முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒளிமயமான இந்தியா, ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சியாக மின்துறையின் சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை ஜூலை 30 அன்று பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார்

திட்டத்தின் ஐந்து ஆண்டு ஒதுக்கீடு: ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக

மின்சாரத்துறைகள் மற்றும் மின்விநியோக அமைப்புகளில் செயல்திறன்கள் மற்றும் நீடிக்கவல்ல நிதி மேம்பாட்டை நோக்கமாக கொண்டது இந்த திட்டம்

‘ஒளிமயமான இந்தியா, ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்

ரூ.5200 கோடிக்கும் அதிகமதிப்புள்ள என்பிடிசியின் பல்வேறு பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார்

தேசிய மாடிப்பகுதி சூரியசக்தி இணையப்பக்கத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார்

 ஜூலை 30 அன்று பிற்பகல் 12.30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ‘ஒளிமயமான இந்தியா ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பங்கேற்பார். இந்த நிகழ்வில் சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். தேசிய அனல்மின் கழகத்தின் பல்வேறு பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார். தேசிய மாடிப்பகுதி சூரிய மின்சக்தி இணையப்பக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.


 பிரதமர் தலைமையின் கீழ் மின்சாரத்துறையில் பல்வேறு புதுமையான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.  இந்த சீர்திருத்தங்கள் அனைவருக்கும் கட்டுப்படியான செலவில் மின்சாரம் கிடைப்பதை நோக்கமாக கொண்டு  மின்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தொலைதூரப்பகுதிகளுக்கும்  மின்சாரத்தை உறுதிசெய்யும் அரசின் உறுதிப்பாட்டை குறிக்கும் வகையில் ஏற்கனவே மின்சாரம் கிடைக்காத 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது.

  மின்சாரத்துறைகள்  மற்றும் மின் விநியோக கழகங்களின் செயல்பாட்டுத்திறன்கள்  மற்றும் நீடித்த நிதி ஆதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு  மின்சார அமைச்சகத்தின்  வரலாற்றுச்சிறப்புமிக்க முன்முயற்சியான சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். நிதி ஆண்டு 2021-22 முதல், நிதி ஆண்டு 2025-26 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடனான இந்தத் திட்டம், விநியோகப்பிரிவில் நவீன மயம் மற்றும் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கம் கொண்டது. கடைக்கோடி வாடிக்கையாளர்களுக்கும் நம்பகமான, தரமான விநியோகத்தை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தும். மேலும் இது தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியாக ஒருங்கிணைந்த இழப்பை 12-15 சதவீதமாக இந்திய அளவில்  குறைப்பதையும், மின்சாரத்துறைகள் மற்றும் அனைத்து மாநில மின்விநியோக அமைப்புகளின் செயல்திறன்களையும், நீடிக்கவல்ல நிதியையும் மேம்படுத்துவதன் மூலம் விநியோகத்தின் சராசரி செலவு – சராசரி வருவாய் இடையேயான இடைவெளியை 2024-25-க்குள் முற்றிலுமாக நீக்குவதையும் நோக்கமாக கொண்டது.

  இந்த நிகழ்வின் போது தேசிய அனல்மின் கழகத்தின்  ரூ.5200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார். தெலங்கானாவில் 100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ராமகுண்டம் மிதவை சூரியமின்சக்தி திட்டத்தையும், கேரளாவில் 92 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காயங்குளம் மிதவை சூரியமின்சக்தி திட்டத்தையும் அவர் தொடங்கிவைப்பார். ராஜஸ்தானில் 735 மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட நோக் சூரியமின்சக்தி திட்டம், லேயில் போக்குவரத்துக்கான பசுமை ஹைட்ரஜன் திட்டம் குஜராத்தில் இயற்கை எரிவாயு திட்டத்துடன் கவாஸ் பசுமை ஹைட்ரஜன் கலத்தல் திட்டம் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.

  ராமகுண்டம் திட்டம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4.5 லட்சம் சூரிய மின்சக்தி தகடுகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரியசக்தி திட்டமாக உள்ளது. காயங்குளம் திட்டம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 லட்சம் சூரிய மின்சக்தி தகடுகளுடன் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய மிதவை சூரியசக்தி திட்டமாகும்.

  தேசிய மாடிப்பகுதி சூரிய சக்தி இணையப்பக்கத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இது மாடிப்பகுதி சூரிய சக்தி திட்டங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இணையம் வழியாக அறிந்துகொள்ள உதவும். அதாவது இந்த திட்டத்தை நிறுவுதல் மற்றும் ஆய்வு செய்த பின் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகளில் மானியம் விடுவிப்பது வரை இணையம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

 ‘சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழா’வின் பகுதியாக ஜூலை 25 முதல் 30 வரை ‘ஒளிமயமான இந்தியா, ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு கடந்த 8 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. குடிமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலம் மின்சாரம் தொடர்பான அரசின் பல்வேறு முன்முயற்சிகள், திட்டங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்க செய்வது இதன் நோக்கமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...