முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா

சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்


“இன்றைய தினம் சாதனைகளுக்கான தினம் மட்டும் அல்ல, முன்னேற்றத்திற்கானதும் கூட”

“ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்; இந்தியா உலகின் வளர்ச்சி எந்திரமாக உள்ளது”


“நாம் எவ்வாறு உருவாகியிருக்கிறோம் என்பதை துயரங்கள் வெளிப்படுத்தின. அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிர்கொண்டது”

“சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளது”

“உலகளாவிய வழங்கல் தொடருக்குள் இந்தியா முக்கிய இணைப்பாக மாறி வருகிறது”


“தொழில்நுட்பத்திற்கான ஆர்வமும் கடுமையாக உழைப்போர் மீதான நம்பிக்கையும், சீர்திருத்தத்திற்கான மனோநிலையும் உள்ளது”

“வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடைமுறையின் தூண்டுதலை கட்டுப்படுத்துவதாகும். வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது. வலுவான அரசு என்பது அனைத்து தளங்களுக்குள்ளும் நுழைவது அல்ல, அது தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு மக்களின் திறமைகளுக்கு இடமளிப்பதாகும்”



சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின், மத்திய அமைச்சர் திரு எல் முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர், தங்களின் பட்டங்களை பெறுகின்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். “அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம்பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  உங்களுக்கான எதிர்காலத்தை உங்கள் மனங்களில் ஏற்கனவே நீங்கள் கட்டமைத்திருப்பீர்கள். எனவே இன்றைய தினம் சாதனைகளுக்கான தினம் மட்டும் அல்ல, முன்னேற்றத்திற்கான தினமும் ஆகும்” என்று அவர் கூறினார். நாளைய தலைவர்கள் என்று அவர்களை அழைத்த பிரதமர், பெற்றோர்களின் தியாகம், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஆதரவு ஆகியவை பற்றியும் குறிப்பிட்டார்.

125 ஆண்டுகளுக்கு முன் மதராஸ் என்று அறியப்பட்ட இங்கு இந்திய இளைஞர்களின் சாத்தியங்கள் எவை என்பது குறித்த சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை பிரதமர் நினைவுகூர்ந்தார். “ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்; இந்தியா உலகின் வளர்ச்சி எந்திரமாக உள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்துடனான முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் இணைப்பையும், பிரதமர் நினைவுகூர்ந்தார். “அவரது சிந்தனைகளும், மாண்புகளும் உங்களுக்கு எப்போதும் உந்துசக்தியாக இருக்கட்டும்” என்று பிரதமர் கூறினார்.

  கொவிட்-19 பெருந்தொற்று முன்னெப்போதும் காணப்படாத சம்பவமாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.   ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் இந்த நெருக்கடியை  எவரும் சாதாரணமாக கையாள இயலாது. இது அனைத்து நாடுகளையும் சோதனைக்கு உட்படுத்தியது. நாம் எவ்வளவு துயரங்களை சந்தித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிர்கொண்டது, அதற்காக விஞ்ஞானிகளுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி கூறவேண்டும். இதன் விளைவாக இந்தியாவில் அனைத்து துறைகளிலும் புதுமையான சுறுசுறுப்பு உருவாகியுள்ளது. தொழில்துறை, முதலீடு, புதிய கண்டுபிடிப்பு அல்லது சர்வதேச வர்த்தகம் என அனைத்திலும் இந்தியா முன்னிலையில் இருப்பதை காண முடிகிறது. கடந்த ஆண்டு இந்தியா உலகின் 2-வது பெரிய செல்பேசி தயாரிப்பாளராக இருந்தது என்று பிரதமர் கூறினார்.  புதிய கண்டுபிடிப்பு என்பது வாழ்க்கையின் நெறியாக மாறியிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில்களின் எண்ணிக்கை 15,000 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்று  அவர் கூறினார். கடந்த ஆண்டு  83 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்தியா பெற்று சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நமது புதிய தொழில்களும் கூட பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் சாதனை அளவாக நிதி ஆதாரத்தை பெற்றுள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக சர்வதேச வர்த்தக  ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளது.

