முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

175 ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர்,குடியரசு தலைவர் மாளிகையில், குடியரசு தலைவரைச் சந்தித்த நிகழ்வு

ஐஏஎஸ் அதிகாரிகள் ஆர்வத்துடனும் தன்முனைப்புடனும் பணியாற்றுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டு இந்தியாவை மிகவும் வளமானதாகவும், வலிமையானதாகவும் மாற்றமுடியும்; குடியரசு தலைவர் முர்மு

பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் 2020 ஆம் ஆண்டின் 175 ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர், நேற்று குடியரசு தலைவர் மாளிகையில், குடியரசு தலைவர் திருமதி  திரௌபதி முர்முவை சந்தித்தனர்.



அதிகாரிகளிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், அரசு ஊழியர்கள் என்ற வகையில், அறிவு, விநியோகச் சங்கிலி, கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பல்வேறு துறைகளின் உலகளாவிய மையமாக இந்தியா உருவாவதில் அவர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றார். அதே சமயம், சமூகம் உள்ளடக்கிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா எடுத்துள்ள தலைமை நிலையை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

2047 ஆம் ஆண்டிற்குள், 2020 ஆம் ஆண்டு குழுவின் அதிகாரிகள் மிகவும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டிய குடியரசு தலைவர், ஆர்வத்துடனும் தன் முனைப்புடனும் பணியாற்றுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டு இந்தியா மிகவும் வளமானதாகவும், வலுவாகவும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறினார்.  2047 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அளவுருக்களுக்கு,  நவீன மற்றும் சேவை சார்ந்த மனநிலையுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். கர்மயோகி இயக்கம் நமது அரசு ஊழியர்களை அவர்களின் அணுகுமுறையில் மிகவும் நவீனமாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும், உணர்திறன் மிக்கவர்களாகவும் மாற்றுவதற்கான ஒரு முக்கிய முயற்சி என்று அவர் குறிப்பிட்டார்.



உட்கட்டமைப்பில் அபரிமிதமான வளர்ச்சியுடன், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வது இலகுவாகியுள்ளதாக குடியரசு தலைவர் தெரிவித்தார். அரசு ஊழியர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள கடைசி நபர் அல்லது மிகவும் பின்தங்கிய நபரை தொடர்பு கொண்டு அவரது வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார். எந்தவொரு பொதுநல முயற்சியும் அதன் பலன்களும் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் நமது சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களைச் சென்றடைந்தால் மட்டுமே உண்மையான வெற்றியைப் பெற முடியும் என்பதை அவர்  நினைவூட்டினார். இதுபோன்ற தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடைய அரசு ஊழியர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும், ஆதரவற்ற மக்கள் உதவிக்காக அவர்களை அணுகுவதில் சிரமப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுச் சேவையில் அர்ப்பணிப்பு, நலிந்த பிரிவினரிடம் அனுதாபம் மற்றும் இரக்கம், நேர்மை மற்றும் நன்னடத்தை, பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றின் உயர் தரத்தைப் பேணுவதன் மூலம் அரசு ஊழியர்கள் வழிநடத்தப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் கூறினார்.

மனித வளர்ச்சி குறியீடுகளின் அடிப்படையில் தங்கள் பிரதேசத்தை முதலாவதாக மாற்ற வேண்டும் என்ற பேரார்வத்துடன்  அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டுமென குடியரசு தலைவர் வலியுறுத்தினார். மேலும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் அவர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். அவர்கள் சேவை செய்யக் கடமைப்பட்ட மக்களிடம் உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். முழு உலகமும் ஒரு பெரிய குடும்பம் என்பது  சிறந்த இந்திய நெறிமுறையின் ஒரு பகுதி என்று கூறிய குடியரசு தலைவர், அகில இந்தியாவே எனது குடும்பம் என்பது  அகில இந்திய குடிமைப்பணி  அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நெறிமுறையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்