முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் தடுக்க அரை கட்சி குழு டெல்லி செல்லும் திட்டம் முதல்வர் தகவல்

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் தகவல் அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில்

சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.: "தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுள் ஒன்று காவிரிப் பிரச்சினை. தமிழகத்துக்கான முழு உரிமை காவிரி நீரில் உள்ளது .



எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்; வாதாடும்; தனது உரிமையை நிலைநாட்டும் என்பதை முதலில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் தெரிவித்துள்ளார்...

காவிரி நதி பிரச்சினைகள் குறித்து பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் ஒரு தொலைநோக்கு வரலாற்றுப் பார்வை...1892 ஆம் ஆண்டில் முதலில் காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னை உருவான போது, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சிக் காலத்தில் காவிரி நதி நீர் பங்கீட்டு தொடர்பாக முதல் ஒப்பந்தம் உருவாகியதன் படி மெட்ராஸ் மாகாண அரசு அனுமதியின்றி, மைசூர் அரசு, காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டக்கூடாதென முடிவு செய்யப்பட்டது.1900 ஆம் ஆண்டில் கூட மெட்ராஸ் மாகாண அரசின் அனுமதி பெற்றே கர்நாடகா, காவிரியின் குறுக்கே சிவசமுத்திரம் நீர்மின் நிலையம் அமைத்தது.

அதன் பிறகு 1924 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணமும், மைசூர் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, காவிரி ஆற்றின் குறுக்கே, 1929 ஆம் ஆண்டில் கர்நாடகா அரசு, 45 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ண ராஜ சாகர் அணையைக் கட்டியது.

1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி, கர்நாடக அரசு காவிரியின் துணை ஆறுகளான ஹேமாவதி, ஹேரங்கி ஆகியவற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய நீரைத் தடுத்தது. இதுவே தமிழக அரசின் அனுமதியின்றி நடந்த கர்நாடாகவின் முதல் விதிமீறல் நடவடிக்கையாகும்

1924 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கர்நாடகா அரசு ஆண்டு தோறும் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 575 டி.எம்.சி., தண்ணீர் வழங்க முன் வந்தது.

1924 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்குப்பிறகு 1974 ஆம் ஆண்டில் இரண்டு அரசுகளும் புதுப்பிக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாகக் கூறி கர்நாடகா அரசு அவர்கள் மாநிலத்தில் காவிரியின் பாசனப் பகுதி பரப்பளவை விரிவுபடுத்தியது. காவிரியின் துணையாறுகளின் குறுக்கே புதிதாக பல சிறிய அணைகளைகா கட்டி, காவிரியில் கலக்கும் நீரை தடுத்ததால், தமிழ்நாட்டுக்கு வரும் நீர் வரத்து குறையத் தொடங்கியது.   காவிரி நடுவர் நீதி மன்றம், 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம், 25 ஆம் தேதியில் கர்நாடகா ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு, 205 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டுமென, இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்5 ஆம் தேதியில் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் படி தமிழ்நாடு 419 டி.எம்.சி, கர்நாடகா, 270 டி.எம்.சி., கேரளா, 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி., தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்ற நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசு 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது.

2018 ஆம் ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென, தமிழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாதென காவிரி மேலாண்மை வாரியம் விளக்கமளித்தது.

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேகதாது அணை கட்ட அனுமதியே தரவில்ல, தமிழக அரசின் மனு அர்த்தமற்றது, அதனை தள்ளுபடி செய்யவேண்டுமென 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.

மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீரே வராது, தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடுமென திமுக அரசு தெரிவித்தது.

கடந்த மே மாதம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை அனுமதியின்றி கட்டப்படுகிறதா என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியதுடன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குதீ தொடர 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அந்த உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து கடந்த 2 வாரங்களாக தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம் குறித்து கவலை கொண்ட நிலையில் செய்தியாகிறது

மேகதாது அணை விவகாரம். இது குறித்து   மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினரும், மதுரை நவீன நீர்வழிச்சாலை தலைவருமான


ஏ.சி.காமராஜ் தனது கருத்தை தெரிவித்தார்:

"எப்போதும் ஒரு ஆற்றில் வருகின்ற நீரில் அதன் கீழே உள்ள டெல்டா பகுதிகளுக்குத் தான் முதல் உரிமை என்று உலகளாவிய சட்டமான ரைப்பேரியன் ரைட் சொல்கிறது. அதன்படி பார்த்தால், தமிழகம் சம்மதித்தால் தான் கர்நாடக அரசு அங்கு அணை கட்ட முடியும். இல்லாவிட்டால், அணை கட்ட அவர்களுக்கு உரிமை கிடையாது. எனவே, ரைப்பேரியன் சட்டத்தை முன்னிறுத்தி, அதன்படி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.  ( இது ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் உள்ள பிரச்சினை தீர்க்கப்பட உதவும் ஒரே நாட்டில் உள்ள இரண்டு மாநிலத்தில் இது சாத்தியமாகிறது என்பதே நமது பார்வை)  2007  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலகலாவிய சட்டம் இது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி வழங்க வேண்டும். ஆனால், 2018 ஆம் ஆண்டு கர்நாடக அரசு பெங்களூரு குடிநீர்த் தேவையைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கர்நாடகாவுக்கு 280.75 டிஎம்சி, தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி (14.5 டிஎம்சி குறைவாக) வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த குறைக்கப்பட்ட தண்ணீரைக் கேட்டுப் பெற தமிழக அரசு சட்டப் போராட்டம் தொடங்க வேண்டுமென விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் தற்போது இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...