வருகிறது.   இதில் பிற்படுத்தப்பட்ட சமூகமாக என்றும் இருந்து வரும் ஒரு சமூகத்திற்கான சமூக நீதி அதிமுகவின் கடந்த ஆட்சியில் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை அதற்கேற்றார் போல் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை சனிக்கிழமை திருநெல்வேலியில் நடைபெற்ற முன்னால் அமைச்சர் இசக்கி சுப்பையா இல்ல விழாவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்கள் ஜாதி ஒதுக்கீடுகள் வாங்குவதால் ஜாதிக்கு எந்தப் பயனும் முன்பும் இல்லை இனியும் இருக்கப்போவதில்லை என்றே பலரும் உணரும் நிலையில்.

 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்த்திற்கு முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா பதவி வழங்கிய பிறகு தற்போதைய தலைமை வழங்கவில்லை  என்ற விபரத்தையும் எடுத்துச் சொல்லியுள்ளனர். கட்சியிலிருக்கும் முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகள் சொன்ன கருத்தை பரிசீலனை செய்வதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இவர்கள் ஜாதி உரிமை படி பதவி வாங்க அரசியல் நடத்தி வருகிற நிலையில் ஜாதிக்கு அதனால் பலன் உண்டா என்பது தான் அந்த சமூகத்தின் நலன் சார்ந்த மக்களின் வினா? மற்றும் அவரது அரசியல் புதிய வருகை என்பது அவர் சொன்ன கதை படியே கூறவேண்டுமானால் குரங்கு ஆப்பசைத்த கதை போலாகக்கூடாதென்பதே அக்கட்சியின் தொண்டர்கள் நிலை. தற்போது திமுகவும் பாஜகவும் நேரெதிர் அரசியல் செய்யும் நிலையில் அதிமுகவும் இங்கு தேவை என்பதை மக்கள் மறந்து நிலை . எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வாக்கு வங்கி இப்போது அதிமுக பக்கம் அப்படியே உள்ளதா என்பதே அரசியல் அறிந்தவர்களின் பதில் தேடும் வினா. தற்போதய நிலையில் அக் கட்சி வளர நல்ல தலைவர் தேவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த