கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு செய்த விவசாயியிடம் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள தோப்பிருப்பைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 38), விவசாயி. இவர் தனது தந்தை தனக்கு தானசெட்டில்மெண்ட் மூலம் கொடுத்த நிலத்திற்கான வரி செலுத்தும் ஆவணம் பட்டாவிற்கு பெயரை மாற்றம் செய்ய, கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலரான பார்த்தசாரதி (வயது 40) எனீபவரை அணுகினார். அதற்கு அவர் தனக்கு லஞ்சமாக ரூ.85 ஆயிரம் கொடுத்தால் தான், பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க முடியுமெனக் கூறியதாக தெரிகிறது.
அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். அதற்கு பார்த்தசாரதி, இறுதியாக ரூபாய்.10 ஆயிரமாவது கொடுக்க வேண்டுமென்றும், இல்லையெனில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர முடியாது என்று கறாராகக் கூறி விட்ட நிலையில்.
ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பழகன், அதுபற்றி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர், கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை பணம் வாங்கிய கையுடன் பிடிக்கத் திட்டம் தீட்டினர். அதற்காக பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய புகார்தாரரின் ரூ.10 ஆயிரத்தை அரசு சாட்சி முன் அன்பழகனிடம் கொடுத்து அனுப்பினர்.
பணத்தை பெற்றுக்கொண்ட அன்பழகன், இலஞ்ச ஒழிப்பு துறையினர் கூறிய அறிவுரையின்படி கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அரசு தரப்பில் சாட்சியுடன் சென்றார். பின்னர் அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியிடம் ரூபாய் .10 ஆயிரத்தை கொடுத்த நிலையில் அதை பார்த்தசாரதி வாங்கியதும், அங்கு தனியிடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான டீம், அவரை பணம் வாங்கிய கையுடன் மயங்கிப் பிடித்தனர்.அதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிற நிலையில் கடலூர் விஜயலட்சுமி நகரில் உள்ள பார்த்தசாரதிக்குச் சொந்தமான வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்றனர். பின்னர் ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா என்றும், மேலும் வாங்கிய கூடுதல் லஞ்சப் பணம் ஏதும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைதான நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்
கருத்துகள்