முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னால் அமைச்சர் காமராஜ் வீடு உள்ளிட்ட52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை - மகன்கள், உறவினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் காமராஜ் வீடு உள்ளிட்ட52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை - மகன்கள், உறவினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு.

வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் .58.44 கோடிக்கு சொத்து சேர்த்ததாக அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்பாக காமராஜ் மற்றும் அவர் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது 



கடந்த அஇஅதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சரான ஆர்.காமராஜ். தற்போது திருவாரூர் மாவட்ட அஇஅதிமுக செயலாளராகவும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வந்தனர். அப்போது காமராஜ் வீட்டிலிருந்தார். அவரிடம், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சோதனை நடத்த வந்துள்ளதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து காலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை தொடங்கினர்.





அதேநேரத்தில், மன்னார்குடியிலுள்ள காமராஜின் சகோதரர் நடன சிகாமணி, அக்கா மகனும், அஇஅதிமுக நகரச் செயலாளருமான ஆர்.ஜி.குமார், அண்ணன் மகன் இளமுருகு, நண்பர்கள் வேட்டை திடல் சத்தியமூர்த்தி, டி.என்.பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் உதயகுமார், ஆலங்கோட்டை தேசபந்து, பைங்காநாடு ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் கோபி, மூவாநல்லூர் லோக அறிவழகன், வல்லூர் குட்டிமணி ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.




இந்தச் சோதனை குறித்து தகவல் அறிந்ததும், மன்னார்குடியிலுள்ள காமராஜ் வீட்டின் முன் அஇஅதிமுகவினர் குவிந்தனர். தமிழக அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

நன்னிலத்திலுள்ள காமராஜின் வீடு, அஇஅதிமுக பிரமுகர்கள் அன்பு, செல்வம் வீடு, திருத்துறைப்பூண்டி ராயநல்லூரிலுள்ள காமராஜின் மைத்துனர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், அவரது நண்பர் கொக்கலாடி சந்திரகாசன், வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் உள்ளிட்ட வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.




தஞ்சாவூரிலுள்ள காமராஜின் சம்மந்தி மருத்துவர் மோகன் வீடு, தஞ்சாவூர் எலிசா நகரில் காமராஜின் மகன்களால் கட்டப்பட்டு, திறக்கப்படாமலுள்ள ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிளாஸம்ஸ் ஹோட்டலிலும் அதை நிர்வகித்து வரும் எம்.இளமுருகு, அய்யர் தோட்டத்தில் உள்ள ஆர்.காமராஜின் நண்பர் பாண்டியன் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இந்த இடங்களிலிருந்து சில முக்கிய ஆவணங்களை இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிச் சென்றனர்.

சென்னை நீலாங்கரையிலுள்ள ஆர்.கே.இண்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனம், அடையாறு சாஸ்திரி நகரில் உறவினர் முத்துலட்சுமி வீடு, மயிலாப்பூரில் இயங்கி வரும் ஜிபிஏ கன்சல்டிங் நிறுவனம், போயஸ் தோட்டத்திலுள்ள பிஎஸ்கே கட்டுமான நிறுவன உரிமையாளர் அருண்குமார் வீடு, மேற்கு அண்ணா நகரில் காமராஜின் உறவினர் தேசபந்து என்பவருக்குச் சொந்தமான நிறுவனம், பனையூரிலுள்ள முத்துலட்சுமிக்குச் சொந்தமான மாடர்ன் பில்டர்ஸ் லேஅவுட் ஆகிய ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் 38, சென்னையில் 6, தஞ்சாவூரில் 4, திருச்சிராப்பள்ளியில் 3, கோயமுத்தூரில் ஓரிடம் என ஆக மொத்தம் 52 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2015 ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ஆர்.காமராஜ் அமைச்சராக இருந்த காலத்தில், அரசுப் பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில், அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் எம்.கே.இனியன், எம்.கே.இன்பன், உறவினர் ஆர்.சந்திரசேகரன், நண்பர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.உதயகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.41 லட்சத்து 6 ஆயிரம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, ஐபோன், கணினி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன எனக் கூறப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை விசாரணை காமராஜுடன் தொடர்புடைய மயிலாப்பூர் ஆடிட்டர் ஒருவரின் அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினர். அதே அலுவலகத்தில் மற்றொரு வழக்கு தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும்போது, “சம்பந்தப்பட்ட ஆடிட்டர், ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் ஆடிட்டர் என கூறப்படுவதால் கடந்த 3 நாட்களாக அவருடைய அலுவலகத்தில் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர். அவர் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கும் ஆடிட்டராக இருந்ததாக வந்த தகவலையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.மன்னார்குடியில் உள்ள அவர் வீட்டில் அதிகாலை 5.40 மணிக்கு துவங்கிய சோதனை, மாலை 7 மணிவரை தொடர்ந்தது. முன்னாள் அமைச்சர் காமராஜை ஒரு அறையிலும், அவரது மூத்த மகனை ஒரு அறையிலும், அவரது மனைவி லதா மகேஷ்வரியை ஒரு அறையிலும் வைத்து நீண்ட நேரம் துருவித் துருவி முதலில் விசாரணை செய்தனர். மூன்று பேரின் பதில்களும் ஒத்துப் போகவில்லையாம்.

