முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை மற்றும் புதுக்கோட்டை நிகழ்வுகளில் தெலுங்கானா மாநில ஆளுநர் கலந்து கொண்டார்

வரி செலுத்துவதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும்: ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன


சட்டத்தை எளிமையாக்குவது, காலத்தின் கட்டாயம்: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி

வரி செலுத்துபவராக இருப்பதை நினைத்து பொதுமக்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற வருமான வரி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், வருமான வரித்துறையின் நோக்கம் நாட்டின் நலனே தவிர, வரி செலுத்துவோருக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல என்று கூறினார். நாம் செலுத்தும் வரி நாட்டின் வளர்ச்சிக்கானது என்று தெரிவித்த அவர், 2025-ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா ஈட்ட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் 

பிரதமர் திரு மோடியின் வழிகாட்டுதலோடு, பொதுமக்களுடன் நெருங்கி பணியாற்றுவதற்கான ஏராளமான புதுமையான நடவடிக்கைகளை வருமானவரித்துறை மேற்கொண்டுள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, பலர் தன்னார்வமாக வரி செலுத்த முன்வருவதிலிருந்து இதன் தாக்கம் புலனாகிறது.

வரி செலுத்துபவர்களையும், வருமான வரி அதிகாரிகளையும் நிகழ்ச்சியின்போது கௌரவித்த வருமான வரித் துறைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். வருமான வரி நடைமுறைகளை மேலும் எளிதாக்குமாறு அத்துறையை வலியுறுத்திய அவர், மின்னணு நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கோரிக்கைவிடுத்தார். வரி செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடையே எடுத்துரைக்குமாறு ஊடகங்களையும் அரசு சாரா அமைப்புகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சட்டங்களை எளிமையாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றார். சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டால் நீதிமன்றங்களின் பணி வெகுவாகக் குறையும் என்றார் அவர்.

வருமான வரித்துறையின் பல்வேறு சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு இல்லங்களில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

வருமான வரித்துறையின் பல்வேறு சாதனைகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் திரு ரவிச்சந்திரன் எடுத்துரைத்தார். நாட்டின் நேரடி வரி வருவாய்க்கு நான்காவது மிகப் பெரிய பங்களிப்பை தமிழகம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.மேலும் மற்றொரு நிகழ்வான புதுக்கோட்டையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்துப் பேசிய தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார் 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் எதிரில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையத்தை நேற்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்துப் பேசினார்  நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில்,  ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்குத் தேசியக்கொடிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் 'தமிழ்நாட்டில் எங்கெல்லாம் நன்மை நடக்கிறதோ. அங்கெல்லாம் வருவது எனது வழக்கம்.. நான் ஒரு அலோபதிக் டாக்டர் தான். ஆனால் எனக்கு இயற்கை மருத்துவம் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. நமது நாட்டின் 75ஆவது சுதந்திர இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டத்தின் மூலம் நாட்டில் உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால், சமூக நீதி குறித்துப் பேசி வரும் பலரும் கூட இந்தக் குடியரசுத் தலைவரை வேட்பாளராக இருந்த நிலையில்  ஆதரிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நான் தேசியக் கல்விக் கொள்கை குறித்துப் பேசியது தவறாகச் சித்தரிக்கப்பட்டது.  நாம் அனைவரும் கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொன்னதை, இந்தி கற்றுக் கொள்ளும்படி சொன்னதாகத் திரித்துவிட்டனர்.   இணையத்திலும் மனதைக் காயப்படுத்தும் வகையில் பதிவிட்டனர். ஆளுங்கட்சியின் அதிகார நாளேடும், தமிழகத்தில் தமிழிசை ஏன் வாலை ஆட்டுகிறார் என்று கேட்டுள்ளனர். இது என் நாடு, நான் தமிழச்சி, நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். என் உயிர் போனாலும் தமிழகத்தில் தான் போகும்.தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதைப் பற்றிப் பேச எனக்கு முழு உரிமை உள்ளது. என் பெயரில் மட்டுமல்ல, என் உயிரிலும் தமிழ் இருக்கிறது. தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதில், என்னுடைய பங்கு எப்பொழுதும் இருக்கும். ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரம் தேவையில்லை, அதை மதிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு' என்று அவர் தெரிவித்தார். நிகழ்வுகளில் புதுக்கோட்டை பிரமுகர்கள் எஸ் ஆர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் இராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.                               தெலங்கானா மாநில  ஆளுநர் டாக்டர் தமிழிசையிடம் விருது பெற்றுள்ளார், பத்திரிகையாளர் அ.செல்வராஜ்.

சென்னை பிரஸ் கிளப்  தலைவரும், டைம்ஸ் ஆஃப் இன்டியா ஆங்கில நாளேட்டின் க்ரைம் பிரிவு அசிஸ்டன்ட் எடிட்டருமான அ.செல்வராஜூக்கு ‘மனித நேய இதழியலாளர்’ விருது வழங்கப் பட்டுள்ளது. நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் சிறார்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் சிறுமியர், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், அதைத் தொடர்ந்து நடக்கும் கடத்தல் நிகழ்வுகளுக்கு எதிராக அ.செல்வராஜின் ‘பேனாமுனை’ தாக்குதல் எப்போதுமே உறுதியாய் இருந்துள்ளது. நாடு முழுவதும் ஒருமித்த சிந்தனையோடு பெண்கள் – சிறுமியருக்கு எதிரான குற்றச் செயல்களை எதிர்த்தும் அவர்களை பாதுகாக்கும் பொருட்டும் செயல்பட்ட பத்து பத்திரிகையாளர்களை என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று தெரிவு செய்தது. அந்தவகையில் தெரிவு செய்யப்பட்ட. பத்திரிகையாளர்கள் பத்து பேருக்கும், விழாவொன்றில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான திருமதி. டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் விருதுகளை வழங்கி மகிழ்வைத் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...