 தொழில்நுட்பம் காரணமான இடையூறுகளின் சகாப்தத்தில்  3 முக்கியமான அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. “முதல் அம்சம் என்பது தொழில்நுட்பத்திற்கான  ரசனையாக உள்ளது. தொழில்நுட்ப பயன்பாட்டில் சாதகமான உணர்வு வளர்ந்து வருகிறது. பரமஏழைகளும் கூட இதனை பயன்படுத்துகிறார்கள்.

2-வது அம்சம் என்பது கடுமையான பணி செய்பவர்களிடம் நம்பிக்கை கொள்வது. ஏற்கனவே சமூக நிகழ்வுகளில் ஒரு ஆணோ, பெண்ணோ தன்னை தொழில்முனைவோர் என்று சொல்லிக்கொள்வதில் சிரமம் இருந்தது. சிலரை வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்கள் என்று கூறுவது வழக்கம், இதன் பொருள் ஊதியம் பெறும் ஊழியர்கள் என்பதாகும். தற்போது நிலைமை நேர்மாறானதாக உள்ளது. 3-வது அம்சம் என்பது சீர்திருத்தத்திற்கான மனோநிலை” என்று பிரதமர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “வலுவான அரசு என்பதன் பொருள் அது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது என்ற கருத்து ஏற்கனவே இருந்தது. ஆனால் இதனை நாங்கள் மாற்றியிருக்கிறோம். வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடைமுறையின் காரணத்தை கட்டுப்படுத்துவதாகும். வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது. வலுவான அரசு என்பது அனைத்து தளங்களுக்குள்ளும் நுழைவது அல்ல, அது தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு மக்களின் திறமைகளுக்கு இடமளிப்பதாகும்” என்று விரிவாக எடுத்துரைத்தார். “ஒரு வலுவான அரசின் பலம் என்பது அது அனைத்தையும் அறிந்திருப்பது அல்லது அனைத்தையும் செய்யமுடிந்தது அல்ல என்பதை அடக்கத்துடன் ஏற்பதில் உள்ளது” என்று அவர் மேலும் வலியுறுத்தினார். இதனால் தான் சீர்திருத்தங்கள், அனைத்து துறைகளிலும் மக்களுக்கும், அவர்களின் திறமைக்கும் மகத்தான இடத்தை உருவாக்கித்தருகின்றன.  தேசிய கல்விக்கொள்கையில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் இலகு தன்மையின் உதாரணங்களை எடுத்துரைத்த அவர், வணிகம் செய்வதை எளிதாக்க 25,000 நடைமுறை சிக்கல்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூறினார். “பங்குகள் வழியிலான மூலதனத்தின் மீதான வரி நீக்கம், முன்தேதியிட்ட வரிநீக்கம் கார்ப்பரேட் வரி குறைப்பு – போன்றவை முதலீடுகள் மற்றும் தொழில்துறையில் ஊக்கத்தை அளித்துள்ளன. ட்ரோன்கள், விண்வெளி, புவியியல் துறைகளின் சீர்திருத்தங்கள் புதிய வழிகளை திறந்துள்ளன” என்று அவர் கூறினார்.

  இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் இடையேயான இணைப்பை பிரதமர் கோடிட்டு காட்டினார். “உங்களின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சி. உங்களின் கற்றல், இந்தியாவின் கற்றல்.  உங்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றி என்று குறிப்பிட்டு பிரதமர் உரையை நிறைவுசெய்தார்.

  இந்த விழாவில் தங்கப்பதக்கம் வென்ற 69 பேருக்கு தங்கப்பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகம் 1978 செப்டம்பர் 4 அன்று நிறுவப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி என் அண்ணாதுரையின் பெயர் அதற்கு சூட்டப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ள  13 அமைப்புக் கல்லூரிகளையும், 494 இணைப்பு கல்லூரிகளையும் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் என 3 மண்டல வளாகங்களையும் பெற்றிருக்கிறது.அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை

மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர். என். ரவி அவர்களே, தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர் திரு எல். முருகன் அவர்களே, இதர அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆர். வேல்ராஜ் அவர்களே, இளம் நண்பர்களே, அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களே!

