முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய மொழித் தொழில்நுட்பங்களை கட்டமைப்பதற்கான ஐஐடி பயிலரங்கு

இந்திய மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஐஐடி மெட்ராஸ் 'ஏஐ4பாரத் நீலேகனி மைய'த்தை தொடங்கியுள்ளது

இந்திய மொழித் தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்தி சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், 'ஏஐ4பாரத் நீலேகனி மைய'த்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) தொடங்கியுள்ளது. ரோஹினி மற்றும் நந்தன் நீலேகனி ஆகியோர் நீலேகனி தொண்டு நிறுவனம் மூலம் இம்மையத்திற்கு தாராள நிதியுதவியாக ரூ.36 கோடி வழங்கியுள்ளனர்.

இந்திய மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதன் மூலம் பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் புதிய மையம் செயல்படும். ஐஐடி வளாகத்தில் இன்று (28 ஜூலை 2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு. நந்தன் நீலேகனி அவர்கள் இதனைத் திறந்து வைத்தார். தொடக்க நிகழ்வாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் பங்கேற்ற பயிலரங்கில் இந்திய மொழித் தொழில்நுட்பங்களை கட்டமைப்பதற்கான வளங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய 'ஓபன் சோர்ஸ்' மொழியைக் கட்டமைக்கும் ஐஐடி மெட்ராஸ்-ன் முன்முயற்சியாகவே ஏஐ4பாரத் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, டாக்டர் மிதேஷ் கப்ரா, டாக்டர் பிரத்யுஷ் குமார், டாக்டர் அனூப் குஞ்சுக்குட்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்திய மொழித் தொழில்நுட்பத்திற்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். இயந்திர மொழிபெயர்ப்பு (Machine Translation), தானியங்கிப் பேச்சு அறிதல் (Speech Recognition) போன்றவற்றுக்கான அதிநவீன மாதிரிகளும் இதில் அடங்கும்.

மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு. நந்தன் நீலேகனி, "கூட்டு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குடிமக்களுக்கான அனைத்து சேவைகளும், தகவல்களும் அவரவர் தாய்மொழியில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 'டிஜிட்டல் இந்தியா பாஷினி மிஷன்' தொடங்கப்பட்டு உள்ளது. இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவுப் பணியில் விரைந்து செயல்பட்டு பாஷினி மிஷன் இலக்கை எட்டும் வகையில் ஏஐ4பாரத் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கும்" எனக் குறிப்பிட்டார்.

'ஏஐ4பாரத் நீலேகனி மைய'த்தை உருவாக்கிய குழுவினரை வாழ்த்திப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "இந்திய மொழிக்கான செயற்கை நுண்ணறிவுப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த்தாகும். இதில் ஐஐடி மெட்ராஸ் தலைமை வகித்துச் செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏஐ4பாரத் மையத்தின் அதிநவீன ஆராய்ச்சிகள் உலகளவில் பயன்பாட்டிற்கு வரும் நாளை எதிர்பார்க்கிறேன்" என்றார்.

நீலேகனி மையத்தின் பணிகள் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் மிதேஷ் எம்.கப்ரா கூறியதாவது: "வளமான பன்முகத்தன்மை கொண்ட மொழிகளைக் கொண்ட இந்தியாவில், விரிவடைந்து வரும் டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப சாமானிய மக்கள் பயனடையும் வகையில் மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். மொழித் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ஆங்கிலமும், மேலும் சில மொழிகளும் கணிசமான அளவில் முன்னேறியுள்ள நிலையில், இந்திய மொழிகள் பின்தங்கி உள்ளன. இந்த இடைவெளியைக் குறைப்பதுதான் இந்த மையத்தின் நோக்கமாகும்."

இந்த மையம் உருவாக்கியுள்ள பல்வேறு அதிநவீன 'ஓபன் சோர்ஸ்' வளங்கள் எவரும் பயன்படுத்தக் கூடியவையாகும். இதன் மாதிரிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை பின்வரும் இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.(https://ai4bharat.iitm.ac.in/).

இம்மையம் குறித்து விரிவாகப் பேசிய ஐஐடி மெட்ராஸ், மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் மற்றும் பகுதிநேர ஆசிரியரான ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரத்யுஷ்குமார், "கல்வித்துறை, தொழில்துறை மற்றும் பொது நலனுக்காகப் பணியாற்றும் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து பணியாற்றும் இடமாக இந்த மையம் அமைந்துள்ளது. அதிநவீன செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, திறந்த தரவுத் தொகுப்புகளைக் கொண்ட உள்கட்டமைப்பு, மக்களுக்கான பயன்பாட்டு மென்பொருள் எனப் பரந்த அடிப்படையில் பங்களிப்பை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மையத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சியாளர் டாக்டர் அனூப் குஞ்சுக்குட்டன் பேசும்போது, "வெவ்வேறு இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்க மிகுந்த பொருட்செலவு ஏற்படுவதுடன் பெரிய அளவிலான தரவுத் தொகுப்புகள் (datasets) மற்றும் கணினி சக்தி (compute power) போன்றவையும் தேவைப்படும். இந்த சூழலில், செயற்கை நுண்ணறிவு 'ஓபன் சோர்ஸ்'களை கட்டமைக்க ஆதரவை நல்கிய பல்வேறு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

இ.கே.ஸ்டெப் பவுண்டேஷனின் தலைமை செயற்கை நுண்ணறிவு நிபுணரும், மையத்தின் வழிகாட்டியுமான டாக்டர் விவேக்ராகவன் கூறியதாவது: "சமூகத்திற்கு பரந்த அளவில் பயனளிக்கும் வகையில் அடித்தளப் பணிகளைச் செய்வதில் இந்த மையம் கவனம் செலுத்தும். இங்கு உருவாக்கப்படும் தரவுத் தொகுப்புகள், கருவிகள், முன்பயிற்சி மாதிரிகள் போன்றவற்றை இந்திய மொழித் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் தொடக்க நிறுவனங்கள், இதர தொழிலகங்கள் பயன்படுத்திக் கொள்ளும் என நம்புகிறோம். இந்திய மொழிகளுக்கு இன்னும் ஏராளமான பணிகளை ஆற்றும் சுற்றுச்சூழலை உற்சாகப்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...