முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காத்திருப்போர் பட்டியலில் கள்ளக்குறிச்சி டி எஸ் பி

கள்ளக்குறிச்சி சக்தி இண்டர்நேஷனல் உண்டு உறைவிடப் பள்ளி மாணவி ஸ்ரீ மதியின் மர்மமான மரணமும் அதுசார்ந்த நிகழ்வுகளுக்குப் பின்னர்    காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார் 

அந்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை முதன்முதலில் விசாரித்த கள்ளக்குறிச்சி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி மாணவியின் மரணத்தைச் சந்தேக மரணமாக வழக்கு பதிவுசெய்த நிலையில் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.   தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி காவல்துறை விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஸ்ரீதர், சென்னை கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக ஏற்கனவே நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக ஷ்ரவன் குமார் ஜடாவதி நியமனம் செய்யபட்டார். மேலும் கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த செல்வக்குமார் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பகலவன் நியமிக்கப்பட்டார்.  தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை இச் சம்பவம் ஏற்படுத்திய நிலையில். கலவரம் மற்றும் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கிடையே அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக இருந்த ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய டிஎஸ்பியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



முன்னதாக இந்த விஷயத்தில் உளவுத்துறை தோல்வியடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள், அமலாக்‍கத்துறை ஐஜியாக மாற்றப்பட்டார். உளவுத்துறையின் புதிய ஐஜியாக செந்தில்வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.    கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக `309 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 141 வாகனங்களை மீட்க யாரும் முன்வரவில்லை என்பதுடள் காவல்துறை கைப்பற்றினர் தீ வைத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் இயங்கி வந்த சக்தி இண்டர்நேஷனல் பள்ளிக்கு எதிராக  நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம்  ஒரு கட்டத்தில் திடீரென கலவரமாக மாறியது. காவல்துறையினரின் வாகனங்கள், பள்ளி  பேருந்துகளும், இதர வாகனங்களும், பள்ளி வளாகம்  போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கலவரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள, சிறப்புப் புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டதன்படி, சிறப்புப் புலனாய்வுக்குழு  உரிய விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், கலவரத்தின்போது காவல்துறை வாகனங்களுக்கு முதலாவதாக தீ வைத்ததாக இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.


சின்னசேலம் அருகேயுள்ள பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற  நபர், காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்ததாக தற்போது கைது செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மேலும், இந்தக் கலவரத்தின்போது அந்தப் பகுதியில் செல்போன் நெட்வொர்க் மற்றும் சாலை நடுவே உள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுவரும் போலீஸார், அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதுவரையில், இந்தக் கலவரம் தொடர்பாக 309 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் குறிப்பிட்ட அளவிலான சிறார்களும் அடக்கம்.

அவர்கள்மீது, 147 (சட்ட விரோதமாக கூடுதல்),148 (ஆயுதங்களுடன் கூடுதல்), 294(b) (ஆபாசமாகப் பேசுதல்) மற்றும் 323, 324, 352, 332, 336, 435, 436, 379, IPC.r/w.3,4,5.of பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.      மேலும், கலவரம் நடைபெற்ற அன்று... தனியார் சக்தி இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலிருந்து ஏராளமான வாகனங்கள் கிடந்ததாகக் கூறி, அவற்றை கைப்பற்றியிருக்கும் காவல்துறையினர்... இந்த வாகனங்கள் கலவரத்துக்கு வந்தவர்கள் விட்டுச் சென்றவையாக இருக்குமா... அல்லது பயத்தால் சிலர் விட்டுச் சென்றவையா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


இதுவரையில், 141 இருசக்கர வாகனங்களை மீட்டு, அவற்றை சின்னசேலம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த வாகனங்களின் பதிவெண்களைக்கொண்டு அவற்றின் உரிமையாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கும் கலவரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் சிறப்புப் புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் சக்தி இண்டர்நேஷனல் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பள்ளி நிர்வாகத் தரப்பைச் சேர்ந்த ஐந்து குற்றவாளிகளைக் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி காவல்துறை சார்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு மேல் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அது குறித்து விரைவில் விபரம் தெரியவரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...