முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டம் சட்ட விதிகளின் படி நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன

அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுமென்று அறிவிப்பு வந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி


திண்டுக்கல் மாவட்டம் சானார்பட்டி அருகில் ஆவிலிப்பட்டி வசிக்கும் சூரியமூர்த்தி தான் அதிமுக உறுப்பினர் எனக் கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2017 ஆம் ஆண்டில் கட்சியின் விதிகளுக்கு மாறாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதானென்று இதுவரை எந்த ஒரு நீதிமன்றமும் தெரிவிக்காத நிலையில் ஜூன் 23 ஆம் தேதி விதிமுறைகளுக்கு முரணாகத் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது கட்சியின் விதிகளுக்கு எதிரானது. எனவே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்த போது சூரியமூர்த்தி மனுவை நிராகரிக்கக் கோரிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து பதில் மனு தாக்கல் செய்திருந்ததையடுத்து வழக்கு ஜூலை மாதம் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென சூரியமூர்த்தி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டதில், ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதால் அவரது வழக்கை முன்பே விசாரிக்க வேண்டுமென்று கோரியிருந்ததையடுத்து, இந்த வழக்கை நாளை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



அதோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே நடந்து வரும் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு விசாரணை நடந்து நிலுவையில் உள்ள CS ,102/2022 வழக்கில் நீதியரசர் வேல்முருகன் வழங்கிய உத்தரவு ஏற்கனவே இருக்கும் நிலையில் அதன் முடிவுகளை மீறி பொதுக்குழுவில் அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிமுறைகள் திருத்தம் செய்ய முடியாது என்ற நிலையில் தற்போது சூரிய மூர்த்தி வழக்கில் சிவில் நீதிமன்றம் வழங்கப் போகும் உத்தரவு தான் தற்போது கட்சியின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் என்பதே தற்போதைய நிலை.எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிக ஆதரவிருப்பதாகத் தெரிந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் கூடுதல் அதிகாரத்தை கட்சியில் வைத்திருக்கிறார். இதை எல்லாம் மீறி ஒருவேளை ஒரே தலைமைக்காக கட்சி விதிகள் திருத்தப்பட்டு எடப்பாடி கே.பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டால், இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் மூலம் முடக்குவதற்கான அரசியல் காய்களை ஓ.பன்னீர்செல்வம் நகர்த்துவார் என்றே தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.





இதுகுறித்து கடிதம் ஒன்றும் ஓபிஎஸ் தரப்பிலிருந்து வெளியானதாக  தற்போது பரபரப்பை ஏற்படுத்தியதும். கவனிக்க வேண்டும் இது பற்றிய சட்ட ஆலோசனைகளையும், கட்சியின் அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிகள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற கட்சி துவங்கிய காலத்தின் மூத்த நிர்வாகியும் முன்னால் அமைச்சருமான பன்ருட்டி எஸ்.ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகவும் தகவல்கள் வருகிறது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் விவகாரத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி  தான் வெற்றி பெற வேண்டும் என சி.வி.சண்முகம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் விருப்பங்கள் என்பதை விட திரு. பன்னீர் செல்வம் சார்ந்த சாதியினரால் தான் வீழ்த்தப்படுவார் என்பதற்காகவே மசோதாவை நிறைவேற்றியதன் மூலம்,(அது உச்ச நீதிமன்றத்தால் ரத்தானது) தற்போது 64 சட்டமன்ற உறுப்பினர்களை தன் கையில் வைத்துக் கொண்டு அரசியல் ஆட்டம் நடத்தும் நிலையில்.



உயர்மட்டக் குழுவிலும் தனது ஆள்களை வைத்துக் கொண்டுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வத்திற்கு திருசங்கு சொர்க்கம் தான். என்றாலும் அதிமுக தொண்டர்களின் இயக்கம். நாங்கள் இணைந்த போது, பொதுச்செயலாளர் பொறுப்பு அம்மாவுக்கு மட்டுமே உரித்தானது என்று முடிவெடுத்தோம். அப்பதவியில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்றே இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. தினகரன் அவர்கள் 18 உறுப்பினர்களை வைத்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர முயன்றதால் தான் இணைப்பு அவசியமாகியது. அதை நாங்கள் எதிர்த்ததால் தான், 5 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு காப்பாற்றப்பட்டது. (இதை அவர் கூறுவது உண்மை இல்லை என்று நாம் அறிந்த நிலையில்) துணை முதல்வர் பதவியையே பிரதமர் ஏற்றுக்கொள்ளச் சொன்னதால் தான் ஏற்றேன். எடப்பாடி  கே.பழனிச்சாமி அவர்கள் அழைத்ததின் பேரில், மாதவரம் மூர்த்தி அவர்கள் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்று பேசினார்.


