முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்

ஜூன் மாதம் 14 ஆம் தேதியன்று பிரதமர் மகாராஷ்டிரா பயணம்


புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்

மும்பையின் ராஜ்பவனில் ஜல் பூஷன் கட்டிடத்தையும், புரட்சியாளர்களின் அரங்கையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்


மகாராஷ்டிராவின் விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களின் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் புரட்சியாளர்களின் அரங்கு, ஒருவகையான அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்டுள்ளது

200 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் மும்பை சமாச்சார் நாளிதழின் த்விஷதாப்தி மகோத்சவத்திலும் பிரதமர் பங்கேற்கிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜூன் 14-ஆம் தேதி மகாராஷ்டிரா செல்லவிருக்கிறார். மதியம் 1:45 மணிக்கு புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமர் திறந்து வைப்பார். மாலை 4:15 மணிக்கு மும்பையின் ராஜ்பவனில் ஜல் பூஷன் கட்டிடத்தையும், புரட்சியாளர்களின் அரங்கையும் அவர் திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு மாலை சுமார் 6 மணிக்கு மும்பையின் பந்தரா குர்லா வளாகத்தில் நடைபெறும் மும்பை சமாச்சார் நாளிதழின் த்விஷதாப்தி மகோத்சவத்தில் பிரதமர் கலந்து கொள்வார்.

புனேவில் பிரதமர்:

புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமர் திறந்து வைப்பார். சந்த் துக்காராம், ஓர் வார்க்காரி துறவி மற்றும் கவிஞர் ஆவார். அபங்கா பக்தி கவிதைகள் மற்றும் கீர்த்தனைகள் எனப்படும் ஆன்மீக பாடல்கள் மூலம் சமூகம் சார்ந்த வழிபாட்டிற்கு அவர் பிரபலமானவர். அவர் டெஹுவில் வசித்து வந்தார்.‌ அன்னாரது மறைவிற்குப் பிறகு ஓர் கல் கோவில் கட்டப்பட்டது, எனினும், ஓர் முறையான ஆலயமாக அது வடிவமைக்கப்படவில்லை. 36 சிகரங்களைக் கொண்ட கல் செதுக்கல்களால் அது புனரமைக்கப்பட்டிருப்பதுடன், சந்த் துக்காராமின் சிலையையும் கொண்டுள்ளது.

மும்பையில் பிரதமர்:

மும்பையின் ராஜ்பவனில் ஜல் பூஷன் கட்டிடத்தையும், புரட்சியாளர்களின் அரங்கையும் பிரதமர் திறந்துவைப்பார். ஜல் பூஷன் என்பது 1885 முதல் மகாராஷ்டிரா ஆளுநரின் அதிகாரபூர்வமான இல்லமாகும். கட்டிடத்தின் வாழ்நாள் நிறைவடைந்த பிறகு, அது இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆகஸ்ட், 2019- இல் மேதகு இந்திய குடியரசுத் தலைவர் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். பழைய கட்டிடத்தின் தனித்துவம் வாய்ந்த அம்சங்கள் அனைத்தும் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்டிடத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. 

2016- ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் திரு வித்யாசாகர் ராவ், ராஜ்பவனில் பதுங்கு குழி ஒன்றைக் கண்டார். ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை ரகசியமாக பாதுகாப்பதற்காக ஆங்கிலேயர்கள் இதை முன்னர் பயன்படுத்தியிருந்தனர். இந்த பதுங்கு குழி, 2019-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களின் பங்களிப்பை நினைவு கூரும் வகையில்  புரட்சியாளர்களின் அரங்கு, ஒருவகையான அருங்காட்சியகமாக பதுங்கு குழியில் உருவாக்கப்பட்டுள்ளது. வாசுதேவ் பல்வந்த் பாட்கே, சபேகார் சகோதரர்கள், சாவர்க்கர் சகோதரர்கள், மேடம் பிகாஜி காமா, வி.பி. கோகாடே,  1946-ஆம் ஆண்டு நடைபெற்ற கடற்படை கிளர்ச்சிக்கு இந்த அருங்காட்சியகம் மரியாதை செலுத்துகிறது.

மும்பையின் பந்தரா குர்லா வளாகத்தில் நடைபெறும் மும்பை சமாச்சார் நாளிதழின் த்விஷதாப்தி மகோத்சவத்தில் பிரதமர் கலந்து கொள்வார். ஃபர்துன்ஜீ மர்ஸ்பாஞ்ஜி என்பவரால் ஜூலை 1, 1822 அன்று மும்பை சமாச்சார், ஓர் வார நாளிதழாக அச்சாகத் தொடங்கியது. பிறகு 1832-ஆம் ஆண்டு, தினசரியாக அது மாறியது. 200 ஆண்டுகளாக இந்த பத்திரிக்கை தொடர்ந்து வெளிவருகிறது. இதன் தனித்துவமான சாதனையைப் போற்றும் வகையில், நிகழ்ச்சியின்போது ஓர் அஞ்சல் தலையும் வெளியிடப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த