முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

175 ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர்,குடியரசு தலைவர் மாளிகையில், குடியரசு தலைவரைச் சந்தித்த நிகழ்வு

ஐஏஎஸ் அதிகாரிகள் ஆர்வத்துடனும் தன்முனைப்புடனும் பணியாற்றுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டு இந்தியாவை மிகவும் வளமானதாகவும், வலிமையானதாகவும் மாற்றமுடியும்; குடியரசு தலைவர் முர்மு

பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் 2020 ஆம் ஆண்டின் 175 ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர், நேற்று குடியரசு தலைவர் மாளிகையில், குடியரசு தலைவர் திருமதி  திரௌபதி முர்முவை சந்தித்தனர்.



அதிகாரிகளிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், அரசு ஊழியர்கள் என்ற வகையில், அறிவு, விநியோகச் சங்கிலி, கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பல்வேறு துறைகளின் உலகளாவிய மையமாக இந்தியா உருவாவதில் அவர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றார். அதே சமயம், சமூகம் உள்ளடக்கிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா எடுத்துள்ள தலைமை நிலையை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

2047 ஆம் ஆண்டிற்குள், 2020 ஆம் ஆண்டு குழுவின் அதிகாரிகள் மிகவும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டிய குடியரசு தலைவர், ஆர்வத்துடனும் தன் முனைப்புடனும் பணியாற்றுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டு இந்தியா மிகவும் வளமானதாகவும், வலுவாகவும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறினார்.  2047 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அளவுருக்களுக்கு,  நவீன மற்றும் சேவை சார்ந்த மனநிலையுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். கர்மயோகி இயக்கம் நமது அரசு ஊழியர்களை அவர்களின் அணுகுமுறையில் மிகவும் நவீனமாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும், உணர்திறன் மிக்கவர்களாகவும் மாற்றுவதற்கான ஒரு முக்கிய முயற்சி என்று அவர் குறிப்பிட்டார்.



உட்கட்டமைப்பில் அபரிமிதமான வளர்ச்சியுடன், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வது இலகுவாகியுள்ளதாக குடியரசு தலைவர் தெரிவித்தார். அரசு ஊழியர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள கடைசி நபர் அல்லது மிகவும் பின்தங்கிய நபரை தொடர்பு கொண்டு அவரது வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார். எந்தவொரு பொதுநல முயற்சியும் அதன் பலன்களும் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் நமது சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களைச் சென்றடைந்தால் மட்டுமே உண்மையான வெற்றியைப் பெற முடியும் என்பதை அவர்  நினைவூட்டினார். இதுபோன்ற தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடைய அரசு ஊழியர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும், ஆதரவற்ற மக்கள் உதவிக்காக அவர்களை அணுகுவதில் சிரமப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுச் சேவையில் அர்ப்பணிப்பு, நலிந்த பிரிவினரிடம் அனுதாபம் மற்றும் இரக்கம், நேர்மை மற்றும் நன்னடத்தை, பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றின் உயர் தரத்தைப் பேணுவதன் மூலம் அரசு ஊழியர்கள் வழிநடத்தப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் கூறினார்.

மனித வளர்ச்சி குறியீடுகளின் அடிப்படையில் தங்கள் பிரதேசத்தை முதலாவதாக மாற்ற வேண்டும் என்ற பேரார்வத்துடன்  அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டுமென குடியரசு தலைவர் வலியுறுத்தினார். மேலும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் அவர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். அவர்கள் சேவை செய்யக் கடமைப்பட்ட மக்களிடம் உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். முழு உலகமும் ஒரு பெரிய குடும்பம் என்பது  சிறந்த இந்திய நெறிமுறையின் ஒரு பகுதி என்று கூறிய குடியரசு தலைவர், அகில இந்தியாவே எனது குடும்பம் என்பது  அகில இந்திய குடிமைப்பணி  அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நெறிமுறையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...