முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயர்கல்வி நிறுவனங்களில், உயர்கல்வியில் பல் நுழைவு வெளியேறுதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது

 தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் கூட்டத்தில் ஆய்வு

தேசிய கல்விக் கொள்கை 2020, அணுகுதல், சமத்துவம், உள்ளார்ந்த மற்றும் தரம் ஆகிய குறிக்கோள்களுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது : பிரதமர்

பள்ளிக் குழந்தைகளின் அதிகப்படியான தொழில்நுட்ப வெளிப்பாட்டைத் தவிர்க்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய கலப்பு கற்றல்முறை உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர்

ஆய்வுக்கூடங்கள் உள்ள இடைநிலைப் பள்ளிக்கூடங்கள், மண் பரிசோதனைக்காக தங்களது சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் யோசனை

தேசிய வழிகாட்டுதல் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

கல்வி வங்கியில் பதிவு செய்த சுமார் 400 உயர்கல்வி நிறுவனங்களில், உயர்கல்வியில் பல் நுழைவு வெளியேறுதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது

யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளைப் படிக்க அனுமதிக்கப்படுகின்றனர்

உயர் கல்வி நிறுவனங்களில் முழு அளவிற்கு ஆன்லைன் பாடங்களை நடத்த அனுமதிக்கப்பட்டிருப்பதும், ஆன்லைன் பாடங்களின் அளவை 40% வரை அதிகரித்திருப்பதும் ஆன்லைன் கற்றலுக்கு பெரும் உந்துதலாக அமைந்துள்ளது

கல்வித் தகுதி 

தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்படுவது குறித்து பிரதமர் இன்று(07.05.2022) ஆய்வு செய்தார்.  தேசிய கல்விக் கொள்கை 2020 தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்துவதில்,  இக்கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள அணுகுதல், சமத்துவம், உள்ளார்ந்த மற்றும் தரம் ஆகிய குறிக்கோள்களை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.   படிப்பை பாதியில் நிறுத்திய பள்ளிக் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது,  உயர் கல்வியில் பலமுறை சேர்க்கை வெளியேறுதல் என, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டிருப்பது, ‘அமிர்த காலத்தில்‘ நாம் நுழையும்போது, நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து, செழுமைப்படுத்தும்.  

பள்ளிக் கல்விதேசிய வழிகாட்டுதல் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.  பள்ளிக் கல்வியில், அங்கன்வாடிகளில், தரமான முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்வி, நிபுன் பாரத் (NIPUN Bharat), வித்யா பிரவேஷ், தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி மற்றும் மேம்பட்ட கற்றல் முடிவுகளை ஏற்படுத்த, கலை-ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி,  பொம்மைகள் சார்ந்த கல்விமுறை போன்ற புதுமையான கல்விமுறைகள் பின்பற்றப்படுகிறது.  பள்ளிக் குழந்தைகளின் அதிகப்படியான தொழில்நுட்ப வெளிப்பாட்டைத் தவிர்க்க, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய கலப்பு கற்றல்முறை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 

குழந்தைகள் அங்கன்வாடியிலிருந்து பள்ளிக்கூடங்களில் சேருவதால்,  அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படும் புள்ளிவிவரங்கள், பள்ளிக்கூட தரவுகளுடன் தடையற்ற முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.   தொழில்நுட்ப உதவியுடன் பள்ளிக் குழந்தைகளின் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.  மாணவர்களிடையே கருத்தியல் திறனை உருவாக்க, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொம்மைகளைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  ஆய்வுக்கூடங்கள் உள்ள இடைநிலைப் பள்ளிக்கூடங்கள், மண் பரிசோதனைக்காக தங்களது சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் யோசனை தெரிவித்தார். உயர்கல்வியில் பல்துறை

நெகிழ்வுத் தன்மையைப் பின்பற்றும் விதமாக பல் சேர்க்கை – வெளியேறுதல் மற்றும் வாழ்நாள் முழுவதும் படிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதுடன்,   டிஜிலாக்கர் நடைமுறையில் கல்வி வங்கி தொடங்கப்பட்டிருப்பதும்,  மாணவர்கள் தங்களது சுய வசதிக்கேற்பவும், விருப்பப்படியும் படிப்பதை சாத்தியமாக்கியுள்ளதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.  வாழ்நாள் முழுவதும் படிப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், கற்போரிடையே சிக்கலான மற்றும் பல்துறை சிந்தனையை ஏற்படுத்தவும், பல்கலைகழக மான்யக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரே நேரத்தில் இரண்டு பாடப் பிரிவுகளை படிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (NHEQF) உருவாக்கும் பணிகளும் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது.   தற்போதைய “இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பாடத்திட்ட கட்டமைப்பு மற்றும் வரவுமுறை“ உயர்கல்வி தகுதி கட்டமைப்புக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது. 

