முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேஷனல் ஹெரால்டு பங்கு வர்த்தகப் பரிமாற்ற வழக்கில் அன்னிய செலாவணி மோசடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்திக்கு ஆஜராக மீண்டும் புதிய சம்மன்

 நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் ஜூன் மாதம் 13 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பங்கு வர்த்தகப் பரிமாற்ற வழக்கில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதென்பது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி,  தலைவர் ராகுல் காந்தி விசாரணைக்கு ஜூன் மாதம் 8 ஆம் தேதி ஆஜராக வேண்டுமென ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் ராகுல் காந்தி  வெளிநாடு சென்றிருப்பதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கோரியிருந்ததனையடுத்து  அமலாக்கத்துறை ராகுல் காந்திக்கு புது சம்மன் அனுப்பியுள்ளதில், ஜூன் மாதம் 13 ஆம் தேதி ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு  சிகிச்சை பெற்று வருகிறார். அதையடுத்து  அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா ஆஜராவாரா? என்கிற கேள்வி எழும் நிலையில் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியைத் தொடர்ந்து அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதும் தெரிகிறது.



நாடு விடுதலைக்கு முன் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம், பன்டித ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளி வந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூபாய் 90 கோடி கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின்னர் 2010 ஆம் ஆண்டில் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76 சதவீதம் பங்குகள் சோனியா காந்தி, மற்றும் ராகுல்காந்தி வசம் உள்ளன. இந்தப் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்  சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இல் வழக்கில். நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.  இதில் முக்கியக் குற்றவாளிகளாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் சேர்க்கப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சாமி முதலில் விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தார். இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரால்டு வெளியீட்டாளரான ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு பதிவு செய்து

வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 244 வது பிரிவின் கீழ், நிலம் மற்றும் மேம்பாட்டு பிரிவின் துணை அதிகாரியான உச்ச நீதிமன்ற செயலாளர் (பதிவு அதிகாரி), வருமான வரித் துறை துணை ஆணையர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சாட்சிகளை அழைத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கோரியிருந்தார். ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து பின்னர் பரிசீலிக்கப்படுமென 11 ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.காங்கிரஸ் கட்சியின் கூற்றுப்படி, நிறுவனங்கள் சட்டப்பிரிவு 25 ன் சிறப்பு விதியின் கீழ் உருவாக்கப்பட்ட யங் இந்தியா, லாப நோக்கமற்ற நிறுவனமாகும். அதன் பங்குதாரர்கள் அல்லது இயக்குநர்களுக்கு லாப தொகை வழங்க முடியாதென தெரிவித்துள்ளது  கம்பெனி சட்டம் பிரிவு 25 ன் படி அமைக்கப்படும் நிறுவனங்கள் தங்களது லாபத்தையும் வருவாயையும் நிறுவனத்தின் பொருள்களுக்காக செலவு செய்ய வேண்டும். நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு லாபத்தை அளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சட்டம், 2013 ன் பிரிவு 8, விளையாட்டு, கல்வி, ஆராய்ச்சி, சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிற பொருள்களை உள்ளடக்கியது. கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடமுள்ள விவரங்களின் படி, இந்தப் பிரிவின் கீழ் ஏராளமான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதில், ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை, கோகோ கோலா இந்தியா அறக்கட்டளை, அமேசான் கல்வி அறக்கட்டளை ஆகியவையும் அடங்கும்.ஒரு நிறுவனத்தை லாப நோக்கமற்ற நிறுவனமாக மாற்ற வேண்டும் என்றால், அதனை அறக்கட்டளையாக மாற்ற முடியாது. ஆனால், பிரிவு 25 மற்றும் பிரிவு 8 நிறுவனமாக மாற்றலாமென்று வரி தொடர்பான தகவல்கள் கூறுகின்றனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கு பங்கு பரிவர்த்தனையில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பானது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இணைக்கப்பட்டுள்ளனர். பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி முதலில் விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார். 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரால்டு வெளியீட்டாளரான ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில்

இந்த மனு நீதிபதி சுரேஷ் கைத் முன்பு  விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பான வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மனு மீது வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வெளியீட்டாளாரான ஏஜெஎல் (The Associated Journals) என்ற நிறுவனத்தை நேரு 1937இல் தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாகச் சேர்ந்தனர். இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 90 கோடி ரூபாய் கடனளிக்கப்பட்டுள்ளதுஇந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் நிறுவனத்தின் பங்குகள் சோனியா காந்திக்குச் சொந்தமான யங் இந்தியா நிறுவனத்திற்கு 50 லட்சத்துக்கு கைமாற்றப்பட்டன. யங் இந்தியாவில் 76 சதவீத பங்குகள் சோனியா, ராகுல் ஆகியோரிடமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரிடம் இருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த