முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒளிமயமான இந்தியா, ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சியாக மின்துறையின் சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை ஜூலை 30 அன்று பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார்

திட்டத்தின் ஐந்து ஆண்டு ஒதுக்கீடு: ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக

மின்சாரத்துறைகள் மற்றும் மின்விநியோக அமைப்புகளில் செயல்திறன்கள் மற்றும் நீடிக்கவல்ல நிதி மேம்பாட்டை நோக்கமாக கொண்டது இந்த திட்டம்

‘ஒளிமயமான இந்தியா, ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்

ரூ.5200 கோடிக்கும் அதிகமதிப்புள்ள என்பிடிசியின் பல்வேறு பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார்

தேசிய மாடிப்பகுதி சூரியசக்தி இணையப்பக்கத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார்

 ஜூலை 30 அன்று பிற்பகல் 12.30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ‘ஒளிமயமான இந்தியா ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பங்கேற்பார். இந்த நிகழ்வில் சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். தேசிய அனல்மின் கழகத்தின் பல்வேறு பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார். தேசிய மாடிப்பகுதி சூரிய மின்சக்தி இணையப்பக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.


 பிரதமர் தலைமையின் கீழ் மின்சாரத்துறையில் பல்வேறு புதுமையான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.  இந்த சீர்திருத்தங்கள் அனைவருக்கும் கட்டுப்படியான செலவில் மின்சாரம் கிடைப்பதை நோக்கமாக கொண்டு  மின்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தொலைதூரப்பகுதிகளுக்கும்  மின்சாரத்தை உறுதிசெய்யும் அரசின் உறுதிப்பாட்டை குறிக்கும் வகையில் ஏற்கனவே மின்சாரம் கிடைக்காத 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது.

  மின்சாரத்துறைகள்  மற்றும் மின் விநியோக கழகங்களின் செயல்பாட்டுத்திறன்கள்  மற்றும் நீடித்த நிதி ஆதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு  மின்சார அமைச்சகத்தின்  வரலாற்றுச்சிறப்புமிக்க முன்முயற்சியான சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். நிதி ஆண்டு 2021-22 முதல், நிதி ஆண்டு 2025-26 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடனான இந்தத் திட்டம், விநியோகப்பிரிவில் நவீன மயம் மற்றும் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கம் கொண்டது. கடைக்கோடி வாடிக்கையாளர்களுக்கும் நம்பகமான, தரமான விநியோகத்தை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தும். மேலும் இது தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியாக ஒருங்கிணைந்த இழப்பை 12-15 சதவீதமாக இந்திய அளவில்  குறைப்பதையும், மின்சாரத்துறைகள் மற்றும் அனைத்து மாநில மின்விநியோக அமைப்புகளின் செயல்திறன்களையும், நீடிக்கவல்ல நிதியையும் மேம்படுத்துவதன் மூலம் விநியோகத்தின் சராசரி செலவு – சராசரி வருவாய் இடையேயான இடைவெளியை 2024-25-க்குள் முற்றிலுமாக நீக்குவதையும் நோக்கமாக கொண்டது.

  இந்த நிகழ்வின் போது தேசிய அனல்மின் கழகத்தின்  ரூ.5200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார். தெலங்கானாவில் 100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ராமகுண்டம் மிதவை சூரியமின்சக்தி திட்டத்தையும், கேரளாவில் 92 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காயங்குளம் மிதவை சூரியமின்சக்தி திட்டத்தையும் அவர் தொடங்கிவைப்பார். ராஜஸ்தானில் 735 மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட நோக் சூரியமின்சக்தி திட்டம், லேயில் போக்குவரத்துக்கான பசுமை ஹைட்ரஜன் திட்டம் குஜராத்தில் இயற்கை எரிவாயு திட்டத்துடன் கவாஸ் பசுமை ஹைட்ரஜன் கலத்தல் திட்டம் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.

  ராமகுண்டம் திட்டம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4.5 லட்சம் சூரிய மின்சக்தி தகடுகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரியசக்தி திட்டமாக உள்ளது. காயங்குளம் திட்டம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 லட்சம் சூரிய மின்சக்தி தகடுகளுடன் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய மிதவை சூரியசக்தி திட்டமாகும்.

  தேசிய மாடிப்பகுதி சூரிய சக்தி இணையப்பக்கத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இது மாடிப்பகுதி சூரிய சக்தி திட்டங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இணையம் வழியாக அறிந்துகொள்ள உதவும். அதாவது இந்த திட்டத்தை நிறுவுதல் மற்றும் ஆய்வு செய்த பின் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகளில் மானியம் விடுவிப்பது வரை இணையம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

 ‘சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழா’வின் பகுதியாக ஜூலை 25 முதல் 30 வரை ‘ஒளிமயமான இந்தியா, ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு கடந்த 8 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. குடிமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலம் மின்சாரம் தொடர்பான அரசின் பல்வேறு முன்முயற்சிகள், திட்டங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்க செய்வது இதன் நோக்கமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த