முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிகரித்து வரும் போர் முறைகளுக்கு ஏற்ப திறன்களை வளர்க்க குடியரசு துணைத்தலைவர் அழைப்பு

தகவல் மற்றும் சைபர் போர் போன்ற புதிய மற்றும் அதிகரித்து வரும் போர் முறைகளுக்கு ஏற்ப திறன்களை வளர்க்க குடியரசு துணைத்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்

உங்கள் அனைவருடன் இன்று  கலந்திருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வெலிங்டன் என்பது தேசத்தின் மிகவும் பழமையான கவுரமிக்க  முப்படைகளின் கல்வி நிறுவனமான பாதுகாப்புப் படை வீரர்கள் கல்லூரியின் பிறப்பிடமாக இருப்பதை  நான் அறிவேன். இந்திய ராணுவத்தின், நட்பு ரீதியான வெளிநாடுகளின்  எதிர்கால தலைவர்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட சிவில் அதிகாரிகளுக்கும் பயிற்சியும், கல்வியும் அளிப்பதில் இந்த கல்வி நிறுவனம் சிறந்த பங்களிப்பை செய்வது  உண்மையில் பெருமை கொள்ளத்தக்கதாகும்.


275 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற வரலாறு கொண்டுள்ள மெட்ராஸ் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீரர்களை உங்கள் மத்தியில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதி மற்றும் போரின்போது தங்களது சிறப்பான பங்களிப்பை இந்திய ராணுவத்திற்கு நிருபித்துள்ள சிறந்த வீரர்களுக்கு மெட்ராஸ் படைப்பிரிவு மையம் பயிற்சி அளித்துள்ளது என்பதை நான் அறிவேன். இந்த படைப்பிரிவு பெற்றுள்ள போர் மரியாதைகள் மற்றும் பரிசு சான்றிதழ்களின் முடிவிலாப் பட்டியல், இந்த உண்மைக்கு சான்றாக அமைந்துள்ளன. இந்தக் கூட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் சிலர் அங்கம் வகிக்கும் வெலிங்டனின் ராணுவ மருத்துவமனை, வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ படைப் பிரிவினருக்கு தலைசிறந்த சேவைகளை வழங்கியுள்ளதையும் நான் அறிவேன்.

நீலகிரியின் ஆரோக்கியமான, இதமான பருவநிலையாலும், ஆயுதப்படைகளுடனான வெலிங்டனின் தொடர்பாலும் நமது மறைந்த ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா உள்ளிட்ட மூத்த படைவீரர்களின் விரும்பத்தக்க ஓய்வுக்குப் பிறகான தலமாக இந்த இடம் உருவாகியுள்ளது. பார்வையாளர்களாக உங்களில் ஒரு சிலரை காண்பதில் மகிழ்ச்சி. தேச கட்டமைப்பிற்கான உங்கள் ஒவ்வொருவரின் அபரிமிதமான பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம்.

அன்பார்ந்த நண்பர்களே,

நீங்கள் அறிந்தவாறு இன்று, மிக சிக்கலான, கணிக்க முடியாத புவி-அரசியல் சூழலில் இந்தியா பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வெளியிலிருந்தும், உள்ளிருந்தும் சமச்சீர் மற்றும் சமச்சீரற்ற அச்சுறுத்தல்களை நாம் சந்தித்து வருகிறோம். எனவே எந்த ஒரு சவாலை சமாளிக்கவும், எந்த ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலை உறுதியாக முறியடிக்கவும் நமது ஆயுதப்படைகள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். இந்தியா தனது தோற்றத்தில் விரிவாக்கவாதியாக வரலாற்றில் ஒரு போதும் இருந்ததில்லை. எப்போதும் அமைதியான இணக்கமான வாழ்வுடனும், பயங்கரவாதம் மற்றும் சீர்குலைவு சக்திகளை தடுக்கும் வகையிலும் நமது அணுகுமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் விரோத முயற்சிகள் அனைத்தும் நமது பாதுகாப்பு படையால் தீவிரமாக முறியடிக்கப்படும் என்று நாடு நம்புகிறது.

