முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரிக்ஸ் வர்த்தக மன்றம் 2022-இன் துவக்க விழாவில் பிரதமர் உரை

பிரிக்ஸ் வர்த்தக மன்றம் 2022-இன் துவக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

மாண்புமிகு பெருமக்களே,

பிரிக்ஸ் வர்த்தக சமூகத்தின் தலைவர்களே,

வணக்கம்!

வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் இந்தக் குழு, சர்வதேச வளர்ச்சியின் உந்துசக்தியாக வளரும் என்ற நம்பிக்கையோடு பிரிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டது.


ஒட்டுமொத்த உலகமும் கொவிட் தொற்றுக்குப் பிந்தைய நிவாரணத்தில் இன்று கவனம் செலுத்தி வரும் வேளையில், பிரிக்ஸ் நாடுகளின்  பங்களிப்பு மீண்டும் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும்.

நண்பர்களே,

பெருந்தொற்றினால் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக “சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்” என்ற தாரக மந்திரத்தை இந்தியாவில் நாங்கள் பின்பற்றுகிறோம்.

இந்திய பொருளாதாரத்தின் செயல்பாடுகளிலிருந்து இந்த அணுகுமுறையின் பலன்கள் நிரூபணமாகின்றன.

விரைவாக வளர்ந்து வரும் மாபெரும் பொருளாதாரமாக உருவாகும் வகையில், இந்த ஆண்டு 7.5% வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

வளர்ந்து வரும் 'புதிய இந்தியாவின்’ ஒவ்வொரு துறையிலும் உருமாறும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நான்கு முக்கிய அம்சங்களில் இன்று உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

முதலாவதாக, இந்தியாவின் தற்போதைய பொருளாதார மீட்சியின் முக்கிய தூணாக தொழில்நுட்ப வளர்ச்சி விளங்குகிறது.

ஒவ்வொரு துறையிலும் புதுமைகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.

விண்வெளி, கடல்சார் பொருளாதாரம், பசுமை ஹைட்ரஜன், தூய்மையான எரிசக்தி, ட்ரோன்கள், புவி இடம்சார்ந்த தரவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உகந்த கொள்கைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த சூழல்களுள் ஒன்றாக இந்தியா உள்ளது. அதிகரித்து வரும் இந்திய புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் இது பிரதிபலிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 70,000 புத்தொழில் நிறுவனங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவை அதிக முதலீட்டு நிறுவனங்களாக செயல்படுவதுடன், அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

இரண்டாவதாக, பெருந்தொற்றின் போதும், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான ஏராளமான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வந்தது.

வர்த்தகங்கள் மீது இருந்து வந்த சுமைகளைக் குறைப்பதற்கு ஆயிரக்கணக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அரசின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் கூடுதல் வெளிப்படைத் தன்மையையும், நிலைத்தன்மையையும் கொண்டு வருவதற்கான பணிகள் மாபெரும் அளவில் நடைபெற்று வருகின்றன.

மூன்றாவதாக, உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும், அவற்றை விரிவுபடுத்தும் பணிகள் மிகப்பெரும் அளவில் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காக, தேசிய செயல்திட்டம் ஒன்றை இந்தியா தயாரித்துள்ளது.

தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 1.5 ட்ரில்லியன் டாலர் அளவிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

நான்காவதாக, தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் டிஜிட்டல்  பரிவர்த்தனைகளைப் போல உலக அரங்கில் இதுவரை நடைபெற்றதில்லை.

2025-ஆம் ஆண்டுவாக்கில் இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரை எட்டும்.

டிஜிட்டல் துறையின் வளர்ச்சியால் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

எங்களது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் 4.4 மில்லியன் தொழில்வல்லுனர்களில் 36%, பெண்கள்.

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி உள்ளடக்கத்தின் மூலம் கிடைத்த அதிகபட்ச பயனும் எங்களது கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களைச் சென்றடைந்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டு வரும் இத்தகைய உருமாறும் மாற்றம் குறித்து பிரிக்ஸ் பெண்கள் வர்த்தக கூட்டணி ஆய்வு மேற்கொள்ளலாம்.

அதேபோல், புதிய கண்டுபிடிப்புகளால் வழிநடத்தப்படும் பொருளாதார மீட்சி  குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனையையும் நாம் மேற்கொள்ளலாம்.

நமது புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையே அவ்வப்போது பரிமாற்றங்கள் செய்வதற்கான தளத்தையும் பிரிக்ஸ் வர்த்தக மன்றம் உருவாக்குமாறு நான் பரிந்துரை செய்கிறேன்.

பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் இன்றைய ஆலோசனை மிகுந்த பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

அனைவருக்கும் நல்வாழ்த்துககள்.

நன்றி.

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த