இந்த அஜென்டா எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னதால், பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம், அமைதி காக்க வேண்டும். தொண்டர்களைக் காப்பாற்றவே இந்த இயக்கத்தில் தான் உள்ளேன் எனவும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் 3 மாதங்கள் மட்டுமே முதல்வராக இருப்பேன், பின்னர் வேறு ஒருவரை தேர்வு செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியே முதல்வராக பதவியேற்றேன். பதவியை நான் விரும்பவில்லை. தொண்டர்களிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது. எதிர்க்கட்சியாக நாம் இருக்கும்போது, ஆட்சியை மீண்டும் அமைப்பது எப்படி என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் இது தேவையா என்று தான் என்னை சந்தித்த நிர்வாகிகளிடம் கேட்டுள்ளேன். இரட்டை தலைமை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. பொதுச்செயலாளர் பதவி காலஞ்சென்ற ஜெயலலிதா லுக்கு மட் மட்டுமே உரித்தானது.? (இது எம்ஜிஆர் கட்சி துவங்கி நடத்தி வந்த நிலையில் அப்போது இராகவானந்தம் பொதுச்செயலாளர் அதன் பின்னர் தான் ஜெயலலிதா) மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவருவது, ஜெயலலிதாவுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். கட்சி பிளவுப்படக் கூடாது என்பதே என் எண்ணம். இன்றைய சூழலில் ஒற்றைத் தலைமை தேவையில்லை. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி ஒரு தீர்மானமும் கொண்டுவர முடியாது. இந்தப் பிரச்சனையை சரிசெய்ய பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஏற்படுத்தி, அவர்கள் முடிவெடுத்து ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொடுத்தால் ஒப்புதல் அளிக்கக்கூடிய அளவுக்கான குழு ஒன்றை அமைக்கக் கோரியுள்ளோம். இந்த விவகாரத்தை வெளியில் பேசியது கண்டிகப்பட வேண்டும். இரட்டை தலைமை என்று சொன்ன போது, முதலில் நான் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றார்கள். இரு நாட்களுக்கு பின்னர் அவரும் கையெழுத்திட வேண்டும் என்றார்கள். தொண்டர்களின் எண்ணம் கட்சி இணைய வேண்டும் என்றிருந்ததால், நான் அதை ஒப்புக்கொண்டேன். தொண்டர்கள் மனசஞ்சலம் படக்கூடாது என்பதால் தான் எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்தேன். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ஜெயலலிதா காலமாகிவிட்ட காரணத்தால், தற்காலிக ஏற்பாட்டில் கட்சியை வழிநடத்த சசிகலா நடராஜன் அவர்களை பொதுச்செயலாளர் ஆக்கினோம். அவ்வளவு தான். சசிகலா அவர்களை கட்சியில் இணைப்பது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துப்பேசி முடிவெடுப்பார்கள். இதை ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் அவரவர் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. தேனி மாவட்ட தீர்மானமும் அப்படியானது தான்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டு ஓ.பன்னீர் செல்வம் விலக மறைமுக அழுத்தமா என்று திரும்பத் திரும்க்ப கேட்டதற்கு தொண்டரகள் முடிவு செய்வார்கள், தொண்டர்கள் முடிவிற்கு முழுவதும் கட்டுப்படுவேன் என்கிறார் ஓ. பன்னீர் செல்வம். இவர் ஒருங்கிணைப்பாளராக வந்தது தொண்டர்கள் விருப்பமா என்பதே கட்சி சார்ந்த நபர்கள் மத்தியில் உள்ள விடை தெரிந்தாலும் கூறமுடியாத வினா ?


அந்தத் தொண்டர் தான் யார்? என்ற வினாவும் இவர்கள் பதவிக்கு வந்தது அதிமுக தொண்டர்கள் சொல்லியா? என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் உண்டு. ஓ.பன்னீர் செல்வம் அளித்த அவரது பேட்டியில் சில முரண்பாடுகள் உள்ளன. டி.டி.வி தினகரன் தலைமையிலான 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை. பிப்ரவரி என்பதே உண்மை  2017 ஆம் ஆண்டு அரசின் பலத்தை நிரூபிக்கும் நம்பிக்கைத் தீர்மானத்தின் போது, டி.டி.வி.தினகரன்-எடப்பாடி கே.பழனிச்சாமி அணிக்கு எதிராக வாக்களித்தது 11 பேர் கொண்ட ஓ.பன்னீர் செல்வம் சார்ந்த அணி தான். ஆனால் தற்போது டி.டி.வி.தினகரன் தரப்பு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததாகவும், அதை எதிர்த்து தாங்கள் வாக்களித்ததால் தான் ஆட்சி தப்பித்தது என்றும் ஒரு தவறாக மாற்றிப் சொல்கிறார் என்பதே நாமறிந்த வரை உண்மை அடுத்ததாக ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மூன்று மாதங்கள் மட்டுமே முதல்வராக இருப்பேன்  என்று கூறியதாக தற்போது சொல்கிறார். ஆனால் தர்மயுத்தம் என நடத்திய காலத்தில், தன்னை யாரோ ஒருவர் குரு சிஷ்யன் ஆலோசனை கூற தன்னை அடித்து, முதல்வர் பதவியிலிருந்து விலகச் சொன்னார்கள். என்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்றார். அதுவே அவரது பேச்சில் உள்ள முரண் முதல்வர் பதவி மீது விருப்பம் இல்லாதவர், எதற்காக அன்றைக்கு விலகச் சொன்னதற்காக எதிர்த்துப் போராடினார் என்பது தான் தற்போது உண்மையான தொண்டர்களின் வினா?. இதற்கான பதில்களை அவர் விளக்க வேண்டும். மேலும் அஇஅதிமுக எனும் கட்சி தற்போது உள்ள நிலையில் இதுவரை வழிநடத்தியதாக நம்பப்படும் சிலர் வேடிக்கை மட்டுமே பார்க்க காரணமாக இருப்பது அரசியல் மாற்றங்கள் தான்.இனி அதிமுக என்பது பழைய வாக்கு வங்கி இருக்கும் கட்சியாக இருக்குமா என்பதும் அல்லது இது பிளவுபட்டு மீண்டும் சின்னம் முடக்கப்படுமா. என்பது பொதுக்குழுக் கூட்டம் முடிந்து குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் தான் நமக்கு உண்மை நிலை அறிய முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த