முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதான சுரங்கப்பாதை மற்றும் ஐந்து சுரங்கப்பாதைகள் பிரகதி மைதான மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக அர்ப்பணிக்கப்பட்டது

 பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்






பிரதான சுரங்கப்பாதை மற்றும் ஐந்து சுரங்கப்பாதைகள் பிரகதி மைதான மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக அர்ப்பணிக்கப்பட்டது

"இது ஒரு புதிய இந்தியா, இது பிரச்சனைகளை தீர்க்கும், புதிய உறுதிமொழிகளை எடுத்து, அந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அயராது உழைக்கும்"

"21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப பிரக்தி மைதானத்தை மாற்றும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது"

"நாட்டின் தலைநகரில் உலகத் தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கான அதிநவீன வசதிகள், கண்காட்சி அரங்குகள் ஆகியவற்றிற்காக இந்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது"

“மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நவீன உள்கட்டமைப்பு டெல்லியின் அமைப்பை மாற்றி நவீனமாக்குகிறது. இந்த மாற்றம் விதியை மாற்றுவதற்கான ஒரு ஊடகமாகும்’’

"உள்கட்டமைப்பின் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்துவது சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதன் மூலம் இயக்கப்படுகிறது"

"உலகின் சிறந்த இணைக்கப்பட்ட தலைநகரங்களில் ஒன்றாக டெல்லி உருவாகி வருகிறது"

"விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் என்பது சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸின் ஒரு பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் பிரதான சுரங்கப்பாதை மற்றும் ஐந்து சுரங்கப்பாதைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டமானது பிரகதி மைதான மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு ஹர்தீப் சிங் பூரி, திரு சோம் பிரகாஷ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திரு கவுஷல் கிஷோர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இத்திட்டத்தை தில்லி மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய பெரிய பரிசு என்றார். போக்குவரத்து நெரிசல் மற்றும் தொற்றுநோய் காரணமாக திட்டத்தை முடிப்பதில் ஏற்பட்ட சவாலின் தன்மையை அவர் நினைவு கூர்ந்தார். புதிய இந்தியாவின் புதிய பணி கலாச்சாரம் மற்றும் திட்டத்தை முடித்த தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களை அவர் பாராட்டினார். "இது ஒரு புதிய இந்தியா, இது பிரச்சனைகளை தீர்க்கிறது, புதிய உறுதிமொழிகளை எடுக்கிறது. அந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அயராது உழைக்கிறது" என்று பிரதமர் கூறினார்.

21ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப பிரக்தி மைதானத்தை மாற்றும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவை மாற்றினாலும், இந்தியாவைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பிரக்தி மைதானம் முன்முயற்சியின்மை மற்றும் அரசியலின் பற்றாக்குறையால் பின்தங்கியுள்ளது என்று அவர் வருத்தப்பட்டார். "துரதிர்ஷ்டவசமாக பிரகதி மைதானத்தில் 'பிரகதி' (முன்னேற்றம்) அதிகமாக இல்லை" என்று அவர் கூறினார். இதற்கு முன் பல ஆரவாரங்கள் மற்றும் விளம்பரங்கள் செய்திருந்தபோதிலும், இது மாற்றப்படவில்லை. துவாரகாவில் உள்ள சர்வதேச மாநாடு ,கண்காட்சி மையம் மற்றும் மறுவடிவமைப்பு திட்டம் போன்ற நிறுவனங்களைப் பற்றி பேசுகையில், "நாட்டின் தலைநகரில் நவீன வசதிகள், உலகத் தரம் வாய்ந்த நிகழ்வுகளுக்கான கண்காட்சி அரங்குகள் ஆகியவற்றிற்காக இந்திய அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது. “மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நவீன உள்கட்டமைப்பு டெல்லியின் அமைப்பை மாற்றி நவீனமாக்குகிறது. இந்த மாற்றம் விதியை மாற்றுவதற்கான ஒரு ஊடகமாகும்" என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்துவது, சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதன் மூலம் இயக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் காலநிலை உணர்வு உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம் மற்றும் நாட்டிற்காக உழைக்கும் மக்களைக் கவனித்துக் கொள்ளும் மனப்பான்மைக்கு உதாரணமாக ஆப்பிரிக்க அவென்யூ மற்றும் கஸ்தூரிபா காந்தி சாலையில் உள்ள புதிய பாதுகாப்பு அலுவலக வளாகத்தை பிரதமர் எடுத்துக்காட்டினார். மேலும், சென்ட்ரல் விஸ்டா திட்டம் வேகமாக நடைபெற்று வருவதாக திருப்தி தெரிவித்த அவர், வரும் நாட்களில் இந்தியாவின் தலைநகரம் உலக அளவில் பேசப்படும் விஷயமாகவும், இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகவும் இருக்கும் என்றார்.

நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பு பற்றி குறிப்பிட்ட பிரதமர்,  ஒரு மதிப்பீட்டின்படி 55 லட்சம் லிட்டர் எரிபொருள், போக்குவரத்து நெரிசல் ஆகியவை 5 லட்சம் மரங்களை நடுவதற்கு சமமான சுற்றுச்சூழல் ஈவுத்தொகைக்கு வழிவகுக்கும் வகையில் ஒருங்கிணைந்த வழித்தடத்தால்  கிடைக்கும் பெரும் நன்மைகள் குறித்து விளக்கியதுடன், வாழ்க்கை வசதியை மேம்படுத்த இந்த நிரந்தர தீர்வுகள் காலத்தின் தேவை என்றார். “கடந்த 8 ஆண்டுகளில், தில்லி-என்சிஆர் பிரச்சனைகளை தீர்க்க முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு  நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த 8 ஆண்டுகளில், தில்லி-என்.சி.ஆரில் மெட்ரோ சேவை 193 கி.மீ முதல் 400 கி.மீ ஆக விரிவடைந்துள்ளது. மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு புற விரைவுச்சாலை, தில்லி-மீரட் விரைவுச்சாலை ஆகியவை தில்லி மக்களுக்கு பெரிதும் உதவியுள்ளன. காசி ரயில் நிலையத்தில் மக்களுடன் உரையாடியதைக் குறிப்பிட்ட பிரதமர், சாமானியர்களின் மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த மாற்றத்திற்கு ஏற்ப செயல்பட அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். தில்லி-மும்பை, தில்லி-டேராடூன், தில்லி-அமிர்தசரஸ் ,தில்லி-சண்டிகர், தில்லி-ஜெய்ப்பூர் விரைவுச்சாலைகள் தில்லியை உலகின் சிறந்த இணைக்கப்பட்ட தலைநகரங்களில் ஒன்றாக மாற்றுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தில்லி மீரட் விரைவு ரயில் அமைப்பு குறித்தும் அவர் பேசினார். இந்தியாவின் தலைநகராக தில்லியின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தில்லி மீரட் விரைவு ரயில் அமைப்பு, தொழில் வல்லுநர்கள், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் பயணிகள், டாக்சி-ஆட்டோ ஓட்டுநர்கள், வணிக சமூகத்தினர் ஆகியோருக்கு பயனளிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தில்லி மீரட் விரைவு ரயில் அமைப்பு குறித்தும் பேசினார்.

பிரதமர் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை மூலம் நாடு பலதரப்பட்ட இணைப்பை உருவாக்கி வருகிறது என்று பிரதமர் கூறினார். பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் என்பது சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸின் அங்கம் என்று அவர் கூறினார். சமீபத்தில் தர்மசாலாவில் நடைபெற்ற தலைமைச் செயலாளர் மாநாட்டில், விரைவுசக்தியை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது குறித்து பிரதமர் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். 'அமிர்த கால' நிகழ்ச்சியின் போது, "நாட்டின் மெட்ரோ நகரங்களின் நோக்கத்தை விரிவுபடுத்துவதும், அடுக்கு-2, அடுக்கு-3 நகரங்களில் சிறந்த திட்டமிடலுடன் செயல்படுவதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். வரவிருக்கும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு, நகரங்களை பசுமையாகவும், தூய்மையாகவும், நட்புறவாகவும் மாற்ற வேண்டும். நகரமயமாக்கலை சவாலாகக் கருதாமல் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால், அது நாட்டின் பன்மடங்கு வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று பிரதமர்

