முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரயில் நிலையங்கள், ரயில்களில் சேவைகள் ஆகியவற்றில் மாற்றம் மற்றும் முன்னேற்றம் அமைச்சர் தகவல்

உழவர் ரயில் திட்டம் 2020  ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட உழவர் ரயில் சேவை,


கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரை 2,359 உழவர் ரயில் சேவைகளை ரயில்வே இயக்கியுள்ளது. வெங்காயம், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு, மாம்பழம், திராட்சை, மாதுளை,  ஆரஞ்சு, சப்போட்டா, எலுமிச்சை, குடமிளகாய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட அழுகும் பொருட்களை சுமார் 7.9 லட்சம் டன்கள் வரை ஏற்றிச் சென்றுள்ளது.


மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.                                 ரயில் நிலையங்கள், ரயில்களில் சேவைகள் ஆகியவற்றில் மாற்றம் மற்றும் முன்னேற்றம்


ரயில் நிலையங்களை நவீனப்படுத்தி மேம்படுத்துவது ஒரு தொடர் நடைமுறையாகும்.  தற்போது ஆதர்ஷ் ரயில் நிலைய திட்டத்தின் அடிப்படையில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், ரயில் நிலைய கட்டடங்களின் முகப்புகளை மாற்றியமைத்தல், குளிக்கும் வசதியுடன் ஓய்வு அறைகளை மேம்படுத்துதல், பெண்களுக்கு என தனி ஓய்வு அறைகளை அமைத்தல், கணினி வசதி, கட்டணக் கழிப்பறைகள், குளிர்நீர் வசதிகள்,  ரயில் நிலையங்களில் நுழைவு வாயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக சாய்தள வசதிகள் செய்தல் போன்றவை இதில் அடங்கும். 


மேலும், ரயில் நிலையங்களை மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள்   ஆகியவற்றுடன் நவீனப்படுத்துவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சமையல் அறைகளை மேம்படுத்துதல், ஆன்லைன் மூலம், பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போதே உணவுக்கான ஆர்டரையும் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயணிகளுக்கு தரமான, சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், நாள் ஒன்றுக்கு சுமார் 9.30 லட்சம் லிட்டர் ரயில் நீர் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ரயில் நிலையங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்ரயில் நிலையங்களில் விளம்பரங்கள்

பயணக் கட்டணம் தவிர்த்த பிற வருவாய்களை உருவாக்கும் வகையில், ரயில் நிலையங்களில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை  / வணிக முத்திரை பெயர்களை ரயில் நிலையங்களின் பெயர்களுக்கு முன்போ, பின்போ பொறிக்க வகை செய்யப்பட்டுள்ளது.   இது விளம்பரத்திற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறதே தவிர  ரயில் நிலையத்தின் பெயரை மாற்றும் நோக்கம் கொண்டதல்ல.

இந்த வகையில், கொல்கத்தா மெட்ரோ திட்டத்தில் 11 ரயில் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த ரயில் நிலையத்திற்கும் இந்த அனுமதி வழங்கப்படவில்லை.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.   ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு

காவல்துறை, பொது ஒழுங்கு ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தில் 7-வது அட்டவணையின் கீழ், மாநிலங்களின் கீழ் வருகிறது. அதனால் சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், குற்றச்செயல்கள் குறித்த புலன்விசாரணை, பதிவு செய்தல், கைது நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாகும். 

ரயில்வே காவல்துறை போன்ற சட்ட அமலாக்க முகமைகளின் வழியாக  பாதுகாப்பை ரயில்வே பராமரித்து வருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரயில்களில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் பயணிகளுக்கான பாதுகாப்புத் தொடர்பான உதவி எண் 139, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.  பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில், ஆண் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் ரயில்வே, பயணிகளுடன் தொடர்பில் உள்ளது. குற்றச்செயல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அடிக்கடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 5,882 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அடிப்படை மருத்துவ வசதிகளும் சில  ரயில்களில் செய்யப்பட்டு பயணிகளுக்கு உதவி வருகிறது.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...