அனைவருக்கும் வணக்கம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் முதலில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எதிர்காலம் பற்றி ஏற்கனவே நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள். எனவே, இன்று, வெற்றியின் தினம் மட்டுமல்ல, விருப்பங்களின் நாளும் கூட. நம் இளைஞர்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேற விழைகிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கும், இதர பணியாளர்களுக்கும் இது ஓர் சிறப்பான தினம். நீங்கள் தான் நாளைய தலைவர்களை உருவாக்கும் தேச கட்டமைப்பாளர்கள். ஏராளமான பிரிவு மாணவர்கள் கல்வி பயின்று, வெளியேறியிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். எனினும் ஒவ்வொரு பிரிவினரும் தனித்துவம் வாய்ந்தவர்களே. தங்களுக்கு உரித்தான நினைவுகளை அவர்கள் விட்டுச் செல்கின்றனர். குறிப்பாக, இன்று பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். உங்கள் குழந்தையின் வெற்றியில் உங்கள் தியாகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது இளைஞர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக சென்னை என்ற துடிப்பான நகரில் இன்று  நாம் குழுமியுள்ளோம்.

125 ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 1897 இல் மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையிடம் சுவாமி விவேகானந்தர் பேசினார். எதிர்கால இந்தியாவிற்கு அவரது திட்டங்கள் பற்றி  கேட்கப்பட்டது. “எனது நம்பிக்கை, இளைய சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயத்தினரிடம் உள்ளது. அவர்களிலிருந்து என் பணியாளர்கள் உருவாவார்கள். சிங்கங்களைப் போல, ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் அவர்கள் தீர்வு காண்பார்கள்”, என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் இன்றும் பொருத்தமாகவே உள்ளன. ஆனால் இந்த முறை, தனது இளைஞர்களின் மீது  இந்தியா மட்டுமே நம்பிக்கை கொள்ளவில்லை. உலக நாடுகள் முழுவதும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையுடன் நோக்குகின்றன. ஏனென்றால் நீங்கள் தான் நாட்டின் வளர்ச்சி சக்திகள், இந்தியா தான் உலகின் வளர்ச்சி இயந்திரம்.

இது மிகப்பெரிய கௌரவம். இது மாபெரும் பொறுப்பும் கூட. இதில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

நண்பர்களே,

நம் இளைஞர்களிடையே நம்பிக்கை பற்றி பேசும்போது முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களை நாம் எவ்வாறு மறக்க முடியும். அண்ணா பல்கலைக்கழகத்துடன் டாக்டர் கலாம் மிக நெருக்கமாக இருந்தார் என்பது, இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பெருமிதம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். அவர் தங்கியிருந்த அறை, நினைவகமாக மாறியிருப்பதாக அறிகிறேன் . அவரின் சிந்தனைகளும், மாண்புகளும் நம் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டட்டும்.

நண்பர்களே,

பிரத்தியேகமான தருணத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள். உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் காலம் என்றும் சிலர் இதை அழைக்கக்கூடும். ஆனால் மிகப்பெரிய வாய்ப்பின் தருணமாகவே நான் இதைக் காண்கிறேன். கொவிட்- 19 பெருந்தொற்று, முன் எப்போதும் இல்லாத, எதிர்பாராத நிகழ்வு. ஒருவரும் அறிந்திராத, நூற்றாண்டில் ஒரு முறை ஏற்படக்கூடிய நெருக்கடியாக அது இருந்தது. ஒவ்வொரு நாடும் இந்த சவாலை எதிர்கொண்டது. நமது ஆற்றலை நெருக்கடிகள் தான் வெளிக்கொணருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சாமானிய மக்களால், நம்பிக்கையுடன் இந்தியா இந்த நிலையை எதிர்கொண்டது.  அதன் விளைவாக இன்று இந்தியாவில் உள்ள அனைத்து துறையும் புத்துணர்ச்சியுடன் வளர்ந்து வருகின்றன.

