அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 80 ரூபாயாக சரிந்துள்ளது.
இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள அன்றாட மக்கள் வாழ்விலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெருய பாதிப்பை ஏற்படுத்தும்.
எரிபொருள் விலையேற்றத்தால் இந்தியாவின் வருவாய் பற்றாக்குறை முன்பு எப்போதும் உள்ளதை விட உச்சம் கொண்டிருக்கும் நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப பெற்றதும், இந்திய ரூபாயின் மதிப்பு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலை குறைய வாய்ப்பில்லை என்பதால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் குறையுமென்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாய் மதிப்பின் சரிவு ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது. பணவீக்கம் அதிகரிப்பதைத் தடுக்க ரிசர்வ் வாங்கி ரெப்போ ரேட்-ஐ உயர்த்தும் என்பதால் வங்கிகளில் வீடு, வாகனக் கடன்களுக்கான மாதத் தவணை கணிசமாக அதிகரிக வாய்ப்புள்ளது.சுமார் 80 சதவீதம் பெட்ரோலியத்தை இறக்குமதி செய்தே சமாளிக்கும் நிலையில் உள்ள இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும். சமையல் எண்ணெய் போன்ற அன்றாட வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும். செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ், மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலைகளும அதிகரிக்கும் நிலை.
நீட் அறிமுகத்திற்கு பிறகு வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பது அதிகரித்து வரும் சூழலில் அது இனி அதிகம் செலவு பிடிக்கும் ஒன்றாக மாறும். நிலம் சார்ந்த ரியல் எஸ்டேட், வாகனத் தயாரிப்பு, மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதால் வேலையிழப்பு ஏழை எளிய மக்களை வாட்டக் கூடும் எனத் தெரிகிறது
கருத்துகள்