முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரகதாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் விபத்து

புதுக்கோட்டை நகர் திருக்கோகர்ணத்தில் பிரகதம்பாள் திருக்கோகர்னேஸ்வரர் கோவில்


தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளது புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர்கள் வழிபாடு நடத்தி காலப் பழமை வாய்ந்த கோவில். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கோவிலாகவும் திகழ்கிறது.    இங்கு ஆடித்திருவிழா கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகள் நடைபெறாமலிருந்த நிலையில் ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்  ஒன்பதாவது திருநாளான இன்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்த நிலையில் 300 க்கும் மேற்பட்டோர் குழுமி இருந்த நிலையில்               
காலை 8. 50 மணிக்கு முதல் சப்பரத்தில் விநாயகரும், இரண்டாவது சப்பரத்தில் முருகனும், மூன்றாவதாகத் தேரில் ஸ்ரீ பிரகதம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளியிருக்க. ஒரே நேரத்தில் திரளான பக்தர்கள் தேரை இழுத்ததால்,  நிறுத்துவதற்காகச் சக்கரத்தில் கட்டை போட்ட போது விபத்து நடந்ததாகத் தெரிகிறது. பக்தர்கள் மீது தேர் விழுந்ததில்  ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். பொதுமக்களுடன் தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்த் திருவிழா ஏற்பாடுகள் சரியாகச் செய்யப்பட்டதா, தேர் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என  விசாரணை நடக்கிறது. தேரோட்டம் தொடங்கி இரண்டு அடிகள் இழுத்தவுடன் பிரகதாம்பாள் எழுந்தருளியிருந்த தேர் எதிர்பாராத விதமாக சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் சிக்கிக் கொண்டனர்‌ அவர்களை அருகே இருந்தவர்கள் மீட்டனர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் மயக்கமுற்ற நிலையில் அவர்கள் அதே இடத்தில் முதலுதவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு தேர் விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்ய             வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை பார்வையிட்டார் பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா (இவர் தான் சமீபத்தில் அழகர் கோவிவில் இருந்து மாறுதலாகி வந்தவர்)  ஆகியோர் விபத்துக்குள்ளான தேரை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில் தேர் விபத்தான சம்பவம் குறித்து ஆட்சியர் கவிதா ராமு காவல்துறையினர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரியிகளிடம் கேட்டு விபரம் தெரிந்து கொண்டார்.


மேலும் இந்த விபத்தானது தேர் அடித்தளம் முறையாக அமைக்கப்படாததாலேயே நிகழ்ந்ததாகவும் அடித்தளத்திலுள்ள கிளாம்புகள் முறையாக இல்லை என்றும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தேரோட்டம் நடைபெறும் பொழுது வெள்ளோட்டம் பார்த்து தேர் முறையாக பழுதில்லாமல் உள்ளதா என்று ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் வெள்ளோட்டம் நடத்தப்படாமல் தேரோட்டமானது நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக தேர் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், இரண்டு அடி கூட தேர் வராத நிலையில் துரதிஷ்டவசமாக தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது என்றும் அதே நிலையில் தேர் சிறிது தூரம் இழுத்து வந்திருந்து அப்போது தேர் சாய்ந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஆகி இருக்கும் என்றும் பொதுமக்கள் கூறினர்.மேலும் இந்த விபத்தை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு  இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவம் ஏற்படாமல் இருக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்து சமய அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டுமென பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்.

 சம்பவம் குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா கூறுகையில், “அனைத்து வித அனுமதியும் பெற்ற பின்னர் தான் இந்தத் தேரோட்டமானது தொடங்கியதாகவும் பொதுப்பணித்துறை சான்றளித்த பின்னரே தேரோட்டம் நடைபெற்றதாகவும் இரண்டாண்டு காலமாக தேரோட்டம் நடைபெறாததால் அதிகமாக கூடியிருந்த மக்கள் தேரை வேகமாக இழுத்ததால் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. தேர்முறையாக இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டிற்கு விசாரணை செய்து அது போன்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற நடைபெறாமலிருக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.


இந்நிலையில் தேர் சாய்ந்த இடத்தில் பொதுமக்கள் குவிந்ததால் அங்கு குவிக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை கலைந்து போகச் செல்லி வலியுறுத்தி ‌ தேர் சாய்ந்த இருபுற சாலைகளிலும் பேரிக்காடுகளை வைத்து பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சாய்ந்த தேரிலிருந்த சாமி சிலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பின்னர் இரண்டு கிரேன் உதவியுடன் நீண்ட நேரம் போராடி சாய்ந்த தேர் நிமிர்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழமை வாய்ந்த கோவிலின் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேர் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுவரை இந்த ஆண்டு நடந்த மூன்றாம் தேர்திருவிழா விபத்தாகும்... தேர் ஓட வீதிகள் சரியாக இருக்க வேண்டும் அதுவும் ஒரு காரணம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...