முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சதுரங்க நடனக் காணொளிக் காட்சி வடிவமைத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை  மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தில் நேற்று ஜூலை 28-ஆம் தேதி துவங்கியது.


செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழ்நாடு முழுவதும் சில நாட்களாக, சுவர் விளம்பரங்கள், விளையாட்டுப் போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் என பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டதன் ஒரு பகுதியாக, செஸ் போட்டியை பிரபலப்படுத்த புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தினர் சில தினங்களுக்கு முன் எட்டு மணி நேரம் தொடர் மராத்தான் ஓட்டம் மற்றும் நடனக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றதுடன் , மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சதுரங்கக் காய்களுக்குப் பதிலாக, நடனக் கலைஞர்களைக் கொண்டு சதுரங்க நடனக் காணொளி உருவாக்கப்பட்டிருந்தது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சதுரங்க நடனக்  காணொளிக் காட்சி


பண்டைய காலத்துப் போர் முறையை நினைவு கூறும் வகையில்  காட்சிப்படுத்தப்பட்டன. வழக்கமான கருப்பு, வெள்ளைக் கட்டங்களில் உள்ள காயின்களுக்குப் பதிலாக நடனக் கலைஞர்கள் இடம் பெற்றனர். கருப்பு, வெள்ளை ராணிக்கள் ஆக்ரோஷமாக வால் வீசுதல், சிப்பாய்கள் சிலம்பு சுற்றி மோதிக் கொள்வது, மல்யுத்த வீரர்களின் போர்க் காட்சிகள் என நடனக் கலைஞர்களைக் கொண்டு தத்ரூபமாக  பின்னணி இசையுடன் பகைவரைக் காய் நகர்த்தி வீழ்த்தும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இது 

பரத நாட்டியத்தின்  மீது ஆர்வம் கொண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரான கவிதா ராமு, 2020-ஆம் ஆண்டு சீன அதிபர் ஜின் பிங் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பில், பிரமாண்டமான பரத நாட்டியத்தை ஏற்பாடு செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.  தற்போது அவரின் எண்ணத்தில், தோன்றிய இந்த சதுரங்க நடனக் காணொளி பலரின் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

https://twitter.com/CMOTamilnadu/status/1552284683081490432?t=JcBTYUpRRKrkKraAHU18yw&s=08

மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  செய்தியாளர் மத்தியில் பேசும் போது,

"மாவட்டம் சார்பில் தனித்துவமாக ஏதாவது செய்யணுங்கிற யோசனை ஆரம்பத்துலிருந்தே இருந்துச்சு. செஸ் காயின்ஸ்ல ராஜா, ராணி, சிப்பாய் எல்லாம் ஒரு கேரக்டர் தான். வழக்கமா காயின்களை வச்சி வீடியோ பண்றதுக்கு பதிலா, இந்த முறை கலைஞர்களை ஈடுபடுத்தி போர் வடிவில் வீடியோ வெளியிட்டால், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கலாம்னு தோணுச்சு.

பரதநாட்டியம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, மல்யுத்தம், பொய்கால்குதிரைன்னு மொத்தம் 38 கலைஞர்களை இதில் பயன்படுத்தியிருக்கிறோம். தென்றல் பிரசாத் தான் என்னுடைய நாட்டிய அரங்கேற்றத்துக்கு எல்லாம், மியூசிக் பண்ணிக் கொடுப்பாரு. அவர் தான் இந்த வீடியோவிற்கும் மியூசிக் பண்ணிக் கொடுத்தாரு. நானே எதிர்பார்க்கலை, ரொம்ப இசையோட, காட்சியும் ரொம்ப நல்லா வந்திருக்கு. பலரும் கூப்பிட்டுப் பாராட்டுறாங்க. தமிழ்நாடு முதல்வர் வீடியோவைப் பாராட்டி பதிவிட்டிருக்காங்க. இந்த வகையில் கலைஞர்களும், கலைகளும் மக்கள் மத்தியில் சென்று சேர்வது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்றார். ஆட்சித் தலைவர் கலை நயம் மிக்கவர் நாமும் பாராட்டுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...