நீங்கள் அறிந்தவாறு இன்று போர்கள், போர்க்களத்தில் மட்டுமே நடைபெறுவதில்லை. மோதல்களின் கலப்பின தன்மை, வழக்கமான அர்த்தத்தில் தெளிவான வெற்றியாளர் அல்லது தோல்வியாளர்களை தீர்மானிப்பதை கடினமாக்குகிறது. தகவல் மற்றும் சைபர் போர், ட்ரோன்கள், ரோபோட்டிக்ஸ் மற்றும் விண்வெளி அடிப்படையிலான சொத்துக்களின் அதிகரித்துவரும் பயன்பாடு ஆகியவை போர்க்களத்திற்கு ஒரு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே புதிய மற்றும் வளர்ந்து வரும் இதுபோன்ற துறைகளில் நமது ஆயுதப்படைகள் கவனம் செலுத்துவதுடன், தங்களது திறனையும் மேம்படுத்த வேண்டும். இந்திய ராணுவத்தை ‘எதிர்கால சக்தியாக' உருவாக்குவதே நமது தொலைநோக்குப் பார்வையாக இருக்க வேண்டும்.

அன்பான அதிகாரிகளே! 

எதிர்காலத்தில் நாம் அடியெடுத்து வைக்கும் நிலையில் நீங்கள் ஒற்றை சேவை திறனில் இருந்து பன்முக சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பட்டம் பெற  இருக்கிறீர்கள். இதற்கு  கூட்டாகவும், பல நிலை செயல்பாடுகளையும் முழுமையாகப் புரிந்து கொள்வது தேவைப்படுகிறது.  கவுரமிக்க இந்த கல்வி நிறுவனத்தை இயக்குகின்ற ஊழியர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் இருக்கும் நிலையில், மாற்றத்தின் கிரியா ஊக்கிகளாக நீங்கள் இருக்கவேண்டும். கூட்டு உணர்வை வளர்த்து அனைத்து மாணவர்களிடையே ஆற்றலை உருவாக்கி எதிர்கால தலைவர்களையும், வீரர்களையும் வார்த்தெடுக்க வேண்டும்.

சமர்த், சாக்ஷம் பாரத் ஆகியவற்றை உருவாக்கும் நமது முயற்சியில் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் தற்சார்பு அடைவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பையும் உள்நாட்டு தயாரிப்பையும் மேம்படுத்த அரசு பல  கொள்கை முன் முயற்சிகளையும் சீர்திருத்தங்களையும் மேற்கொள்வது பாராட்டதக்கதாகும். மற்ற பல முக்கிய கொள்கை நடவடிக்கைகளுக்கு அப்பால், பாதுகாப்பு தளவாளடங்கள் உற்பத்தி வாரியத்தை ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களாக மாற்றியதும் பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இது திறனை விரிவுபடுத்தும்போது தன்னாட்சியை வழங்கும்.

தற்போது புவிசார்ந்த உத்தி மற்றும் புவிசார்ந்த அரசியல் நிர்பந்தங்களால் பயங்கரவாதமும், காலநிலை மாற்றமும், பாதுகாப்பு விஷயத்தில் சிக்கலை அதிகரிக்கிறது. எனவே, இதுபோன்ற விஷயங்களில் ஆழமான புரிதல் தேவைப்படுகிறது.

ஒரு தேசம் என்ற முறையில், மாறிவரும் உலக ஒழுங்கில் நமது தேச நலன்களை பாதுகாப்பது மட்டுமின்றி, உருவாகி வரும் பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளவேண்டும்.  காலத்தோடு பாதுகாப்பு கோட்பாடுகளில் மாற்றம் செய்வது இன்றைய எதார்த்தமாகும். இந்த சவால்களை கையாள நமது தயார் நிலைகளை நிரந்தரமாக வலுப்படுத்துவதும், திடமான உத்திகளை வகுப்பதும் நமக்கு தேவையாகும்.

அறிவுப் போராளிகளாகவும்,சிந்தனை தலைவர்களாகவும் இருக்கின்ற 21-ஆம் நூற்றாண்டு ராணுவ அதிகாரிகளை உருவாக்கும் திறன் சார்ந்த குருக்களாக இங்குள்ள ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் உள்ளனர். கொவிட் காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் கல்லு ரி இணையதளத்தை பயன்படுத்தி பயிற்சி அளிக்கும் முறைகளை வெற்றிகரமாக செயல்படுத்தியதை நான் அறிகிறேன்.