தொழில்துறையாக இருந்தாலும், புதுமை கண்டுபிடிப்பாக இருந்தாலும், முதலீடாக இருந்தாலும் அல்லது சர்வதேச வர்த்தகமாக இருந்தாலும் இந்தியா தான் முன்னணியில் உள்ளது.  நமது தொழில்துறை புத்தெழுச்சி பெற்றுள்ளது.  உதாரணமாக, மின்னணு பொருட்கள் உற்பத்தியை குறிப்பிடலாம். கடந்த ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய செல்போன் உற்பத்தியாளராக இந்தியா இருந்தது.  புதுமை கண்டுபிடிப்பு நமது வாழ்க்கை முறையின் ஒருபகுதியாக மாறியுள்ளது.  கடந்த ஆறே ஆண்டுகளில், அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது. ஆமாம், நீங்கள் கேள்விப்பட்டது சரிதான், 15 ஆயிரம் சதவீதம்தான்.  2016-ல் வெறும் 470 ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 73,000 ஆக உயர்ந்துள்ளது! தொழில்துறையும் புதுமை கண்டுபிடிப்புகளும் சிறப்பாக செயல்பட்டால் முதலீடுகள் குவியும்.  கடந்த ஆண்டு இந்தியா சாதனை அளவாக 83 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை பெற்றுள்ளது.  பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு நமது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பெருமளவு நிதியைப் பெற்றுள்ளன.  இவை அனைத்திற்கும் மேலாக சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக பொருட்கள் ஏற்றுமதி மற்றும் சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் நெருக்கடியான தருணத்தில் இருந்தபோது, நாம் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்திருக்கிறோம். மேற்கே ஐக்கிய அரபு அமீரகத்துடனும், கிழக்கே ஆஸ்திரேலியாவுடனும் அண்மையில் வர்த்தக ஒப்பந்தங்களில் நாம் கையெழுத்திட்டுள்ளோம்.  சர்வதேச விநியோக சங்கிலியில் வலுவான ஒரு இணைப்பாக இந்தியா மாறியுள்ளது. இந்தியா தற்போது தடைகளை வாய்ப்புகளாக மாற்றி வரும் சூழலை பயன்படுத்தி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

நண்பர்களே,

     உங்களில் பெரும்பாலானோர் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் தொடர்பான பாடப்பிரிவுகளை படித்தவர்களாவீர். இந்த தொழில்நுட்பம் சார்ந்த இடையூறுகள் மிகுந்த இந்த யுகத்தில், மூன்று முக்கிய அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன.  முதல் அம்சம், தொழில்நுட்ப தாகமாகும். தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் சொகுசாக இருக்கலாம் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது.  பரம ஏழைகளும் கூட இதற்கு ஏற்ப மாறிவிட்டனர்.  விவசாயிகள் தங்களுக்கு தேவையான சந்தை விவரங்கள், தட்பவெப்பநிலை மற்றும் விலைவாசி பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள செல்போன் செயலிகளை பயன்படுத்துகின்றனர்.  வீட்டுவேலைகளை கவனிப்போரும் தங்களது வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளும் விதமாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். குழந்தைகளும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி பயில்கின்றனர். சிறு வணிகர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். நீங்கள் அவர்களிடம் ரொக்கமாக கொடுத்தால், அவர்களில் சிலர், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தக் கூறுகின்றனர். டிஜிட்டல் பணப்பட்டுவாடா மற்றும் நிதித் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது.  உங்களது வித்தைகளை காட்டுவதற்கு புதுமை தொழில்நுட்பங்களுக்கு பெருமளவு சந்தை வாய்ப்பு காத்திருக்கிறது. 

இரண்டாவது அம்சம், சிரத்தை எடுத்து செய்வோர் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.  முன்பு, சமூக நிகழ்வுகளின் போது, ஒரு இளைஞர் தாம் ஒரு தொழில்முனைவோர் என்று சொல்வது சிரமமானதாகும்.  மக்கள் அத்தகையோரிடம், வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறும் வகையில் நிலைத்தன்மை பெற்றுவிடு, அதாவது சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை பெற்றுவிடு என்று கூறுவது வழக்கமாக இருந்தது.  தற்போது, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.  உனது சொந்த முயற்சியில் ஏதாவது தொழில் தொடங்க முயற்சித்தாயா என்று கேட்கின்றனர்! ஒருவர், ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஸ்டார்ட்அப்களை தொடங்குவது எளிதானதாகத் தெரிகிறது.  சிரத்தை எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால், அதற்கு காரணம் இரண்டு அம்சங்கள் உள்ளன.  ஒன்று நீங்களாக சிரத்தை எடுப்பது.  அல்லது மற்றவர்கள் உருவாக்கிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதாகும்.

