முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கௌண்டர் லாபி அரசியலால் கடுப்பான டெல்லி கையறு நிலையில் ஒற்றைத் தலைத் தலைமை

கௌண்டர் லாபி. அரசியலால் கடுப்பான டெல்லி கையறு நிலையில் ஒற்றைத் தலைத் தலைமை.


எடப்பாடி கே.பழனிசாமி நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ளவே சென்று இருந்த நிலையில். மேலும், புதிய குடியரசுத் தலைவராகத் தேர்வான திருமதி திரௌபதி முர்முவை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

ஜூலை மாதம் 25 ஆம் தேதி திங்கள்கிழமை திருமதி திரௌபதி முர்மு நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும் நிலையில், அதில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் டெல்லி சென்ற நேரத்தில் இங்குப் பலவிதமான நெருக்கடியான சம்பவங்கள் நடந்து வருகிறது. முதலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எடப்பாடி கே.பழனிசாமியின் செயல்பாடுகளுக்கெதிராக அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஓ.ப.ரவீந்திரநாத் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரேயில்லை என நாடாளுமன்ற மக்களவை சபாநயருக்கு எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பு கடிதமெழுதிய நிலையில், கட்சியின் ஒரே ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரைச் செயல்படவிடாமல் தடுப்பதாக வி.கே.சசிகலா நடராஜன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அடுத்ததாக  தடை செய்த குட்ஹா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. அதோடு அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதமும் ஒரு காரணமாக பார்க்கப் படுகிறது. 

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் அதிர்ச்சியளிப்பதாக இருந்த நிலையில் தனது டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துவிட்டு, சென்னை திரும்பி வர உள்ளதாகத் தகவல். குடியரசுத் தலைவர் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், திட்டத்தை மாற்ற நான்காவது சம்பவமாக அமைந்ததாகும் பார்க்கப்படுவது  


அரசு ஒப்பந்ததாரர்களிடம் வருமானவரி சோதனையில் ரூபாய் 165 கோடி பணமும் 14 கிலோ தங்கமும் ரூபாய் 150 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியது கைபற்றப்பட்டதாகத் தகவல் வரவே அவரை மேலும் அதிர்ச்சியடையச் செய்தது அதுகுறித்த முழுமையான விபரம் வருமாறு:- மதுரை பால்ராஜ் ஜெயக்குமாருக்குச் சொந்தமான ஜெயபாரத் மற்றும் கிளாட்வே நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறைச் சோதனையில் ரூபாய்.165 கோடி ரொக்கமாகவும், 14 கிலோ தங்கம் மற்றும் ரூபாய் 150 கோடி மதிப்பிலான சில சொத்துக்களுக்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன இது முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மற்றும் முன்னால்  அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு நெருக்கமான  கான்டிராக்டர்களின் நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையாகும்  அதில் தான் ரூபாய் 165 கோடி பணமும், 14 கிலோ தங்கமும், ரூபாய் 235 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்து அவர்களளை மேலும் அதிர்ச்சியடையச் செய்த நிலையில் 





மேலும் ஐந்தாவதாக:

மதுரைக் கட்டுமான ஒப்பந்ததாரர் முருகவேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் தமிழ் நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் மகன் மிதுனுக்கு நெருக்கமானவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஒப்பந்தப்பணிகளை எடுத்துச் செய்தவர் மீதான வருவாய் வரி ஏய்ப்புப் புகாரில், ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் இவருக்குச் சொந்தமான மதுரை கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறிடங்களிலும், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா கோசுக்குறிச்சியிலுள்ள அலுவலகம், ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சின்னகரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி அண்ணாநகர் பகுதிகளிலும் சோதனைகள் நடந்தது வந்தது.


