முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குளத்தூர் பள்ளி ஆசிரியர் இருவர் பணியிடை நீக்கம் ஆடியோ வெளியான விவகாரத்தில்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளமருகில் குளத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு


சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயில்கின்ற இந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேர்வு செய்வதற்கான கூட்டம் ஜூலை மாதம் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவன் முனீஸ்வரனிடம் கைத் தொலைபேசி மூலம் தாங்கள் சார்ந்துள்ள ஜாதி ரீதியில் பேசியுள்ள.

பதிவு செய்யப்பட்ட ஆடியோவில், நீயும் நானும் ஒரே ஜாதி, ஆனா அந்த பி.டி. டீச்சர் வேற ஜாதி எனக் கூற அதற்கு அந்த மாணவன் 'எல்லோரும் சமம் தானே டீச்சர்' எனப் பதில் தந்துள்ளார். மேலும்


அந்த ஆசிரியர் வேறு விபரத்தை நாடாமல். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொறுப்பு அந்தச் ஜாதியினருக்குச் செல்லக்கூடாது எனவே உங்க ஜாதியைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளதாகவும்.

அந்த வகையில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய

நிலையில் , மாணவரிடம் ஜாதி ரீதியாகப் பேசிய பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகிய ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த செல்போன் உரையாடல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், இந்த உரையாடலில் பேசிய குளத்தூர் அரசுப் பள்ளி மாணவன் முனீஸ்வரனிடம், தமிழ்நாடு அனைத்து தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் தலைவர் முகவை கே கே பேசியதாக ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளதில் அவர் அந்த மாணவனிடம், "தென்மாவட்டங்களில் ஜாதி வன்முறையை தூண்டும் வகையில்" அந்த ஆசிரியை சொன்னது போல் எதுவும் செய்யக் கூடாது, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதனால் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினைச் சேர்ந்தவர்கள், மாணவனிடம் ஜாதி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய இந்த ஆசிரியைகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது மட்டுமின்றி, குளத்தூர் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் தங்கமாரியப்பன், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிப் பள்ளியில் பணிபுரிந்து வரும் உதவித் தலைமை ஆசிரியை கலைச்செல்வி மற்றும் கணினி ஆசிரியை மீனா ஆகிய இருவரும் பள்ளி மாணவனிடம் ஜாதி பற்றி பேசியுள்ளதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமுதாய மக்களிடம் ஜாதி பிரச்சினையை உருவாக்கும் நோக்கில் செயல்பட்ட இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச் சூழலில்இந்தப் பிரச்சினை தொடர்பாக குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்ந்த நபர்களிடம் விசாரணை செய்ததில், நீண்ட காலமாகப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கிடையே நடைபெறக்கூடிய அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்புகளாக ஜாதிய எண்ணத்தோடு ஆசிரியர்களில் சிலர் செயல்படுதாகவும், அதற்கு பள்ளியில் பயிலக்கூடிய சில மாணவர்களை இரண்டு தரப்பு ஆசிரியர்களும் பயன்படுத்துவதால் ஏற்பட்ட விளைவின் ஒரு பகுதியே அந்த ஆடியோ வெளியான விவகாரம் எனவும் கூறப்படுகிறது.

 ஜாதி ரீதியிலான மனப்போக்கு குளத்தூர் பள்ளியில் வரக் காரணமென்ன ?

அதாவது, நீண்ட காலமாக குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாங்கள் பணி புரிவதால், தங்களுக்கு மேலான பதவி உயர்விலுள்ள ஆசிரியர்கள் யார் பள்ளிக்கு புதிதாக வந்தாலும், தங்களை அனுசரித்துத் தான் செல்ல வேண்டும், தங்களை மிஞ்சி இந்தப் பள்ளியில் செயல்படக்கூடாது என்ற தவறான ஆளுமை எண்ணம் கொண்ட அதிகாரப் போட்டியே இந்த விவகாரத்தின் அடித்தளமாக.

அது தான் தற்போது, மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஜாதிய ரீதியாகவும் பேசி அவர்களிடம் ஜாதி உணர்வைத் தூண்டும் அளவிற்கு, ஆசிரியர்களின் போக்கு சென்றுள்ளதைக் காண முடிகிறது.

ஆகவே, அந்த இரு ஆசிரியர்களின் தவறான செயலுக்கு, அவர்களைத் தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டதுடன் நின்றுவிடாமல், இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து ஆராய்ந்து, பள்ளியின் ஒட்டுமொத்த ஆசிரியர்களிடம் உரிய விசாரனை மேற்கொண்டு, நீண்ட நாள் பள்ளியில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்து, எதிர்காலத்தில் இது போன்ற  சம்பவங்கள் பள்ளியில் நடைபெறாத வண்ணம்  தகுந்த நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வாக இருக்குமென அப் பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள்  விருப்பமாக உள்ளது. இதில் ஒரு பொது நீதி சில ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் பிழைகள் வரும் பொழுதுகளில் பொது மக்கள் சிலாகிதம் அடைய வைக்கப்படுகிறார்கள்.என்ற விவாதம் நடக்கும் நிலையில்.

மாணவன் ஆசிரியர் உரையாடலை யார் பதிவு செய்து வெளியிட்டார்கள்?  என்ற வினாவுக்கு மட்டும் இதுவரை விடை  இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த