மூன்றாவது அம்சம், சீர்திருத்தங்களுக்கான மனோபாவமாகும். இதற்கு முன்பு, வலுவான அரசாங்கம் என்றால், அனைத்தையும் மற்றும் அனைவரையும் கட்டுப்படுத்துவது என்பதே பொருளாக இருந்தது.  ஆனால், நாம் இதனை மாற்றியுள்ளோம். வலுவான அரசாங்கம் என்றால், அனைத்தையும் அல்லது அனைவரையும் கட்டுப்படுத்துவதல்ல, குறுக்கிடத் தூண்டும் அமைப்பு முறையை கட்டுப்படுத்துகிறது. வலுவான அரசாங்கம் என்பது கட்டுப்படுத்துவதல்ல, மாறாக பொறுப்பாக செயல்படுவதாகும்.  வலுவான அரசாங்கம் என்பது அனைத்து அம்சங்களிலும் தலையிடுவதாகாது.  அது தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு மக்களின் திறமைகளுக்கு வாய்ப்பை அளிக்கிறது. வலுவான அரசாங்கத்தின் வலிமை, தான் அறியாததை ஏற்றுக்கொள்ளும் எளிமை அல்லது அனைத்தையும் மேற்கொள்வதில்தான் உள்ளது.  எனவேதான், மக்கள் மற்றும் அவர்களது சுதந்திரத்திற்கு அதிக இடம் அளிக்கும் சீர்திருத்தங்கள் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படுவதை நீங்கள் காணமுடிகிறது.  

புதிய தேசிய கல்விக் கொள்கை, வளர்ந்து வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க இளைஞர்களுக்கு அதிக சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஏறக்குறைய 25,000-க்கும் மேற்பட்ட பழங்கால நடைமுறைகளை  ஒழித்தது வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்குவிக்கிறது.

பங்குகள் வழியிலான மூலதன வரி நீக்கம், / முன் தேதியிட்ட வரி  நீக்கம் கார்ப்பரேட் வரி குறைப்பு ஆகியவை முதலீடுகள் மற்றும் தொழில்களுக்கு ஊக்கமளிக்கின்றன.

ட்ரோன்கள், விண்வெளி மற்றும் புவியியல் துறைகளில் ஏற்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள் இந்த துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

பிரதமரின் விரைவு சக்தி என்ற பெரும் திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்புத் துறையில் ஏற்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை அதி வேகத்திலும் அதிக அளவிலும் உருவாக்குகின்றன.

தொழில்நுட்பத்தின் மீது ரசனை, துணிவுமிக்க மீது நம்பிக்கை மற்றும் சீர்திருத்தத்திற்கான மனோபாவம் இப்போது உள்ளது. இந்த காரணிகள் அனைத்தும் உங்களுக்காக ஒரு தளத்தை உருவாக்குகின்றன, அங்கு வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன, அந்த வாய்ப்புகள் நிலையானவையாக இருக்கின்றன, அந்த வாய்ப்புகள் இன்று பெருகி வருகின்றன.

நண்பர்களே,

அடுத்த 25 ஆண்டுகள் உங்களுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் முக்கியமானவை. இது சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கிய அமிர்த காலமாகும்.

உங்களைப் போன்ற பல இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தையும் இந்தியாவின் எதிர்காலத்தையும் உருவாக்குவது நமக்கு கிடைத்த  அதிர்ஷ்டம். எனவே, உங்கள் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. உங்கள் கற்றல் இந்தியாவின் கற்றல். உங்கள் வெற்றி இந்தியாவின் வெற்றி. எனவே, உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் நீங்கள்  திட்டங்களைத் தீட்டும்போது... இந்தியாவிற்கும் நீங்கள் தானாகவே திட்டங்களைத் தீட்டுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உங்கள் தலைமுறைக்கு மட்டுமே கிடைத்த ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக செயல் படுங்கள்!

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...