முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஷெபி கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் மோசடியாக பதிவு செய்ய உத்தரவு போட்டு ஊழல் செய்த அதிகாரி

உச்ச நீதிமன்றத்தால் விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்ட நிலங்களை மோசடியாகப் பதிவு செய்துகொள்ள


எழுத்துப்பூர்வமாக அனுமதித்த கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து வழக்குப் போட்டு விசாரிக்காமல் சார் பதிவாளர்களை ஒருமையில் திட்டுவதால் என்ன பயன் என்று அமைச்சர் மூர்த்தி அவர்களை மக்கள் கேட்கும் நிலையில் 

உங்கள் நேர்மையான சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து நிரூபிக்க வேண்டிய நிலையில் தற்போது பூதாகரமாக இந்த ஊழல் வெளிவந்த நிலையில் பதிவுத்துறை  அதிகாரிகள் மத்தியில் கலக்கம் தமிழ்நாட்டில் செபி கட்டுப்பாட்டிலுள்ள 

PACL நிலங்களைப் பத்திர பதிவு செய்த சார் பதிவாளர்கள் பணியிடை நீக்கம்     தமிழக அரசின் கணக்கில் 7000 ஏக்கர் நிலங்கள் மோசடி ஆவணங்கள் வைத்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் துணையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழக்கு கூட பதிவில்லை. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 9 நபர்களைத் தவிர மற்ற மோசடிப் பேர்வழிகள் அனைவரும் தொடர்ந்து


பத்திரப்பதிவுத்துறையிலிருக்கிறார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட 7000 ஏக்கர் நிலங்கள் மோசடி பத்திரங்கள் மூலம் பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி IAS அறிக்கை அளித்துள்ளதில் கிட்டத்தட்ட 2000 ஏக்கர் நிலம் திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த மோசடி பத்திரப்பதிவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத கவிதா ராணி  ஜூலை மாதம் 22 ஆம் தேதி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களின் பத்திரப்பதிவுகளை கண்காணிக்க கூடிய உயர் பதவியில் நியமிக்கப்படுகிறார். 

இந்த மோசடி தமிழகத்தில் நடந்துள்ளது. ஆனால் மோசடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை செயலாளர், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அவர்கள் மேலும் பல மோசடிகள் செய்ய ஊக்குவிக்கிறார் செய்யும் அனைத்து செயல்களையும் முதல்வர் ஆலோசனைப்படி செய்யும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி தான் PACL மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வு வழங்குகிறாரா? என்ற வினா எழுகிறது 

தமிழகத்தில் இந்த மோசடிகள் பற்றி பேச தைரியம் உள்ள  அரசியல் கட்சி ஒன்று கூட இல்லை?

இந்த மோசடி பத்திரப்பதிவில் 63 பதிவு அலுவலர்களுக்கு தொடர்பு. ஆனால் இது வரை 9 பேர் மட்டுமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். Addl IG சீனிவாசன் PACL நிலங்களை பத்திரப்பதிவு செய்யலாம் என்று வெளிப்படையாகவே உதவி இருக்கிறார். அவர் மீதான நடவடிக்கையில்லை. அவர் மீது FIR இதுவரை பதியப்படவில்லை. ஒருவர் கூட இது வரை கைது செய்யப்படவுமில்லை. இதெல்லாம் எப்பொழுது நடக்கும் என்று ஜோதி நிர்மலாசாமி IAS அறிக்கை அளிப்பாரா? என அமைச்சர் மூர்த்தி பதில் சொல்ல வேண்டிய நிலை 

நாள் கடத்தாமல் திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்குமா? இல்லை இந்த மோசடிப் பேர்வழிகளை வைத்தே பத்திரப்பதிவுத்துறையில்  தொடர்ந்து மோசடி செய்யுமா? எனவும் வினா எழுகிறது.

ஆயிரம் மக்களை இந்தியா முழுவதும் ஏமாற்றிய PACL நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, உச்சநீதிமன்ற நீதிபதி LODHA கமிட்டியால்  விற்பதற்கு தடை செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் நிலத்தை விற்பதற்கு துணையாக செயல்பட்டு வசமாக சிக்கி இருக்கிறார் கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசன். ஆனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் செயலர் ஜோதி நிர்மலாசாமி IAS, DVAC விசாரிச்சு முடிச்சு அறிக்கை அளிக்கும் வரை ஒன்றும் செய்ய மாட்டார்களாம்.  அந்த உயர் பதவியில் உட்கார்ந்து சம்பளம் வாங்குவது தான் நமது வினாவின் மையம் மிகவும் இந்த துறைக்கு அமைச்சர் மூர்த்தி இருக்கிறார்.லோதா கமிட்டி செபி வழிகாட்டுதலின் படி பிஏசிஎல் ஆவணப் பதிவு செய்யும்போது நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு, ஒதுக்கப்பட்டுள்ளது (ஆம்) என்று பதிலளித்தவர்களுக்கான தொகையை சிபி வங்கிக் கணக்கில் செலுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது. தற்போதைக்கு இதனை திருத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை.

மக்களுக்கு சந்தோஷமான செய்தியை அளித்த செபி


அதாவது பிஏசிஎல் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சிபி ஒரு இணையதளத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. அந்த இணையதளத்தில் ஆரம்ப கட்டத்தில் மக்களுக்கு சரியான தகவல் கிடைக்காததால், நிறைய குழப்பங்கள் ஏற்பட்டது.

