முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சிங்கம்புணரியில்  பத்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட இன்று காலை 9 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கம்புனரிக்கு வருகிறார்

சிங்கம்புணரி வட்டம் கோட்டைவேங்கைபட்டியில் சமத்துவபுரத்தை திறந்துவைத்தும்,

திருப்பத்தூர் வட்டம் காரையூரில் பத்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 

கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் இலவச மனைகள் 100 அடங்கும் சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன,

அந்தக் காலகட்டத்தில் சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலம் பட்டி ஊராட்சி கோட்டை வேங்கைப்பட்டியில் 2010 ஆம் ஆண்டில் ரூ.1.92 கோடியில் சமத்துவபுரம் கட்டும் பணிகள் துவங்கிய

கட்டுமானப் பணிகள் முடிவடையாத நிலையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு மாறியதையடுத்து கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டன, தொடர்ந்து திமுக தரப்பினர் வலியுறுத்தியதன்பேரில், மீண்டும் கட்டுமானப் பணிகள் துவங்கி 2012 ஆம் ஆண்டு முழுமையடைந்தது. 

2016 ஆம் ஆண்டில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது .

ஆனால் அதன்பிறகு சமத்துவபுரம் திறக்கப்படவில்லை  இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு வந்த திமுக தலைவர், தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் சமத்துவபுர வீடுகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார், 


தி.மு.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவபுரம் வீடுகளை திறக்க ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கேஆர்.பெரியகருப்பன் நடவடிக்கை மேற்கொண்டார். 

சமத்துவபுரம் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று 08. ஜுன்.2022, காலை 9 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டை வேங்கைப்பட்டியில் சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் காலை 10 மணிக்கு திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் சோழம்பட்டியில் நடக்கும் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார், 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன்,

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பூபதி, உதவி அலுவலர் ராஜ செல்வன், பாதுகாப்பு பணியில் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்பி.செந்தில் குமார் தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் ஆத்மநாதன், வினோஜி, மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர். மேலும்  புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ள தமிழக முதல்வர், தங்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கோரிக்கை.





அறந்தாங்கி வட்டத்தில் மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி முன்மாதிரி பள்ளியாக மாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.ஜோதிமணி, அங்கிருந்து 2019 ஆம் ஆண்டில் பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதலில் சென்றார்.அங்கு, மக்கள் பங்களிப்பு, அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி அனைத்து வகுப்பறைகளிலும் தொங்கு கூரை அமைத்தார்.

தரை தளங்களில் டைல்ஸ் பதிக்கப்பட்டது. அனைத்து வகுப்பறைகளுக்கும் ஸ்மார்ட் போர்டு, குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டது. விளையாட்டுக் கருவிகளுடன் கூடிய கலையரங்கம்,  சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் பணி மேற்கொள்ளப்படும் இப்பள்ளிக்கு, புதுக்கோட்டைக்கு வரவுள்ள தமிழக முதல்வர் வரவேண்டும் என அப்பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து பச்சலூர் பள்ளி மாணவர்கள் கருத்து: எங்கள் பள்ளி கரும்பலகை இல்லாத அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் பள்ளியாக செயல்படுகிறது. இந்த பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு பல்வேறு பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் அண்மையில் டெல்லிக்கு சென்று அங்குள்ள அரசு முன்மாதிரியைப் பார்வையிட்டு வந்துள்ள தமிழக முதல்வர், நம் மாநிலத்தின் முன்மாதிரி பள்ளியாக திகழும் எங்கள் பள்ளிக்கும் வரவேண்டும் என்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க இன்று வரும் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி நினைவு நுாலகத்தை நேற்றிரவு பார்வையிட்டார்.

நேற்று இண்டிகோ விமானத்தில் மாலை 6:35 மணிக்கு முதல்வர் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாத்துார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், எ.வ.வேலு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.





மதுரை புது நத்தம் ரோடு பொதுப்பணித்துறை குடியிருப்பு அருகே 2.04 லட்சம் சதுரடி பரப்பளவில், 7 மாடிகளுடன் கூடிய, நவீன வசதிகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டு வரும் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவு நுாலகப் பணிகள் 2022 ஜனவரி மாதம் 11ஆம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 75 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதனை நேற்று தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இரவு 7:34 மணிக்கு வந்த முதல்வர், முன்னால் முதல்வர் மு.கருணாநிதி சிலை அமையும் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, கலையரங்கு அமைய உள்ள தரைதளம், கருணாநிதி அரங்கம் அமைய உள்ள முதல் தளத்தையும் பார்வையிட்டார். கட்டுமான விவரங்களை பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி விளக்கினார். இரவு 8:03 மணிக்கு அவர் மேலுார் அருகே தும்பைப்பட்டியிலுள்ள தனியார் விடுதியில்தங்கினார்.

இன்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டி சமத்துவபுரத்தை காலை 9:45 மணிக்குதிறந்து வைக்கிறார்.11:00 மணிக்கு காரையூரில் நடக்கவுள்ள விழாவில் 49 ஆயிரம் பயனாளிகளுக்கு 240 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவி வழங்குகிறார்.அங்கிருந்து புதுக்கோட்டை செல்கிறார்.   



காரையூர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தன்னிடம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளார். சிவகங்கை இராணி வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் காவல் பயிற்சிக் கல்லூரியை சிவகங்கையில் துவங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,