முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை உலக மிதிவண்டி தினம்

உலக மிதிவண்டி தினத்தில் மகாத்மா காந்தியின் படத்தைப் பகிர்ந்துள்ளார் பிரதமர்

இன்று உலக மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை” என்ற கருத்தை குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, மகாத்மா காந்தி மிதிவண்டி ஓட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

“சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, இன்று உலக மிதிவண்டி தினம், நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த மகாத்மா காந்தியை விட சிறந்தவர் யார்”.உலக மிதிவண்டி தினம் கொண்டாட்டம்

உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் தமிழ்நாட்டில் சென்னை உட்பட புராதன சிறப்பு வாய்ந்த ஆறு இடங்களில் இன்று கொண்டாடப்பட்டது.


ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி உலக மிதிவண்டி தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர அமிர்த பெருவிழாவையொட்டி நாடுமுழுவதும் 75 இடங்களில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. தலைநகர் புதுதில்லியில், மேஜர் தியான்சந்த் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய தகவல் – ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

சென்னையில், நேரு இளைஞர் மையம், நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குனரகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து உலக மிதிவண்டி தினத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

சென்னை பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் நேரு இளைஞர் மையத்தின் மாநில இயக்குனர் திரு என் எஸ் மனோகரன் தலைமையில் நடைபெற்ற மிதிவண்டி பேரணியை  தமிழக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் திரு மகேஷ்குமார் அகர்வால், தொடங்கி வைத்தார். இதில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய திரு மகேஷ்குமார் அகர்வால், மிதிவண்டி பயன்பாட்டின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதேபோன்று மாமல்லபுரம் கடற்கரை கோவில், வேலூர் கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாட்சி ரயில் நிலையம், சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயலில் உள்ள மருதுபாண்டியர் கோட்டை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஆகிய புராதன சிறப்புமிக்க இடங்களிலும், உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டது.


மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உலக மிதிவண்டிதினத்தை முன்னிட்டு மிதிவண்டி பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.உலக சைக்கிள் தினமான இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர், நாடு தழுவிய நிகழ்ச்சிகளை மத்திய அமைச்சர்கள் திரு கிரண் ரிஜிஜு, திரு மன்சுக் மாண்டவியா, திருமதி மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்

உலக சைக்கிள் தினத்தையொட்டி, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை  இணை அமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தேசிய அளவிலான நிகழ்ச்சிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் எம்.பி.யுமான டாக்டர். ஹர்ஷ்வர்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  திரு மனோஜ் திவாரி,  திரு ரமேஷ் பிதுரி, இளைஞர் விவகாரத் துறை செயலாளர் திரு. சஞ்சய் குமார், விளையாட்டுச் செயலாளர் திருமதி. சுஜாதா சதுர்வேதி மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


தியான் சந்த் மைதானத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணிக்கு திரு அனுராக் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் 7.5 கிமீ பேரணியில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், நேரு யுவகேந்திரா சங்கம்  நாடு முழுவதும் உள்ள 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் பேரணிகளை ஏற்பாடு செய்தது. 

பேரணியைத் தொடங்குவதற்கு முன்பு உரையாற்றிய திரு அனுராக் சிங் தாக்கூர், இந்தியா விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடும் நிலையில், மத்திய  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் மிதிவண்டி பேரணிகளை ஏற்பாடு செய்வதற்கான தனித்துவமான நடவடிக்கையை எடுத்துள்ளது. சுதந்திரத்தின் 75வது ஆண்டில் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் நோக்கம், உடல் ஆரோக்கியத்திற்காக மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிப்பதாகும்  என்று கூறினார்.

“பிட்னஸ் பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் இணைய வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி விரும்புகிறார்.  ஃபிட் இந்தியா பிரச்சாரத்தில் சைக்கிள் ஓட்டுதல் மிகப்பெரிய பங்கை வகிக்க முடியும். உலக சைக்கிள் தினத்தில், ஒவ்வொருவரும் சைக்கிள் ஓட்டுவதை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்ற தெளிவான செய்தியை நாங்கள் வழங்குகிறோம். சைக்கிள் ஓட்டுதல் உங்களை ஆரோக்கியமாகவும், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும் உதவும்” என்று திரு தாக்கூர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...