முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை உலக மிதிவண்டி தினம்

உலக மிதிவண்டி தினத்தில் மகாத்மா காந்தியின் படத்தைப் பகிர்ந்துள்ளார் பிரதமர்

இன்று உலக மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை” என்ற கருத்தை குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, மகாத்மா காந்தி மிதிவண்டி ஓட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

“சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, இன்று உலக மிதிவண்டி தினம், நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த மகாத்மா காந்தியை விட சிறந்தவர் யார்”.உலக மிதிவண்டி தினம் கொண்டாட்டம்

உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் தமிழ்நாட்டில் சென்னை உட்பட புராதன சிறப்பு வாய்ந்த ஆறு இடங்களில் இன்று கொண்டாடப்பட்டது.


ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி உலக மிதிவண்டி தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர அமிர்த பெருவிழாவையொட்டி நாடுமுழுவதும் 75 இடங்களில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. தலைநகர் புதுதில்லியில், மேஜர் தியான்சந்த் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய தகவல் – ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

சென்னையில், நேரு இளைஞர் மையம், நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குனரகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து உலக மிதிவண்டி தினத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

சென்னை பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் நேரு இளைஞர் மையத்தின் மாநில இயக்குனர் திரு என் எஸ் மனோகரன் தலைமையில் நடைபெற்ற மிதிவண்டி பேரணியை  தமிழக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் திரு மகேஷ்குமார் அகர்வால், தொடங்கி வைத்தார். இதில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய திரு மகேஷ்குமார் அகர்வால், மிதிவண்டி பயன்பாட்டின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதேபோன்று மாமல்லபுரம் கடற்கரை கோவில், வேலூர் கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாட்சி ரயில் நிலையம், சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயலில் உள்ள மருதுபாண்டியர் கோட்டை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஆகிய புராதன சிறப்புமிக்க இடங்களிலும், உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டது.


மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உலக மிதிவண்டிதினத்தை முன்னிட்டு மிதிவண்டி பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.உலக சைக்கிள் தினமான இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர், நாடு தழுவிய நிகழ்ச்சிகளை மத்திய அமைச்சர்கள் திரு கிரண் ரிஜிஜு, திரு மன்சுக் மாண்டவியா, திருமதி மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்

உலக சைக்கிள் தினத்தையொட்டி, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை  இணை அமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தேசிய அளவிலான நிகழ்ச்சிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் எம்.பி.யுமான டாக்டர். ஹர்ஷ்வர்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  திரு மனோஜ் திவாரி,  திரு ரமேஷ் பிதுரி, இளைஞர் விவகாரத் துறை செயலாளர் திரு. சஞ்சய் குமார், விளையாட்டுச் செயலாளர் திருமதி. சுஜாதா சதுர்வேதி மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


தியான் சந்த் மைதானத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணிக்கு திரு அனுராக் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் 7.5 கிமீ பேரணியில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், நேரு யுவகேந்திரா சங்கம்  நாடு முழுவதும் உள்ள 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் பேரணிகளை ஏற்பாடு செய்தது. 

பேரணியைத் தொடங்குவதற்கு முன்பு உரையாற்றிய திரு அனுராக் சிங் தாக்கூர், இந்தியா விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடும் நிலையில், மத்திய  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் மிதிவண்டி பேரணிகளை ஏற்பாடு செய்வதற்கான தனித்துவமான நடவடிக்கையை எடுத்துள்ளது. சுதந்திரத்தின் 75வது ஆண்டில் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் நோக்கம், உடல் ஆரோக்கியத்திற்காக மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிப்பதாகும்  என்று கூறினார்.

“பிட்னஸ் பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் இணைய வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி விரும்புகிறார்.  ஃபிட் இந்தியா பிரச்சாரத்தில் சைக்கிள் ஓட்டுதல் மிகப்பெரிய பங்கை வகிக்க முடியும். உலக சைக்கிள் தினத்தில், ஒவ்வொருவரும் சைக்கிள் ஓட்டுவதை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்ற தெளிவான செய்தியை நாங்கள் வழங்குகிறோம். சைக்கிள் ஓட்டுதல் உங்களை ஆரோக்கியமாகவும், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும் உதவும்” என்று திரு தாக்கூர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த