முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளி வீர முத்தரையர் சங்கத்தின் பொறுப்பாளரான கே.கே.செல்வக்குமார்

நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளி வீர முத்தரையர் சங்கத்தின் பொறுப்பாளரான கே.கே.செல்வக்குமார்


திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை சாலையிலுள்ள எம்ஐடி சோதனைச்சாவடியில் கடந்த 20.ஜூலை.2022 ல் வாகன சோதனையின் போது ஒரு காரிலிருந்து பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டநிலையில் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்றதான வழக்கில் முக்கியக் குற்றவாளி முதல் நபர் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கேகேஎஸ்.செல்வகுமார் என்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரை தேடப்படும் குற்றவாளியாக திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளது.

அதன் விபரம் வருமாறு:- திருச்சிராப்பள்ளி புத்தூர் நான்கு ரோட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.என்பவரது மகன் திலீப் (வயது 34). இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சிராப்பள்ளி மாவட்ட இளைஞரணி யின் அமைப்பாளராக இருப்பதாகவும் இவருக்கும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த சிலருக்குமிடையே முன்விரோதமிருந்து வந்ததாகத் தெரிகிற நிலையில், கடந்த 20 ஆம் தேதி இரவு திலீப் திருச்சிராப்பள்ளியிலிருந்து இலால்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட்டையடுத்த அகிலாண்டபுரத்தின்.  அருகில் சென்றபோது அங்கே நின்று கொண்டிருந்த ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் கார்க் கண்ணாடி உடைந்தது.





திலீப் உயிர் தப்பினார். இதுபற்றிய தகவலறிந்த திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், லால்குடி துணைக் கண்காணிப்பாளர்  சீதாராமன், சமயபுரம் காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுமிடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அதையடுத்து  திலீப் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ், சார்பு ஆய்வாளர் வாசுதேவன் 



சமயபுரம் காவல் நிலைய குற்ற எண் 163/ 2022 ன் படி முதல் குற்றவாளியாக கே.கே.செல்வக் குமார் பெயர் சேர்க்கப்பட்டு. வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 28), மாமுண்டி மகன் சுரேஷ் என்ற தாயுமானவன் (வயது 21), செந்தில்குமார் (வயது 42), ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் நந்தகுமார் (வயது 25), வினோத் என்ற ஹரிஹரன் (வயது 25) ஆகிய ஐந்து பேரைக்  கைது செய்தனர்.அதில் குற்றவாளியாக உள்ள நபரான  தமிழ்நாடு வீர முத்தரையர் சங்கத்தின் தலைவராக உள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே செல்வக்குமார் தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை தரப்பில் தகவல் மேலும் இதேபோல் ஏற்கனவே திருச்சிராப்பள்ளியில் முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன், என்ற ஆர்.வி.அவரது மகன்கள், மருமகன்கள் கைதாகி ஏற்கனவே   சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம்   திருச்சிராப்பள்ளியில் வீர முத்தரயைர் பேரவையைச் சேர்ந்த கே.கே.செல்வகுமார் என்பவரது வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து செல்வகுமார் எடமலைப்பட்டி காவல் நிலையத்தில் அப்போது  அளித்த புகாரின் பேரில் தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் ஆர்.வி என்ற  ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறை கைது செய்த சம்பவம்.  கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் திருச்சிராப்பள்ளி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அந்த ஐந்து பேரும் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாதியின் பெயரைப் பயன்படுத்தி தங்கள் சுயநலத்திற்காக கலவரம் செய்யும் இவர்களைப் போன்ற சமூகத்தில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த