முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரகதாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் விபத்து

புதுக்கோட்டை நகர் திருக்கோகர்ணத்தில் பிரகதம்பாள் திருக்கோகர்னேஸ்வரர் கோவில்


தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளது புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர்கள் வழிபாடு நடத்தி காலப் பழமை வாய்ந்த கோவில். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கோவிலாகவும் திகழ்கிறது.    இங்கு ஆடித்திருவிழா கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகள் நடைபெறாமலிருந்த நிலையில் ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்  ஒன்பதாவது திருநாளான இன்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்த நிலையில் 300 க்கும் மேற்பட்டோர் குழுமி இருந்த நிலையில்               
காலை 8. 50 மணிக்கு முதல் சப்பரத்தில் விநாயகரும், இரண்டாவது சப்பரத்தில் முருகனும், மூன்றாவதாகத் தேரில் ஸ்ரீ பிரகதம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளியிருக்க. ஒரே நேரத்தில் திரளான பக்தர்கள் தேரை இழுத்ததால்,  நிறுத்துவதற்காகச் சக்கரத்தில் கட்டை போட்ட போது விபத்து நடந்ததாகத் தெரிகிறது. பக்தர்கள் மீது தேர் விழுந்ததில்  ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். பொதுமக்களுடன் தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்த் திருவிழா ஏற்பாடுகள் சரியாகச் செய்யப்பட்டதா, தேர் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என  விசாரணை நடக்கிறது. தேரோட்டம் தொடங்கி இரண்டு அடிகள் இழுத்தவுடன் பிரகதாம்பாள் எழுந்தருளியிருந்த தேர் எதிர்பாராத விதமாக சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் சிக்கிக் கொண்டனர்‌ அவர்களை அருகே இருந்தவர்கள் மீட்டனர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் மயக்கமுற்ற நிலையில் அவர்கள் அதே இடத்தில் முதலுதவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு தேர் விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்ய             வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை பார்வையிட்டார் பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா (இவர் தான் சமீபத்தில் அழகர் கோவிவில் இருந்து மாறுதலாகி வந்தவர்)  ஆகியோர் விபத்துக்குள்ளான தேரை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில் தேர் விபத்தான சம்பவம் குறித்து ஆட்சியர் கவிதா ராமு காவல்துறையினர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரியிகளிடம் கேட்டு விபரம் தெரிந்து கொண்டார்.


மேலும் இந்த விபத்தானது தேர் அடித்தளம் முறையாக அமைக்கப்படாததாலேயே நிகழ்ந்ததாகவும் அடித்தளத்திலுள்ள கிளாம்புகள் முறையாக இல்லை என்றும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தேரோட்டம் நடைபெறும் பொழுது வெள்ளோட்டம் பார்த்து தேர் முறையாக பழுதில்லாமல் உள்ளதா என்று ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் வெள்ளோட்டம் நடத்தப்படாமல் தேரோட்டமானது நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக தேர் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், இரண்டு அடி கூட தேர் வராத நிலையில் துரதிஷ்டவசமாக தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது என்றும் அதே நிலையில் தேர் சிறிது தூரம் இழுத்து வந்திருந்து அப்போது தேர் சாய்ந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஆகி இருக்கும் என்றும் பொதுமக்கள் கூறினர்.மேலும் இந்த விபத்தை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு  இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவம் ஏற்படாமல் இருக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்து சமய அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டுமென பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்.

 சம்பவம் குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா கூறுகையில், “அனைத்து வித அனுமதியும் பெற்ற பின்னர் தான் இந்தத் தேரோட்டமானது தொடங்கியதாகவும் பொதுப்பணித்துறை சான்றளித்த பின்னரே தேரோட்டம் நடைபெற்றதாகவும் இரண்டாண்டு காலமாக தேரோட்டம் நடைபெறாததால் அதிகமாக கூடியிருந்த மக்கள் தேரை வேகமாக இழுத்ததால் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. தேர்முறையாக இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டிற்கு விசாரணை செய்து அது போன்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற நடைபெறாமலிருக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.


இந்நிலையில் தேர் சாய்ந்த இடத்தில் பொதுமக்கள் குவிந்ததால் அங்கு குவிக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை கலைந்து போகச் செல்லி வலியுறுத்தி ‌ தேர் சாய்ந்த இருபுற சாலைகளிலும் பேரிக்காடுகளை வைத்து பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சாய்ந்த தேரிலிருந்த சாமி சிலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பின்னர் இரண்டு கிரேன் உதவியுடன் நீண்ட நேரம் போராடி சாய்ந்த தேர் நிமிர்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழமை வாய்ந்த கோவிலின் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேர் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுவரை இந்த ஆண்டு நடந்த மூன்றாம் தேர்திருவிழா விபத்தாகும்... தேர் ஓட வீதிகள் சரியாக இருக்க வேண்டும் அதுவும் ஒரு காரணம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.