முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இசைஞானி இளையராஜா மற்றும் பிடி உஷா உள்ளிட்டவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார்

நாடாளுமன்ற மாநிலங்களவையின் 12 உறுப்பினர்களை நியமன உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர் நேரடி நியமனம்.



கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவைகள் துறையில் சிறப்பாக  விழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் உறுப்பினராக நியமனப்  பதவியை வழங்கி மத்திய அரசு கௌரவிக்கிறது.


உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்ளிட்ட ஐவர் முன்பே நியமன உறுப்பினர்கள்களாக உள்ளனர்.


தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இசைஞானி இளையராஜாவை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.


இசைத்துறையில் அவர் செய்த சாதனைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் நிலையில் இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.


இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி வழங்கியதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.79 வயதாகும் இளையராஜா இசைத்துறையில் வழங்கி வரும் தொடர் பங்களிப்புக்காக இதுவரை ஐந்து முறை தேசிய விருது பெற்றவர். சாகர சங்கமம், ருத்ர வீணா என இரு தெலுங்கு திரைப்படத்துக்கும், சிந்து பைரவி  தமிழ் திரைப்படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். பழசிராஜா மற்றும் தாரை தப்பட்டை படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும்,

2018 ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது  பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'படைப்பு மேதை இளையராஜா ஜி பல்வேறு தலைமுறைகளாக மக்களை கவர்ந்தவர். அவரது பாடல்கள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து சாதித்திருக்கும் அவரது வாழ்க்கை பயணம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. அவர் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று புகழாரம் சூட்டி இருந்தார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திரைத்துறையில் பல்வேறு அமைப்புகள் பாராட்டியுள்ளனர்.   ஒரே தந்தைக்கும் இருவேறு தாய்க்கும் மகனாகப் பிறந்த பாவலர் வரதராஜன் தம்பி ஆரம்ப கம்யூனிஸ்ட் பன்னைபபுரம் கரியமனம்பட்டி கங்கானி மகன் அடித்தள மக்களின் இராகதேவன்   "ராஜாவுக்கு ராஜா நான்டா

எனக்கு மந்திரிங்க யாரும் இல்லை 

அடுத்தவனைக் கெடுத்ததில்லை

வயித்துல தான் அடிச்சதில்லலை

உழைப்பு நம்பி பொழச்சிருக்கிறேன்

நான் உண்மையாக ஊருக்குள்ள"         மக்கள் மனதில் பாடல்கள் மூலம் வென்ற இளையராஜா மற்றும் ஓடியதால் வென்ற பிடி உஷா. இருவரும் மக்கள் அறிந்த முகம் இளையராஜாவின் உயரம் அவர் மக்கள் மனதில் வீற்றிருக்கும் சிம்மாசனம். இவை எல்லாம் அவரை கொச்சை படுத்தி விமர்சனம், நக்கல் நையாண்டி செய்பவர்கள் எந்த அளவுக்கு அதல பாதாள இடத்தில் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து விடும். 

பரிதாபம் மட்டுமே மிஞ்சுகிறது. 

இந்த கௌரவம் அவருக்கு போதாது என்று சொல்பவர்கள் இது வரை எந்த அரசும் அவரை கண்டு கொண்டது கூட இல்லை என்கிற அடிப்படை நியாயத்தை மறந்தும் சொல்வது இல்லை. ஒரு தமிழனாக நல்ல கலைஞனான இசைஞானிக்கு  நமது பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வாழ்த்துக்கள்     


 மேலும் கேரளாவில் கோழிக்கோட்டின் வீராங்கனை பி.டி.உஷா 13 வயதில் தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்று 100 மீட்டத்தில் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தவர். ஆசியப்போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை வென்றவர் பி.டி.உஷா, மத்திய அரசிடன் அர்ஜுனா விருதையும், பத்மஸ்ரீ விருதையும், சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருதையும், ஆசிய விருதையும், உலகக்கோப்பையை, சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் மூலம் சிறந்த தடகள விளையாட்டு விராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருதுகள் பெற்றுள்ளார் பி.டி. உஷா.     