முதல்முறையாக, எந்த ஒரு அரசும் செய்யாத அளவுக்கு , இவ்வளவு பெரிய அளவில் நகர்ப்புற திட்டமிடலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். நகர்ப்புற ஏழைகள் முதல் நகர்ப்புற நடுத்தர மக்கள் வரை அனைவருக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 1 கோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கு உறுதியான  வீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான நடுத்தரக் குடும்பங்களுக்கும் வீடு கட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நகரங்களில் நவீன பொதுப் போக்குவரத்தில் கவனம் செலுத்தினால், சிஎன்ஜி அடிப்படையிலான இயக்கம் மற்றும் மின்சார இயக்கத்தின் உள்கட்டமைப்பு ஆகியவையும் முன்னுரிமை பெறும். மத்திய அரசின் எப்ஏஎம்இ  திட்டம் இதற்கு சிறந்த உதாரணம் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

வாகனத்தை விட்டு வெளியே வந்து சுரங்கப்பாதையில் நடந்து சென்ற பிரதமர், சுரங்கப்பாதையில் உள்ள கலைப்படைப்புகள் திட்டமிட்ட பணிகளுக்கு அப்பாற்பட்டு மதிப்பு கூட்டியிருப்பதையும், ஒரே பாரதம் உன்னத பாரதம்  பற்றிய சிறந்த ஆய்வு மையமாக இருப்பதாகவும் கூறினார்.  ஒருவேளை, இது உலகின் மிக நீளமான கலைக்கூடங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமைகளில் சில மணிநேரங்களுக்கு சுரங்கப்பாதையை பள்ளிக் குழந்தைகள் மற்றும் பாதசாரிகள் பார்வைக்காக அனுமதிக்க  வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

திட்டத்தின் விவரங்கள்:

பிரகதி மைதானம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டம் ரூ. 920 கோடி, செலவில் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவிடன் உருவாக்கப்பட்டது. பிரகதி மைதானத்தில் உருவாக்கப்பட்டு வரும் புதிய உலகத் தரம் வாய்ந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கு தொந்தரவு இல்லாத மற்றும் சுமூகமான அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் பிரகதி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எளிதாக பங்கேற்க முடியும்.

எவ்வாறாயினும், திட்டத்தின் தாக்கம் பிரகதி மைதானத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும், ஏனெனில் இது தொந்தரவு இல்லாத வாகன இயக்கத்தை உறுதி செய்யும், பயணிகளின் நேரத்தையும் செலவையும் பெரிய அளவில் சேமிக்க உதவுகிறது. நகர்ப்புற உள்கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் மக்கள் எளிதாக வாழ்வதை உறுதிசெய்வது அரசாங்கத்தின் மேற்பார்வையின் ஒரு பகுதியாகும்.

பிரதான சுரங்கப்பாதை சுற்றுவட்டப் பாதையை இந்தியா கேட் உடன் புரானா கிலா சாலை, பிரகதி மைதானம் வழியாக இணைக்கிறது. ஆறு வழித்தடமாக பிரிக்கப்பட்ட சுரங்கப்பாதையானது பிரகதி மைதானத்தின் பெரிய அடித்தள வாகன நிறுத்துமிடத்திற்கான அணுகல் உட்பட பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. சுரங்கப்பாதையின் ஒரு தனித்துவமான கூறு என்னவென்றால், வாகன நிறுத்துமிடத்தின் இருபுறமும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பிரதான சுரங்கப்பாதை சாலைக்கு கீழே இரண்டு குறுக்கு சுரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. சிறந்த தீத்தடுப்பு மேலாண்மை , நவீன காற்றோட்டம் மற்றும் தானியங்கி வடிகால், டிஜிட்டல் முறையில் கட்டுப்படுத்தப்படும் சிசிடிவி அமைப்பு மற்றும் சுரங்கப்பாதைக்குள் பொது அறிவிப்பு அமைப்பு போன்ற போக்குவரத்தை சீராக இயக்குவதற்கான சமீபத்திய உலகளாவிய தரநிலை வசதிகளுடன் இது நவீனப்படுத்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை பைரோன் மார்க்கிற்கு மாற்று பாதையாக செயல்படும், இது பைரோன் மார்க்கின் போக்குவரத்தில் பாதிக்கு மேல் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுரங்கப்பாதையுடன், மதுரா சாலையில் நான்கு, பைரன் மார்க்கில் ஒன்று மற்றும் ரிங் ரோடு மற்றும் பைரோன் மார்க்கின் சந்திப்பில் ஆறு பாதாளச் சாலைகள் இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த