குறிப்பாக, தஞ்சாவூரில் சுமார் ரூ.800 கோடியில் கட்டப்பட்டுவரும் மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை குறித்த கேள்விக்கு, மூன்று பேரிடமிருந்தும் முரணான பதில்கள் வந்துள்ளன. அதேபோல அவர் வீட்டிற்குப் பின்புறம் வசிக்கும், அவரது மனைவி லதா மகேஸ்வரியின் தங்கை ஆண்டாள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

மன்னார்குடி அருகே ஸ்தோத்ரியம் கிராமத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டபட்டவர்தான் காமராஜ். 2001 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாகும் வரை மன்னார்குடி சைக்கிள் கடை ஒன்றுதான் அவரது அலுவலகம். இப்போது?  விவசாயம் உட்பட எந்தவிதத் தொழிலும் இல்லாமல் இருபது ஆண்டுகளில் அவருக்கு இவ்வளவு கோடி சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? மன்னார்குடியில் மட்டும் 30 வீடுகள் உள்ளன. திருச்சிராப்பள்ளியில் ஸ்கூல், ஆந்திராவில் சொத்து, நன்னிலத்தில் வீடு, மலேசியாவில் ஒரு நிறுவனத்தில் முதலீடு, மன்னார்குடியில் இருந்து சென்னையில் செட்டில் ஆன சேட் ஒருவர் மூலம், சென்னையில் மூலதனம், அசோக்குமார் என்பவரின் கிளினிக், சந்தப்பேட்டையில் ஒரு லட்சம் சதுர அடியில் இடம், அதோடு சுமார் 500 ஏக்கருக்கு மேல் விளைநிலம், இது தவிர முன்னாள் சேர்மன் ஒருவரது பெயரில் பேருந்துகள், தற்போது ரூ. 800 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என குவித்து வைத்துள்ளார்”வருமானத்துக்கு அதிகமாக அவர் 58 கோடி ரூபாய் சேர்த்து வைத்ததற்கான ஆதாரத்தோடுதான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கான சப்போர்ட் டாக்குமெண்ட் ஏதாவது இருக்குமா? என்பதை அறியவே இந்த ரெய்டை நடத்தினோம். இந்த ரெய்டுத் தகவல், நாங்கள் போவதற்கு முன்பாகவே, அவருக்கு பாதுகாப்பாக இருந்த ஒரு காவலர் மூலம் தெரிந்துவிட்டது. அவரது வீட்டை முன்னதாகவே நோட்டமிட்ட போது, காமராஜ் வீட்டிலிருந்த லேப்டாப் ஒன்றை, அவர் வீட்டின் பின்புறமாக எடுத்துச் சென்று காமராஜின் மனைவி, தன் சகோதரியான ஆண்டாள் வீட்டில் வைத்ததை நாங்கள் பார்த்துவிட்டோம். நாங்கள் கவனித்ததை அந்த வீட்டு பெண் ஒருவர் பார்த்துவிட்டு, அந்த லேப்டாப்பை, கம்மாளத் தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் கொண்டுபோய் வைத்துவிட்டார். அதையும் கவனித்துவிட்ட நாங்கள், அதைக் கைப்பற்றிவிட்டோம். காமராஜ் அதன் பாஸ் வேர்டைக் கொடுக்க மறுத்துவிட்டார். அதில் தான் பல ஆவணங்கள் இருக்கலாம் என நம்புகிறோம். தற்போது அந்த லேப்டாப்பைக் கைப்பற்றும் முயற்சியில் காமராஜ் தரப்பு இறங்கி யிருக்கிறது” என்கிறார்கள் புன்னகையோடு  காமராஜுக்கு மிக நெருக்கமான, இடதுகை, வலதுகை போன்றவர்களைத் தொடவில்லை. அவர்கள்தான் ஆட்களைத் திரட்டிவந்து வாசலில் கோஷமிட்டபடி நிற்கிறார்கள். மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் தினகர், முன்னாள் வைஸ்சேர்மன் வரலட்சுமி, நெடுவாக்கோட்டை ஆர்.எஸ். கலைவாணன். ஜவுளிக்கடை அதிபர் ஒருவர், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் ராம.குணசேகரன், கலியபெருமாள் என அவரது பெரும் பினாமிகள் பலரும் இப்போது தப்பியிருக்கிறார்கள்'' என்று ஒரு பட்டியலையே ஒப்பிக்கிறார்கள்.

மாஜி காமராஜோ "ரெய்டில் ஒரு ஆவணமும் சிக்கவில்லை. எனது மகன்கள் கடனுதவி பெற்றுதான், மருத்துவமனையைக் கட்டுகிறார்கள். நான் ஊழல் செய்ததாகக் கூறும் தொகையை விட அதிக அளவில் கடனில் இருக்கிறேன். இதை சட்டரீதியாகச் சந்திப்பேன்” என்றார் காட்டமாக.

“அடேங்கப்பா... இது உலக மகா நடிப்புடா சாமி” என்கிறார்கள் திருவாரூர்- மன்னார்குடி வாசிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...