முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னால் அமைச்சர் காமராஜ் வீடு உள்ளிட்ட52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை - மகன்கள், உறவினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் காமராஜ் வீடு உள்ளிட்ட52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை - மகன்கள், உறவினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு.

வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் .58.44 கோடிக்கு சொத்து சேர்த்ததாக அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்பாக காமராஜ் மற்றும் அவர் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது 



கடந்த அஇஅதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சரான ஆர்.காமராஜ். தற்போது திருவாரூர் மாவட்ட அஇஅதிமுக செயலாளராகவும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வந்தனர். அப்போது காமராஜ் வீட்டிலிருந்தார். அவரிடம், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சோதனை நடத்த வந்துள்ளதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து காலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை தொடங்கினர்.





அதேநேரத்தில், மன்னார்குடியிலுள்ள காமராஜின் சகோதரர் நடன சிகாமணி, அக்கா மகனும், அஇஅதிமுக நகரச் செயலாளருமான ஆர்.ஜி.குமார், அண்ணன் மகன் இளமுருகு, நண்பர்கள் வேட்டை திடல் சத்தியமூர்த்தி, டி.என்.பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் உதயகுமார், ஆலங்கோட்டை தேசபந்து, பைங்காநாடு ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் கோபி, மூவாநல்லூர் லோக அறிவழகன், வல்லூர் குட்டிமணி ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.




இந்தச் சோதனை குறித்து தகவல் அறிந்ததும், மன்னார்குடியிலுள்ள காமராஜ் வீட்டின் முன் அஇஅதிமுகவினர் குவிந்தனர். தமிழக அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

நன்னிலத்திலுள்ள காமராஜின் வீடு, அஇஅதிமுக பிரமுகர்கள் அன்பு, செல்வம் வீடு, திருத்துறைப்பூண்டி ராயநல்லூரிலுள்ள காமராஜின் மைத்துனர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், அவரது நண்பர் கொக்கலாடி சந்திரகாசன், வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் உள்ளிட்ட வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.




தஞ்சாவூரிலுள்ள காமராஜின் சம்மந்தி மருத்துவர் மோகன் வீடு, தஞ்சாவூர் எலிசா நகரில் காமராஜின் மகன்களால் கட்டப்பட்டு, திறக்கப்படாமலுள்ள ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிளாஸம்ஸ் ஹோட்டலிலும் அதை நிர்வகித்து வரும் எம்.இளமுருகு, அய்யர் தோட்டத்தில் உள்ள ஆர்.காமராஜின் நண்பர் பாண்டியன் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இந்த இடங்களிலிருந்து சில முக்கிய ஆவணங்களை இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிச் சென்றனர்.

சென்னை நீலாங்கரையிலுள்ள ஆர்.கே.இண்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனம், அடையாறு சாஸ்திரி நகரில் உறவினர் முத்துலட்சுமி வீடு, மயிலாப்பூரில் இயங்கி வரும் ஜிபிஏ கன்சல்டிங் நிறுவனம், போயஸ் தோட்டத்திலுள்ள பிஎஸ்கே கட்டுமான நிறுவன உரிமையாளர் அருண்குமார் வீடு, மேற்கு அண்ணா நகரில் காமராஜின் உறவினர் தேசபந்து என்பவருக்குச் சொந்தமான நிறுவனம், பனையூரிலுள்ள முத்துலட்சுமிக்குச் சொந்தமான மாடர்ன் பில்டர்ஸ் லேஅவுட் ஆகிய ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் 38, சென்னையில் 6, தஞ்சாவூரில் 4, திருச்சிராப்பள்ளியில் 3, கோயமுத்தூரில் ஓரிடம் என ஆக மொத்தம் 52 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2015 ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ஆர்.காமராஜ் அமைச்சராக இருந்த காலத்தில், அரசுப் பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில், அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் எம்.கே.இனியன், எம்.கே.இன்பன், உறவினர் ஆர்.சந்திரசேகரன், நண்பர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.உதயகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.41 லட்சத்து 6 ஆயிரம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, ஐபோன், கணினி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன எனக் கூறப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை விசாரணை காமராஜுடன் தொடர்புடைய மயிலாப்பூர் ஆடிட்டர் ஒருவரின் அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினர். அதே அலுவலகத்தில் மற்றொரு வழக்கு தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும்போது, “சம்பந்தப்பட்ட ஆடிட்டர், ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் ஆடிட்டர் என கூறப்படுவதால் கடந்த 3 நாட்களாக அவருடைய அலுவலகத்தில் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர். அவர் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கும் ஆடிட்டராக இருந்ததாக வந்த தகவலையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.மன்னார்குடியில் உள்ள அவர் வீட்டில் அதிகாலை 5.40 மணிக்கு துவங்கிய சோதனை, மாலை 7 மணிவரை தொடர்ந்தது. முன்னாள் அமைச்சர் காமராஜை ஒரு அறையிலும், அவரது மூத்த மகனை ஒரு அறையிலும், அவரது மனைவி லதா மகேஷ்வரியை ஒரு அறையிலும் வைத்து நீண்ட நேரம் துருவித் துருவி முதலில் விசாரணை செய்தனர். மூன்று பேரின் பதில்களும் ஒத்துப் போகவில்லையாம்.

