முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய தகவல் பணிஅதிகாரிகளின் மூன்றாம் ஆண்டு மாநாடு விஞ்ஞான் பவனில் தொடங்கியது

இந்திய தகவல் பணிஅதிகாரிகளின் மூன்றாம் ஆண்டு மாநாடு விஞ்ஞான் பவனில் தொடங்கியது

இந்திய தகவல் பணி அதிகாரிகளின் மூன்றாம் ஆண்டு மாநாட்டை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா மற்றும் முதன்மை தலைமை இயக்குநர் திரு ஜெய்தீப் பட்நாகர், திரு சத்யேந்திர பிரகாஷ், திரு வேணுதர் ரெட்டி மற்றும் திரு மயங்க் குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உள்ள இந்திய தகவல் பணி மூத்த அதிகாரிகள் இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.



மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு  அனுராக் சிங் தாக்கூர் தமது சிறப்புரையில், அரசுத் தொடர்புகளை வரையறுக்க வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்களைக் கோடிட்டுக் காட்டினார்.  குடிமக்களை மையமாகக் கொண்ட கருணையுடன் கூடிய அணுகுமுறை, தொடர்ச்சியான திறன் மேம்பாடு உள்ளிட்டவை இதில் அடங்கும். இதைப் பற்றி விரிவாகக் கூறிய அவர், குடிமக்களை மனதில் வைத்து அனைத்து தகவல்தொடர்புகளும் பொருத்தமானதாகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றார். மேலும், அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். தகவல்தொடர்பு என்பது போலிச் செய்திகள் போன்ற வரவிருக்கும் சவால்களுடன் வேகமாக மாறிவரும் ஒரு துறையாக இருப்பதால், சமீபத்திய கோவிட் பெருந்தொற்றின்  போது காணப்படுவது போல், தொடர்பாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்களாக இருப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

போலிச் செய்திகளை எதிர்கொள்வதற்காக உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை விரிவுபடுத்துதல் மற்றும் ஆற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் முயற்சிகள் போன்ற உருமாற்ற முயற்சிகளை மேற்கொள்வதில் ஐஐஎஸ் அதிகாரிகளின் பங்கை திரு அனுராக் சிங் தாக்கூர்  பாராட்டினார். புதிய ஊடக தொழில்நுட்பங்கள், நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, தொலைதூரத்துக்கும் பயனளிக்கும் வகையில் அரசாங்க தகவல்தொடர்புகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் முன்முயற்சிகளையும் அவர் முன்வைத்தார். 130 கோடி மக்களுக்கு தகவல்தொடர்பாளராக தங்கள் பங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தினார். பொது மக்களின் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு ஒத்திசைக்கப்பட்ட தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். நிறுவனத்தை உருவாக்குதல், வழிகாட்டுதல் மற்றும் அதிகாரிகளின் உந்துதல் ஆகியவை சம அளவில்  முக்கியமானவை  என்று அவர் கூறினார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருஅபூர்வ சந்திரா கூறுகையில், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது தகவல் தொடர்பு பொதுமக்களுக்கு உறுதியளித்தது, மேலும் அவர்களின் மனதில் இருந்து பயத்தை அகற்றுவதில் வெற்றி பெற்றது. தடுப்பூசி மற்றும் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா போன்ற நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே பரவலான விழிப்புணர்வை இது உறுதி செய்தது. பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தடுப்பூசி தயக்கம் கிட்டத்தட்ட இல்லை, இது 200 கோடி தடுப்பூசி டோஸ் சாதனையை  நெருங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

முதன்மை தலைமை இயக்குநர் திரு ஜெய்தீப் பட்நாகர் , இந்த சேவையின் முதன்மையான கவனம் அதிகாரமளித்தல் மற்றும் அணுகல், குடிமக்களை மையமாகக் கொண்ட இரவு,பகல்  ஈடுபாடு, நடத்தை மாற்ற தொடர்பு மற்றும் போலி மற்றும் குறும்புச் செய்திகளை எதிர்த்துப் போராடுவதில் உள்ளதாக தெரிவித்தார்.

தகவல் தொடர்புத் துறையானது இயல்பாகவே ஆற்றல் மிக்கது என்பதை உணர்ந்து, இரண்டு நாள் மாநாடு வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் அதிநவீன தகவல்தொடர்புக்கான செயல் திட்டம் குறித்து விவாதிக்கும். 'இந்தியாவுக்கான தொடர்பு@2047', 'G20 இல் கவனம் செலுத்தி வெளிநாட்டில் இந்தியாவைத் திட்டமிடுதல்', 'அரசு தகவல்தொடர்பு வளர்ச்சியின் பங்கு' போன்றவை இரண்டு நாட்களில் நடைபெறும் முக்கிய அமர்வுகளாக இருக்கும்.

இவற்றில் முறையே, MyGov  தலைமை செயல் அதிகாரி திரு அபிஷேக் சிங், வெளியுறவு அமைச்சக இணைச்செயலர் திரு  அரிந்தம் பக்சி, JS (XP) MEA மற்றும் ஜி20 நாடுகளுக்கான  இந்தியாவின் ஷெர்பா திரு அமிதாப் காந்த் ஆகியோர் முக்கிய பேச்சாளர்களாக இருப்பர்.

மாநாட்டின் இரண்டாவது நாளில் முக்கிய உரையை ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் ஆற்றுவார். மாநாட்டின் நிறைவு அமர்வில்,  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர். எல்.முருகன் உரையாற்றுவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த