 பல் வகைக் கல்வி

பள்ளிக்கூடங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில், ஆன்லைன், திறந்தவெளி மற்றும் பல்-வகை கற்றல் முறை ஊக்குவிக்கப்படுகிறது.   கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட கற்றல் இழப்புகளைக் குறைக்க, இந்த முயற்சி பெரிதும் உதவியதுடன், நாட்டின் தொலைதூர மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கும் கல்வியை கொண்டுசேர்ப்பதிலும் பெரும் பங்காற்றியுள்ளது.SWAYAM, DIKSHA, SWAYAM PRABHA, இணைய ஆய்வகங்கள் மற்றும் இதர ஆன்லைன் ஆதார இணையதளங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதுடன்,  மாணவர் சேர்க்கையையும் அதிகரித்துள்ளன.  இத்தகைய இணையதளங்கள், படிப்பு உபகரணங்களை, செவித்திறன் உடையவர்களுக்கான ஒளிரும் மொழிகள் உட்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கு ஒலி வடிவிலும்  வழங்குகின்றன. 

மேற்குறிப்பிட்டவை தவிர, திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கற்றல் மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள் ஒழுங்குமுறை விதிகளையும் பல்கலைகழக மான்யக்குழு யுஜிசி வெளியிட்டுள்ளது.   இதன்படி,59 உயர்கல்வி நிறுவனங்கள், 351 முழுமையான ஆன்லைன் பாட நிகழ்ச்சிகளையும், 86 உயர்கல்வி நிறுவனங்கள் 1081 திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கற்றல் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றன.   ஒரு நிகழ்ச்சியில் வழங்கப்படும் ஆன்லைன் வழி பாடத்தின் அளவும் 40%  குறைக்கப்பட்டுள்ளது. 

புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் ஸ்டார்ட் அப்

ஸ்டார்ட்-அப் மற்றும் கண்டுபிடிப்பு சூழலை ஊக்குவிக்க, 28 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன்பிரதேசங்களின் உயர்கல்வி நிறுவனங்களில் 2,774 நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன.   ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்த கண்டுபிடிப்பு சாதனை அடிப்படையில் அடல் கல்விநிறுவன தரவரிசைப்படுத்துதல் (ARIIA),  2021 டிசம்பரில் தொடங்கப்பட்டடது.  ARIIA-வில் 1438 நிறுவனங்கள் பங்கேற்றன.  வெரும் பாடமாகப் படிப்பதற்குப் பதிலாக, பரிசோதனைகளுடன் கூடிய கல்வியை ஊக்குவிக்க,  சிந்தனை வளர்ப்பு, மதிப்பீடு மற்றும் பயன்பாடு (IDEA) ஆய்வங்களை அமைக்க, தொழில்துறை பங்களிப்புடன் 100 நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு நிதியுதவி அளிக்கிறது. 

இந்திய மொழிகள் ஊக்குவிப்பு

ஆங்கில அறிவு குறைபாடு, எந்தவொரு மாணவரும் கல்வித் தகுதி பெறுவதை தடுக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, கல்வி மற்றும் பரிசோதனையில் பலமொழி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  இந்த குறிக்கோளை மனதிற்கொண்டு, மாநிலங்கள், அடிப்படை கல்விக்காக இருமொழி / மும்மொழி பாடப்புத்தகங்களை வெளியிடுவதோடு,  DIKSHA தளத்திலும் 33 இந்திய மொழிகளில் பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  தேசிய திறந்தவெளிப் பள்ளியும்,  இடைநிலைக் கல்வி அளவில், இந்திய ஒளிரும் மொழியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

தேசிய தேர்வு முகமையும்13 மொழிகளில், ஜேஇஇ நுழைவுத்தேர்வை நடத்தியுள்ளது.  அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழிபெயர்ப்பு செயலியை உருவாக்கியிருப்பதோடு,  பாடப் புத்தகங்களும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.  ஹிந்தி, மராத்தி, வங்காளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்கள் எழுதும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   2021-22 முதல் 10 மாநிலங்களில் உள்ள 19 பொறியியல் கல்லூரிகளில் 6 இந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன.  பிராந்திய மொழிகளில் கூடுதலாக 30/60 மேலதிக எண் இருக்கைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களில், பிராந்திய மொழிகளில் 50% வரை சேர்த்துக் கொள்ளவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அனுமதி அளித்துள்ளது.  

தேசிய கல்விக்கொள்கை 2020-ன் பரிந்துரைகளின்படி, இந்திய அறிவாற்றல் முறை ஊக்குவிக்கப்படுகிறது.  அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவில், ஒரு இந்திய அறிவாற்றல் முறை பிரிவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 13 இந்திய அறிவாற்றல் முறை மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. 

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர், கல்வித்துறை இணையமைச்சர்கள் திரு.சுபாஷ் சர்கார், திருமதி.அன்னபூர்ணா தேவி மற்றும் கல்வி மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு.ராஜ்குமார் ரஞ்சன் சிங், பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், பிரதமரின் ஆலோசகர், யுஜிசி தலைவர், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் தலைவர், தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலின் தலைவர், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குனர், மற்றும் கல்வி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்