 மேலும்            80 வயதில் விஜயயேந்திர பிரசாத் ஆந்திரப் பிரதேசம் கொவ்வூரில் பிறந்தவர். தெலுங்கு, தமிழ், ஹிந்தி திரையுலகில் பணியாற்றியவர், இந்தியாவின் தலை சிறந்த திரைக்கதை ஆசிரியராவார். அவரது மகன் தான் ராஜமவுலி அவர் இயக்கிய மாவீரன், நான் ஈ, பாகுபலி முதல் பாகம், பாகுபலி 2 ஆம் பாகம், RRR என ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்த அனைத்து திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதியவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் தான். நந்தி விருது, பிலிம்பேர் விருது, சோனி கில்டு விருதையும் பெற்றுள்ளார்.   

  மற்றும்  கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலாவின் தர்மாதிகாரியாக கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொறுப்பு வகித்து வருகிறார். கலை மற்றும் இலக்கிய புரவலரான இவர், மஞ்சுவனி என்ற மாத இதழையும் வெளியிடுகிறார். இயற்கை மருத்துவம், யோகா, அறநெறிக் கல்வியை பரப்பும் வகையில் 400 பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், முப்பதாயிரம் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் பயிற்சியளிக்கிறார். 10000 க்கும் அதிகமான இலவசத் திருமனங்களை நடத்தி வருகிறார், கிராம வளர்ச்சி, ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காகவும் உதவுகிறார். பத்ம பூஷன், பத்ம விபூஷன், இராஜரிஷி, கர்நாடக ரத்னா, இந்திய வர்த்தக சம்மேளன விருது போன்றவற்றை இவர் பெற்றுள்ளார்.                                  புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்து
பல்வேறு பிரிவுகளில் இருந்து மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள பிரமுகர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தடகள வீராங்கனை பி.டி. உஷா, இசையமைப்பாளர் இளையராஜா, கொடையாளரும், சமூக சேவகருமான திரு வீரேந்திர ஹெக்டே, திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் திரு வி. விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“போற்றுதலுக்குரிய பி.டி. உஷா அவர்கள் ஒவ்வொரு இந்தியரின் ஊக்க சக்தியாக உள்ளார். விளையாட்டுத் துறையில் அவரது சாதனைகள் அனைவராலும் அறியப்பட்ட போதும், கடந்த பல ஆண்டுகளாக வளர்ந்துவரும் தடகள வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் செயல்படுவதும் சம அளவு பாராட்டுக்குரிய விஷயம். மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு அவருக்கு வாழ்த்துகள். @PTUshaOfficial”

“இளையராஜா @ilaiyaraaja அவர்களின் தலைசிறந்த படைப்பாற்றல், பல தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அவரது படைப்புகள் பல்வேறு உணர்ச்சிகளை மிக அழகாக பிரதிபலிக்கின்றன. மிகவும் சாதாரண பின்னணியைக் கொண்ட அவர், இத்தகைய சாதனை புரியும் அளவிற்கு வளர்ந்திருப்பது, அவரது வாழ்க்கை பயணத்தை எழுச்சிமிகுந்ததாக மாற்றியுள்ளது. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”

“தலைசிறந்த சமூக சேவைகளை மேற்கொள்வதில் திரு வீரேந்திர ஹெக்டே அவர்கள் முன்னிலை வகிக்கிறார். தர்மஸ்தலா ஆலயத்தில் வணங்குவதற்கும், கல்வி சுகாதாரம் மற்றும் கலாச்சாரத் துறையில் அவர் அளித்து வரும் போற்றத்தக்க பணியைக் காண்பதற்குமான வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவர் நிச்சயம் மேம்படுத்துவார்.”

“திரு வி. விஜயேந்திர பிரசாத் அவர்கள் பல தசாப்தங்களாக படைப்பாற்றலில் ஈடுபட்டு வருகின்றார். அவரது படைப்புகள் இந்தியாவின் ஒளிமயமான கலாச்சாரத்தை எடுத்துரைப்பதுடன் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்றுள்ளன. மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு அவருக்கு வாழ்த்துகள்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த