குறிப்பாக, தஞ்சாவூரில் சுமார் ரூ.800 கோடியில் கட்டப்பட்டுவரும் மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை குறித்த கேள்விக்கு, மூன்று பேரிடமிருந்தும் முரணான பதில்கள் வந்துள்ளன. அதேபோல அவர் வீட்டிற்குப் பின்புறம் வசிக்கும், அவரது மனைவி லதா மகேஸ்வரியின் தங்கை ஆண்டாள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

மன்னார்குடி அருகே ஸ்தோத்ரியம் கிராமத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டபட்டவர்தான் காமராஜ். 2001 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாகும் வரை மன்னார்குடி சைக்கிள் கடை ஒன்றுதான் அவரது அலுவலகம். இப்போது?  விவசாயம் உட்பட எந்தவிதத் தொழிலும் இல்லாமல் இருபது ஆண்டுகளில் அவருக்கு இவ்வளவு கோடி சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? மன்னார்குடியில் மட்டும் 30 வீடுகள் உள்ளன. திருச்சிராப்பள்ளியில் ஸ்கூல், ஆந்திராவில் சொத்து, நன்னிலத்தில் வீடு, மலேசியாவில் ஒரு நிறுவனத்தில் முதலீடு, மன்னார்குடியில் இருந்து சென்னையில் செட்டில் ஆன சேட் ஒருவர் மூலம், சென்னையில் மூலதனம், அசோக்குமார் என்பவரின் கிளினிக், சந்தப்பேட்டையில் ஒரு லட்சம் சதுர அடியில் இடம், அதோடு சுமார் 500 ஏக்கருக்கு மேல் விளைநிலம், இது தவிர முன்னாள் சேர்மன் ஒருவரது பெயரில் பேருந்துகள், தற்போது ரூ. 800 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என குவித்து வைத்துள்ளார்”வருமானத்துக்கு அதிகமாக அவர் 58 கோடி ரூபாய் சேர்த்து வைத்ததற்கான ஆதாரத்தோடுதான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கான சப்போர்ட் டாக்குமெண்ட் ஏதாவது இருக்குமா? என்பதை அறியவே இந்த ரெய்டை நடத்தினோம். இந்த ரெய்டுத் தகவல், நாங்கள் போவதற்கு முன்பாகவே, அவருக்கு பாதுகாப்பாக இருந்த ஒரு காவலர் மூலம் தெரிந்துவிட்டது. அவரது வீட்டை முன்னதாகவே நோட்டமிட்ட போது, காமராஜ் வீட்டிலிருந்த லேப்டாப் ஒன்றை, அவர் வீட்டின் பின்புறமாக எடுத்துச் சென்று காமராஜின் மனைவி, தன் சகோதரியான ஆண்டாள் வீட்டில் வைத்ததை நாங்கள் பார்த்துவிட்டோம். நாங்கள் கவனித்ததை அந்த வீட்டு பெண் ஒருவர் பார்த்துவிட்டு, அந்த லேப்டாப்பை, கம்மாளத் தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் கொண்டுபோய் வைத்துவிட்டார். அதையும் கவனித்துவிட்ட நாங்கள், அதைக் கைப்பற்றிவிட்டோம். காமராஜ் அதன் பாஸ் வேர்டைக் கொடுக்க மறுத்துவிட்டார். அதில் தான் பல ஆவணங்கள் இருக்கலாம் என நம்புகிறோம். தற்போது அந்த லேப்டாப்பைக் கைப்பற்றும் முயற்சியில் காமராஜ் தரப்பு இறங்கி யிருக்கிறது” என்கிறார்கள் புன்னகையோடு  காமராஜுக்கு மிக நெருக்கமான, இடதுகை, வலதுகை போன்றவர்களைத் தொடவில்லை. அவர்கள்தான் ஆட்களைத் திரட்டிவந்து வாசலில் கோஷமிட்டபடி நிற்கிறார்கள். மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் தினகர், முன்னாள் வைஸ்சேர்மன் வரலட்சுமி, நெடுவாக்கோட்டை ஆர்.எஸ். கலைவாணன். ஜவுளிக்கடை அதிபர் ஒருவர், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் ராம.குணசேகரன், கலியபெருமாள் என அவரது பெரும் பினாமிகள் பலரும் இப்போது தப்பியிருக்கிறார்கள்'' என்று ஒரு பட்டியலையே ஒப்பிக்கிறார்கள்.

மாஜி காமராஜோ "ரெய்டில் ஒரு ஆவணமும் சிக்கவில்லை. எனது மகன்கள் கடனுதவி பெற்றுதான், மருத்துவமனையைக் கட்டுகிறார்கள். நான் ஊழல் செய்ததாகக் கூறும் தொகையை விட அதிக அளவில் கடனில் இருக்கிறேன். இதை சட்டரீதியாகச் சந்திப்பேன்” என்றார் காட்டமாக.

“அடேங்கப்பா... இது உலக மகா நடிப்புடா சாமி” என்கிறார்கள் திருவாரூர்- மன்னார்குடி வாசிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த