முதலில் ஆவணங்களை கலர் ஜெராக்ஸ் அனுப்புங்கள் என்றனர், பின்பு வெள்ளை கருப்பு போன்று அனுப்ப உத்தரவிட்டனர். இதனால் மக்கள் குழப்பமடைந்தனர். எந்த விதத்தில் அப்லோட் செய்ய வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாமல் இருந்தது.

இது போன்ற சூழலில், பதிவு செய்யும்போது ஒரு சில தவறுகள் நடக்க நேரிட்டது, அதில் முக்கியமானது நிலம் ஒதுக்கப்பட்டதா, இல்லையா என்பது. பொதுவாக பணம் செலுத்திய ஆவணத்தில் பார்க்கும்போது எந்த ஒரு வாடிக்கையாளரின் ஆவணத்திலும் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றே குறிப்பிடப் பட்டிருக்கும்.

ஆனால் உண்மை என்னவென்றால் அது நிறுவனத்தின் ஒரு வகையான உத்தரவாதம் மட்டுமே. ஆனால் உண்மையில் நிலம் ஒதுக்கி இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு அதற்கென்று தனி ஆவணம் ஒன்று பிஏசிஎல் நிறுவனம் இருந்து கொடுக்கப்படும்.

ஆனால் அந்த ஆவணம் நூற்றில் பத்து நபர்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கும். அந்த பத்து நபர்கள் மட்டுமே நில ஒதுக்கீடு என்ற இடத்தில் ஒதுக்கப்பட்டது (ஆம்) என்று கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் நிறைய நபர்கள் பிஏசிஎல் ஆவணத்தில் நில (அளவு) கொடுக்கப்பட்டதை பார்த்து, தவறுதலாக புரிந்து கொண்டு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கொடுத்துவிட்டனர். இதன் காரணமாக நிலம் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு எவ்வாறு நாம் பணம் கொடுப்பது என்பது பற்றிய விஷயங்களில் காரணமாக சிபி தற்போது அவர்களின் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வில்லை.

இதனால் சிபி தற்போது நிறைய நபர்களுக்கு வங்கிக் கணக்கில்பணம் வரவு வைக்க முடியாத நிலை இருக்கிறது. இதில் மக்கள் தவறு என்றும் சொல்ல முடியாது. நிறைய நெட் சென்டர்களிலும் இந்த தவறுகள் நடந்தது.

இதற்கெல்லாம் சரியான காரணம் தேடுவதை விட, தற்போது இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர உபாயம் தேடுவதே சரியானதாக இருக்கும். தற்போது 7,000 வரை உள்ளவர்களுக்கு திருத்துவதற்கான வாய்ப்பு சிபி வழங்குகிறது.அதுவும் அக்டோம்பர் 31 வரை என்று தெரிவித்திருக்கிறது

இருப்பினும் இந்த வாய்ப்பானது வங்கிக் கணக்கு எண், பெயர் மாற்றம் போன்ற விஷயங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் நில ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட விஷயத்தை திருத்தம் வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. ஆகையால் இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களை குழப்பமடைய தேவையில்லை.

இதுவரைக்கும் இதுபோன்ற விஷயங்களில் சிபி இடம் புகார் அளித்து மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான் செபியிடம் புகார் அளிப்பது மட்டுமே.

ஏனென்றால் இதுபோன்ற தவறுதலாக நில ஒதுக்கீடு உள்ளது என்று குறிப்பிட்டது 7000 வரை இருப்பவர்கள் மட்டும் கிடையாது, ஒட்டுமொத்த பாலிசிதாரர்கள் அனைத்து பேரிலும் கிட்டத்தட்ட 10 லிருந்து 15 சதவீதம் நபர்கள் இதுபோன்ற தவறுகளை செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

அப்படி பார்க்கப்போனால் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணம் அதிகமாகும் போது, அதாவது தற்போது பத்தாயிரம் வரை கொடுக்கப்படும் இந்த பணமானது வருங்காலத்தில் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் வறை கொடுக்க நேரிட்டாலும், அப்போதும் தவறுதலாக பதிவு செய்தவர்கள் காணப்படுவர். அவர்களுக்கும் திருத்துவதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.

PACL: 8 உரிமையாளர் கொண்ட நிறுவனம் மொத்த சொத்துக்களையும் வாங்க தயார்

இதில் இருக்கும் ஒரே வருத்தம் என்னவென்றால் காலதாமதம் மட்டுமே. குறுகிய காலத்தில் பணம் மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க படலாம். ஆனால் இதுபோன்ற தவறுகளால் அந்த கால அவகாசம் நீடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே தற்போது வரை நிலம் உள்ளது என்று தவறு இழைத்தஅவர்களுக்கான திருத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து வடமாநிலத்தில் சிபியின் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த முடிவு எடுத்திருக்கிறார்.

விரைவில் சிபி இதற்கு ஒரு நல்ல உபாயம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு இணையதளத்தில் ஏதேனும் மாற்றம் இருப்பின் நிச்சயமாக மக்களுக்கு உதவியாக அமையும். உங்களின் மேலான கருத்துக்களை சிபியிடம் இடம் மற்றும் நோடல் ஆபீஸர் இடம் தெரிவியுங்கள்

 7000 வரை உள்ளவர்கள் தவறை திருத்த முடியவில்லை அது ஒரு பக்கம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...