நமது நாட்டின் ராணுவம் நமது மகத்தான தேசத்தின் மிகவும் மதிக்கத்தக்க அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. தங்களின் அயராத முயற்சிகள் மற்றும் மகத்தான தியாகங்கள் மூலம் நாட்டு மக்களின் மதிப்பை அவர்கள் பெற்றியிருக்கிறார்கள்.  தங்களின் தியாகங்களால் நமது வரலாற்று பக்கங்களில் பல புகழ்மிக்க அத்தியாயங்களை நமது வீரமிக்க வீரர்கள் எழுதியிருக்கிறார்கள்.  வெளியாரின் ஆக்கிரமிப்பு அல்லது ஊடுறுவலை எதிர்த்த போராட்டமாக இருந்தாலும், இயற்கை பேரழிவு காலத்தில்  சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதாக இருந்தாலும் சீருடையில் உள்ள ஆண்களும், பெண்களும் எப்போதும் தேசத்தை பெருமையடைய  செய்திருக்கிறார்கள்.

நமது எல்லை பகுதிகளின் நிலைமையை, அண்மைக்கால  கொவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதில் ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும்  மெச்சத்தக்க மனஉறுதியை வெளிப்படுத்தியதற்காக, நான் எனது பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன். ராணுவ வீரர்களுடன் நான் கலந்துரையாடும்போது மகிழ்ச்சியடைகிறேன். கடமையில் மிகுந்த ஊக்கம் தரும் உயர்வான மனஉறுதி அர்ப்பணிப்பு ஆகியவற்றை அவர்களிடம் நான் எப்போதும் காண்கிறேன்.

நமது தீரமிக்க ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்கள் குறித்து மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியமானதாகும். அண்மையில் ஹரித்வாரில் உள்ள  பல்கலைக்கழகத்திற்கு நான் பயணம் செய்தபோது, அவர்கள் “நாயகர்களின் சுவர்” ஒன்றை அமைத்திருந்தார்கள். அதில் பரம் வீர் சக்ரா  விருது  பெற்றவர்களின் படங்களையும், அவர்களின் விவரங்களையும் பொறித்து அலங்கரித்திருந்தார்கள்.  நமது இளம் தலைமுறையினரிடம் தேச பக்த உணர்வை ஊட்டவும், ராணுவ வீரர்களுக்கு மதிப்பளிக்கவும் இதர கல்வி நிறுவனங்களிலும் இத்தகையை நினைவிடங்களை அமைக்க வேண்டும்.

இனிய நண்பர்களே,

இந்திய வரலாற்றில் பெண் வீராங்கனைகளின் புகழ்மிக்க பாரம்பரியத்திற்கு சிறப்பிடம் உள்ளது. பேரரசன் சந்திரகுப்த மவுரியாவுக்கு சிறப்பான போர்க்கலையில் பயிற்சி பெற்ற வீராங்கனைகளின் குழு மெய்க்காவல் படையாக இருந்தது என கிரேக்க வரலாற்று அறிஞர் மெகஸ்தனிஸ் கூறியுள்ளார். இடைக்காலத்திலும், காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய காலத்திலும், இந்திய பெண்கள் பெரும் துணிச்சலையும், போராட்டக் குணத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். கோண்டுவானாவைச் சேர்ந்த ராணி துர்காவதி, துளுவ ராணி அப்பக்கா, ருத்ரமாதேவி, கிட்டூர் சென்னம்மா, ராணி வேலு நாச்சியார், லட்சுமி பாய், பேகம் ஹசரத் மஹால் ஆகியோர் மிகச் சிறந்த ராணுவ வீரத்தை பறைசாற்றிய உதாரண பெண்மணிகள் ஆவர். பகைவர்களும் அவர்களது வீரத்தை பாராட்டியுள்ளனர்.

முப்படைகளிலும் பெண்களை அதிகாரப்படுத்துதலை நோக்கிய பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  அனைத்து சைனிக் பள்ளிகளும், பெருமைமிகு தேசிய பாதுகாப்பு அகாடமியும், தற்போது பெண்களுக்கு இடம் அளிக்கின்றன.   விமானப்படை, கடற்படை, கப்பல்கள், ராணுவ காவல்படை, வெளிநாடுகளுக்கான படைகள் ஆகியவற்றிலும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருவதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவை அனைத்தும் பாராட்டத்தக்க அறிகுறிகளாகும். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடாகும்.

நிறைவாக எதிர்கால தலைமையையும் ராணுவ படைகளின் வீரர்களையும் உருவாக்குவதை நோக்கிய சிறந்த முயற்சிகளுக்காக கல்லூரியையும், எம்ஆர்சியையும், அதன்  ஆசிரியர்களையும்,  நான் வாழ்த்துகிறேன்.

ஜெய் ஹிந்த்!!

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திரு கே ராமச்சந்திரன், ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் எஸ் மோகன், ராணுவத்தின் மதிப்புமிகு உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்







-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த