முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காரைக்குடி வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய்.தங்க வைர நகைகள், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்த அரைக்கால் சட்டைத் திருடர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய்.முப்பது லட்சம் மதிப்பு தங்க வைர நகைகள், வெள்ளிப் பொருட்களை அரைக்கால் சட்டை  அணிந்த திருடர்கள் கொள்ளையடித்துச் சென்ற திகில் சம்பவம்


காரைக்குடி நகர் சுப்பிரமணியபுரம் 10 வது வீதி தெற்குப் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 56). நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது மருத்துவச் சிகிச்சைக்காக மே மாதம் நான்காம் தேதி குடும்பத்துடன் சென்னை சென்றார். இவருக்குச் சொந்தமான வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி, தனது செல்லுலர் தொலைபேசியுடன் இணைத்து அவ்வப்போது கண்காணிப்புக் கேமராவின் காட்சிப் பதிவுகளைக் கண்காணிப்பதை வழக்கமாகக் கொண்ட.  நிலையில், ஜுன் மாதம் 1 ஆம் தேதி அவர் பதிவுகளைப் பார்த்த போது, கண்காணிப்பு கேமரா  இயங்கவில்லை என அறியப்படவே. சந்தேகமடைந்தவர், தன் வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சென்று பார்த்த போது, வீட்டின் கதவு, மற்றும் கண்காணிப்புக் கேமராக்கள் சேதமடைந்திருந்த. தகவல் தெரிவிக்கப்பட்டது அய்யப்பன் உடன் ஊர் திரும்பினார். வீட்டில் பீரோவிலிருந்த 65 சவரன் தங்கம், மற்றும் வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சத்து எழுபதாயிரம் பணம் உள்ளிட்டவை  கொள்ளையடிக்கப்பட்டிருந்ததன் மதிப்பு ரூ.30 லட்சத்துக்கு மேலிருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், கொள்ளையர்கள் கண்காணிப்புக் கேமராவின் ஹார்டு டிஸ்க் எனக் கருதி பேட்டரியை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. உடன் இதுகுறித்து அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது காவல்துறையினர் விசாரிக்கின்றனர். கொள்ளை நடந்த இடத்தில் இருக்கும் தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.தொடர்ந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போது, ஜூன் மாதம் 1 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கொள்ளையர்கள், வீட்டின் முன்பக்கக் கதவை கடப்பாரையால் உடைத்ததுடன், கண்காணிப்புக் கேமராவையும் சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அரைக்கால் சட்டை அணிந்திருந்த கொள்ளையர்களின் கையில் கவட்டை வில் இருந்ததும் தெரிய வந்தது.

அய்யப்பன் கருத்துக் கூறியபோது, கண்காணிப்புக் கேமரா காட்சிகளை எந்நேரமும் செல்போனில் பார்க்க முடியும் என்றாலும், இரவில் தூங்கிவிட்டதால் கொள்ளை நடந்ததை உடனடியாகச் பார்க்க முடியவில்லை’’ என்றனர். அரைக்கால் சட்டை அதாவது 

டவுசர் அணிந்து கொள்ளையில் ஈடுபடும் இக் கொள்ளையர்கள் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடக்கும் வீடுகளை கண்காணிக்கின்றனர். அதன் பிறகு கொள்ளையடிக்கச் செல்லும் அவர்கள், அன்றைய தினம் வீட்டுக்கு யாரும் வந்துவிட்டார்களா என்பதை அறிய, தொலைவிலிருந்து கவட்டை வில் மூலம் வீட்டின் கதவில் கல் எறிகின்றனர். சத்தம் கேட்டு யாரேனும் வருகிறார்களா என்பதை சிறிது நேரம் கவனிக்கின்றனர். வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கொள்ளையடிக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது. இது அப் பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த