இதேபோலவே, அதிமுக முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமானவர் மதுரை அவனியாபுரத்தை  பால்சாமியின் மகன்கள் அழகர், முருகன், ஜெயக்குமார், சரவணன் மற்றும் பங்குதாரர் செந்தில்குமார்.  இவர்கள் ஜெயபாரத் என்ற கட்டுமான நிறுவனத்தையும், அதன் துணை நிறுவனங்களாக கிளாட்வே சிட்டி, அன்னை பாரத், கிளாட்வே கிரீன்சிட்டி ஆகிய கட்டுமான நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதாவது நிலங்கள் வாங்கி விற்பனைத் தொழிலும் செய்து வரும் இவர்களது அலுவலகங்கள், மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. மதுரையில் கோச்சடை, விரகனூர், திருப்புவனம் மணலூர் இங்கெல்லாம் விற்பனைக்கென வீடுகள் கட்டியும், மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் வீடுகள் கட்ட பல ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கிக் குவித்து வைத்திருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனைக்கு பிறகு, நேற்றைய தினம் பறிமுதலான தொகை, நகைகள், ஆவணங்கள் கணக்கிடப்பட்டன. இதில், ரூபாய் 165 கோடி ரொக்கமும், 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூபாய் 235 கோடி மதிப்பிலான சொத்துக்களின்  ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிய வந்துள்ளதால்.  மேலும் 

வருமானவரித்துறையினர் சோதனையில் முருகன் என்பவரது வீட்டில் ரூபாய் 75 கோடி ரொக்கமும், மூன்று கிலோ 200 கிராம் தங்கமும், ரூபாய் 93 கோடி மதிப்பிலான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதோடு செந்தில்குமார் என்பவர் வீட்டில் இரண்டு கிலோ 700 கிராம் தங்கமும், ரூபாய் 1 கோடியே 96 லட்சம் மதிப்பில் ஆவணங்களும், மேலும் சரவணகுமார் என்பவர் வீட்டில் மூன்றரை கிலோ தங்கமும், பணம், வைரம் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். அழகர் என்பவர் வீட்டில் ரூபாய் 90 கோடி ரொக்கம், ரூபாய் 130 கோடிக்கு சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜெயகுமாரின் கோச்சடை வீட்டில் நடைபெற்ற சோதனையில் நான்கு கிலோ தங்கமும், பணம், மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  மொத்தமாக ஜெயபாரத் குழும நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீட்டில் 14 கிலோ தங்கமும், ரூபாய் 165 கோடி ரொக்கமும் மற்றும் ரூபாய் 235 கோடிக்கான ஆவணங்களையும் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. தொடர் விசாரணைக்கு பிறகே முழுமையான கணக்கீடுகள் மற்றும் பினாமிகள் குறித்த விபரங்கள் தெரிய வருமென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு பக்கம் நடக்க மற்றொரு புறம் .குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி வி ரமணா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர தமிழ்நாடு அரசு சிபிஐ கேட்டிருந்த அனுமதியை. வழங்கியது.         கடந்த காலங்களில் அதிரடி காட்டிய சி.பி.ஐ குட்கா வியாபாரி மாதவ ராவ், கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்ட ஆறு பேரைகீ கைது செய்ததைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்தது. இதற்கிடையே, ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 27 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  தற்போது உள்ள நிலையில் முறைகேடு செய்த ஊழியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த பொறுப்பிலுள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.




இது தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு இஆப வெளியிட்டுள்ள அரசாணை விபரம்:                 அரசு ஊழியர்கள் முறைகேட்டிலீடுபட்டால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, ஏற்கனவே அரசு பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனால், பல நிகழ்வுகளில், அரசு ஊழியர்கள் மீதான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதில்லை.



ஆனால், அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளபோது, அதே முறைகேடு தொடர்பாக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கத் தடையில்லை என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, முறைகேடில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளதன்படி அரசு ஊழியர் செய்யும் முறைகேடு தொடர்பான குற்ற வழக்கும், துறை ரீதியான நடவடிக்கையும், ஒரே நேரத்தில் நடத்தப்படலாம். குற்ற வழக்கில் கூறப்படும் தீர்ப்பு, எந்த வகையிலும் துறை ரீதியான முடிவைப் பாதிக்காது. எனவே, தீர்ப்புக்காக காத்திருக்கத் தேவையில்லை.ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்போது, அனைத்து ஆவணங்களையும் ஊழல் தடுப்பு துறையினர் எடுத்துச் செல்வர். துறை ரீதியான நடவடிக்கைக்கு, அந்த அசல் ஆவணங்களின் உண்மை நகலை வாங்கி, நடவடிக்கையைத் தொடரலாம்.

ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆஜராகா விட்டாலோ, எழுத்துப்பூர்வமான அறிக்கை தராவிட்டாலோ, அரசு விதிகளுக்கு கீழ்படிய மறுத்தாலோ, 'எக்ஸ்பார்ட்டி' உத்தரவை, விசாரணை அதிகாரி பிறப்பிக்கலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஊழியரை 'டிஸ்மிஸ்' செய்வது போன்ற பெரிய முடிவை, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கலாம். குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அந்த ஊழியரை விசாரிக்க முடியாது என்று, எடுத்து கொள்ளக் கூடாது. நீதிமன்றத் தீர்ப்பு, துறை விசாரணை முடிவைப் பாதிக்காது.

முறைகேடு செய்த ஊழியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தப் பொறுப்பிலுள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்ற எச்சரிக்கை உத்தரவாகியுள்ளது இது . எடப்பாடி கே.பழனிச்சாமி தனது ஆட்சிக் காலத்தில் ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை காரணம் ஒரு ஊழல் கூட்டமே அவரால் கொழுத்து வளர்ந்த நிலையில் உப்புத் தின்றால் தண்ணீர் குடிப்பது போல தப்புச் செய்தவர்கள் தண்டனை பெறும் காலம் நெருங்கி வருகிறது.குட்ஹா வழக்கில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை செங்குன்றம் குட்ஹா விற்பனை செய்யும் கிடங்கில் 2018 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் நடத்தினய. இந்த சோதனையில் தடை செய்யப்பட்டுள்ள குட்ஹாவை சேர்த்து வைத்ததோடு இல்லாமல் பல கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும்  தெரியவந்தது. இந்தச் சோதனையின்போது ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில், முன்னாள் அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல்துறை டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாமூல் ஊழல் பணம் கொடுக்கப்பட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து விசாரிக்கும்படி வருமான வரித்துறை சிபிஐ அதிகாரிகளுக்குக் கடிதமெழுதியது.

அதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள், மற்றும் அலுவகலங்களில் சோதனை நடத்தினர். அப்போது அமைச்சராக இருந்த டாக்டர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட போதும் அரசியல் காரணங்களால் அவர் இதுவரை காப்பாற்றப்பட்டதாகவும் பேசப்பட்ட  நிலையில். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் ஜந்து பேர் மீது குற்றப்பத்திரிகையை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, மேலும் தொடர் விசாரணை நடத்தியதில் இதில் மேலும் பலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனால் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு, தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா(எ) வெங்கட்ரமணா, முன்னாள் காவல்துறை டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ், தற்போது மதுரையில் வணிக வரித்துறை இணை ஆணையராக உள்ள குறிஞ்சி செல்வம், வேலூர் வணிக வரித்துறை துணை வரி விதிப்பாளர் கணேசன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லட்சுமி நாராயணன், அதே துறையில் பணியாற்றும் முருகன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி ஆணையர் மன்னர் மன்னன், தற்போது காஞ்சிபுரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் சம்பத், சுகாதார கமிட்டியின் தலைவர் பழனி உள்ளிட்ட 11 நபர்கள் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் 

இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் சட்டக் கருத்துரை கேட்கப்பட்டது. அவர் அளித்த கருத்துரைகளின் அடிப்படையில், உள்துறைச் செயலாளர் பனீந்திரரெட்டி, இஆப தலைமைச் செயலாளர் இறையன்பு, இஆப  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனை படி  உத்தரவு வழங்கப்பட்டது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளித்த உத்தரவில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் அவர்கள் இருவருக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டது. மற்ற 9 பேருக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் மத்திய அரசின் அனுமதி வந்ததும், 11 பேர் மீதும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முன்னால் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கைதும் நடக்கலாம்.ஓ.பன்னீர் செல்வம் அணியிலிருந்து அதிமுகவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கே.பழனிசாமி பக்கம் சென்ற மாவட்டச் செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களை இன்று அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த அதிமுகவில் மாநகர மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஆர்பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராஜன் செல்லப்பா ஆகியோர் கூண்டோடு கே.பழனிச்சாமி பக்கம் சென்றனர்.பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 90 சதவீதம் பேரும் அவர்களுடன் கே.பழனிசாமி அணிக்கு சென்றனர். ஆனால், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மிக சிலரே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மதுரையில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் திமுகவுக்கு சென்றார். அதபோல், முன்னாள் சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவிற்கு சென்றார். முன்னாள் தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், கே.பழனிசாமி அணிக்கு சென்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த